Sunday, October 30, 2016

அலமாரியில் ஆரூர் பாஸ்கர்

நண்பர்களே,

எஸ்.ராவின் சஞ்சாரம் புதினம் பற்றிய எனது கட்டுரையை  கிழக்குப் பதிப்பகத்தின் "அலமாரி மாத இதழ்" தனது அக்டோபர் இதழில்
வெளியிட்டுள்ளது.

நன்றி - கிழக்கு.







Tuesday, October 4, 2016

எழுத்தாளர் சுஜாதா - 14 வருட அதிசயம்

எழுத்தாளர் சுஜாதா மிகைப்படுத்தலின்றி அதீத உணர்ச்சிவசப்படாமல் எழுதக்கூடியவர். அதை உறுதி செய்வதுபோல் இருந்தது நான் சமீபத்தில் வாசித்த அவருடைய  ''நிலா நிழல்'' நாவலின் இரண்டாம் பதிப்பின் முன்னுரை.  அந்த 14 வருட அதிசயத்தை  நீங்களும் தெரிந்துக் கொள்ளுங்கள்.

சுஜாதா ''நிலா நிழல்'' யை   தினமணிக் கதிரில் தொடர்கதையாக 1988ல் எழுதுகிறார். அந்த சமயத்தில் ஏதோ காரணங்களுக்காக
அதில் ஓரு அத்தியாயம் வெளியாகாமல் விடுபட்டுபோகிறது. அதை சுஜாதா உட்பட யாரும் கவனிக்கவேயில்லை. அந்தக் கதையை கவிஞர் மனுஷ்யபுத்திரன் உயிர்மையில் இரண்டாம் பதிப்பாக வெளியிடும்போது கவனித்து சுஜாதாவிடம் சொல்ல. சுஜாதா 14 வருசங்கள் கழித்து அந்த விடுபட்ட அத்தியாயத்தை எழுதித் தருகிறார். நிலா நிழல் லின் இரண்டாம் பதிப்பில் இதை சிலாகித்து எழுதிய சுஜாதாவின் முன்னுரை இங்கே.

"உலகத்தில் ஒரு அத்தியாயத்தை மட்டும் பதினான்கு வருஷம் கழித்து எழுதப்பட்ட நாவல் இது என்று நினைக்கிறேன்.
எழுதும்போது மனதின் அடித்தளத்தில் தேங்கியிருந்த கதைக்கருவின் வடிவம் மறு உயிர் பெற்றது எழுத்து பிசினஸ்ஸில்
உள்ள விந்தைகளில் ஒன்று. "



இந்த நிகழ்வை கண்டிப்பாக வேறேந்த எழுத்தாளராக இருந்தாலும்
உணர்ச்சிப்பூர்வமாக பக்கம் பக்கமாக எழுதித் தள்ளியிருப்பார்கள் என்பது எனது அனுமானம்.

ஒரு அத்தியாயம் தொலைந்ததை யாரும் கவனிக்கவில்லை என்பது முதல் அதிசயம். அதைத் தாண்டி,  சுஜாதா கதை எழுதியது 1988, பின் 2002ல் அதாவது  14 வருடங்களுக்கு பின் விடுபட்ட அந்த அத்தியாயத்தை எழுதுகிறார். நான் 14 வருடங்களுக்கு பிறகு 2016ல் அதை கவனித்து எழுதுகிறேன்.  இந்த நிகழ்வு 14 வருட அதிசயம் தானே  ? ;)



புகைப்படங்கள் நன்றி:
www.google.com