Thursday, July 23, 2015

கேபிள் சங்கரின் பார்வையில் சினிமா வியாபாரம்

சங்கர் நாராயண் என்கிற கேபிள் சங்கர் எழுதிய
சினிமா வியாபாரம்  புத்தகத்தை சமீபத்தில் வாசித்தேன்.

எவரும் இந்த  புத்தகத்தை  பரிந்துரைக்காவிடிலும், இணையத்தில்
பலர் எழுதிய விமர்சனங்களின் அடிப்படையில் கடந்த மாதம்
இந்தியாவில் இருந்து தருவித்து வாசித்தேன். நான் வாங்கிய நேரம் பாருங்க 90 ரூபாய் இருந்த புத்தகம் இப்போ 125 ரூபாயாம்.   அடக் கடவுளே!

கேபிள் சங்கர் - இணையதள ஏரியாவில் அறிமுகம் தேவையில்லாதவர்.
பல சிறுகதைகள், கட்டுரைகள், திரை விமர்சனஙகள் வழியாக
பரிட்சமானவர்.  மேலும் 'தொட்டால் தொடரும்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்.

நவீன தமிழகத்தின் வரலாற்றை எழுதுவதேன்றால் சினிமாவை
தவிர்த்துவிட்டு எழுத இயலாது என்பது  நிதர்சனம். அந்தஅளவுக்கு
சினிமா நம்முடைய பிரிக்கமுடியாத ஒன்றாகிவிட்டது.

அப்படிப்பட்ட சினிமா எனும் கலைவடிவம் நடிப்பு, பாடல், நடனம், கதை, தொழில்நுட்பம் எனும் பல கோணஙகளை உடையது.  இந்த புத்தகத்தில் சினிமாவை அதன் வியாபரக் கோணத்தில் அனுகியிருக்கிறார் கேபிள் சங்கர்.

திரைத்துரையில் விநியோகஸ்தர்-சீரியல் ஆக்டர்-வசனகர்த்தா-திரைக்கதை ஆலோசகர் எனும் தனது அனுபவங்களின் மூலம்  எழுதியிருக்கிறார். புத்தக முன்னுரைக்காக அதிகம் மெனக்கெடாமல் ஆசிரியர் சுயஉரையுடன் முடித்துக் கொண்டுள்ளார்.

இது  'லைட் ரீடிங்' எனும் வகையைச் சார்ந்த புத்தகம். எளிய சரளமான நடை.  ஆங்கில வார்த்தைகளை அப்படியே பயன்படுத்தியதால் சாமானியர்கள் தலை சொறியத் தேவையில்லை.

ஒரு படம் தயாரிக்கப்பட்டபின் திரைக்கு வரும் வரை நடக்கும் பல விடயங்ககளை புத்தகம் விரிவாக விளக்குகிறது.

விவசாயத்தில் விவசாயிகளை விட பெரும்பாலும் இடைத்தரகர்கள் அதிகம் பயனடைவது போல, சினிமாவிலும் தயாரிப்பாளர்களை விட இடைத்தரகர்கள் அதிகம் லாபம் அடைவது எப்படி என்பதையும் விளக்குகிறார்.

இதேபோல், சினிமா வியாபாரத்தில் உள்ள பல அடுக்குகள் படிக்கும் வாசகர்களைக் கண்டிப்பாக வியப்பில் ஆழ்த்தும்.

ஹாலிவுட்சினிமாவையும் கூட ஆசிரியர் கொஞ்சம் தொட்டிருக்கிறார்.

சினிமா வியாபாரத்தைப் பற்றி எழுதிய ஆசிரியர் தமிழ் சினிமாவில் காலங்காலமாகப் புழக்கத்தில் இருக்கும் கருப்புப் பணம் பற்றி மூச்சு விடவில்லை.

ஹாலிவுட் தரவுகளை தரும் ஆசிரியர் துரதிருஷ்டவசமாகத்  தமிழ் சினிமா துறை பற்றி விரிவான மற்றும் ஆழமான தரவுகளையும் கொடுக்கவில்லை.

உதாரணமாக. தமிழ் சினிமாவின்  மொத்த வருடாந்த வருவாய் என்ன ? தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தில்  PERCENTAGE என்ன ? வருடாந்த கேளிக்கை வரி  வருவாய் என்ன ?  போன்ற நிறைய  'என்ன' க்கள்.

இது போலவே புள்ளி விவரங்கள் அட்டவணைப்படுத்தப்பட்டிருந்தால்  மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.

திரைப்படத் துறைக்குப்   புதியவர்கள் அல்லது  திரைத்துறை பற்றி அறிந்து கொள்ள ஆர்வமாக இருப்பவர்கள் வாசிக்க வேண்டிய புத்தகம் இது.


நுால்: சினிமா வியாபாரம்
பிரசுரிப்பவர்: மதி நிலையம்.
கிடைக்கும்: Discovery Book Palace

Sunday, July 5, 2015

கமலின் பாபநாசம் - விமர்சனம்

ஜூலை 4ல்   வானவேடிக்கை, அணிவகுப்புடன் அமெரிக்கா தனது சுதந்திர தினத்தை கொண்டாடியது. இந்த லாங் விக் என்ட் (long week end) என சொல்லப்படும் தொடர்சியான மூன்று நாள் விடுமுறையில் கமலின் பாபநாசம் படம் சென்று பார்த்தோம்.

நான் பெரும்பாலும் திரை விமர்சனஙகள் எழுதுவதில்லை என்பது
என்னுடைய பதிவுகளை தொடர்ந்து படித்து வருபவர்ர்களுக்கு தெரிந்து இருக்கும்.

எழுதாதற்கு காரணம் திரைப்படஙகள் அதிகம் பார்பதில்லை என்பது
மட்டுமல்ல, பார்க்கும் ஒன்றிரண்டும் திரையரங்குகளில் அல்ல
என்பதே உண்மை.  திரையரங்கத்துக்குச் சென்று அஙகே தொழில்நுட்பத்துடன் ரசிகர்கலுடன் பார்க்கும் படங்களை மட்டுமே ஒருவரால் முழுமையான விமர்சனத்தை தர இயலும் என்பது எனது கருத்து.

எந்த ஒரு வெளீக் குழப்பமின்றீ திறந்த மனதுடன் படம் பார்க்கும்
ரசிகர்கள் இன்றுஅரிதாகி இருக்கிறார்கள் என்பது உண்மை. Open Minded என்று ஆங்கிலத்தில் சொல்வது போல,

புதிதாக வரும் திரைபடத்தை பார்ப்பதற்க்கு முன்பே  சமூக வலைதலங்கள், தொலைகாட்சி,பத்திரிகைகள் என  எங்கு பார்த்தாலும் படத்தைப் பற்றீ பேசிப் பேசி  ரசிகனை ஒரு குழப்பதுடனே திரையரங்கத்துக்கு அனுப்புகிறார்கள். ரசிகர்களூம் எதோ ஒரு  எதிர்பார்ப்புடனேயே படம் பார்க்கச் செல்கிறார்கள்.

அப்படி செல்லும் ரசிகர்களீன் எதிர்பார்ப்பை எத்தனைப் படங்கள்  சரியாக பூர்த்தி செய்கின்றன என்பதை உங்களீன் முடிவிற்கு விட்டுவிடுகிறேன்.

நான் படத்தை பார்க்கும் வரை பாபநாசம் பற்றீ பேட்டிகள், அறீமுகஙகள், குறீப்புகள்  மற்றம் விமர்சனத்தையும் பார்க்கவில்லை.

கமல் மற்றும் கவுதமி நடிக்கும் இந்த படம் மலையாளத்தில் வெற்றி கதை என்பதைத் தவிர எந்த ஒரு முன் அறிமுகமும் இல்லை.

பாபநாசம்-   எதிர்பாராத விதமாக இக்கட்டில் சிக்கிய ஒரு குடும்பத்தின் கதை.
அந்த சிக்கிய குடும்பத்தை குடும்ப தலைவராக கமல் எப்படி
காப்பாற்றுகிறார் என்பதை அருமையான திரைக்கதையில் சொல்லியிருகிறார்
இயக்குனர் ஜீத்து ஜோசப்.

சுயம்புலிங்கமாக கமல். அவர் மனைவி மற்றும் இரு மகள்களிடம் பாசத்தை பொழிவதாகட்டும், இல்லை அப்பாவியாக  சினிமா பைத்தியமாக சுற்றுவதாகட்டும் கமலின் பாத்திரப்படைப்பு வாவ் !,

தன் கதைக்கு தேவையான படி கமலை மிக அருமையாக நடிக்க வைத்தது
இயக்குனரின் அபார திறமை. மலையாளத் திரைப்பட இயக்குநர் ஃபாசில் வரிசையில் இன்னொருவர் நமக்கு.

தொடக்கத்தில் கமல் மற்றும் அவரது குடும்பத்தின் அறிமுகம் என தொடரும் காட்சிகளில் சிறு தொய்வு தெரிகிறது. அடுத்தபாதியில் விட்டதை பிடித்து விடுகிறார் இயக்குனர்.

இது ஒரு திரிலர் என்பதை படத்தைப் பார்க்கும் வரை தெரியவில்லை. அடுத்து என்ன என்ன என்று ரசிகர்களை எதிர்பார்க்க வைத்திருக்கிறார் இயக்குனர் .
இசையில் ஜிப்ரானும் அதற்கு மிக அழகாக உதவியுள்ளார். மொத்தம் இரண்டு பாடல்கள், எழுதியவர் நா. முத்துக்குமார்.

நட்சத்திரத் தேர்வும் மிக கச்சிதம், எல்லா பாத்திரஙகலும் படத்தில் வாழ்ந்திருக்கிறார்கள் என்று சொல்வது பொருந்தும்.

மற்றும் மலையாளத்தில் கையாளப்படும் சில நுட்பங்கள் தமிழுக்கு கொஞசம் புதிசு. உதாரணத்துக்கு மனைவி கவுதமியை கமல் தேடி ஒவ்வோரு அறையாக செல்வது ரசிக்கும் படி படமாக்கப்பட்டுள்ளது.

மேலும், இதில் திருநெல்வேலி தமிழ் பேசி நடிக்கிறார் கமல், மாதவனின் டும்டும் டும் படத்திற்க்கு பின் ரசித்த இரண்டாவது வட்டார வழக்கு படம்.

இடி மழையுடம் வரும் காட்சிகள், யார் ஒளிப்பதிவாளர் எனக் கேட்க வைக்கின்றன. முழு திருப்தியாக சமிப காலங்களீல் ரசித்த படம் இது.

இவ்வளவு திறமையான இயக்குனர், நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைர்களூம் இத்தனை நாள் எங்கிருந்தார்கள் என்பதே.படம் பார்த்துவிட்டு வெளீயே வரும் போது என் யோசனையாக இருந்தது.

பாபநாசம் - அமெரிக்க  தமிழ்திரை ரசிகர்களுக்கு கோடை கொண்டாட்டம் என
நினைக்கிறேன்.