Thursday, January 1, 2026

சொற்கள் தோற்குமிடம்

சமயங்களில்

உண்மைக்கும் பொய்க்கும் உள்ள

இடைவெளி குறைவாக 

மிக நெருக்கமாக இருந்து விடுகிறது.


தீர விசாரிப்பதில்

அதைக் களைய முற்படலாம்

ஆனால் அதை முழுதாக அரிய

முடியாது.


சொற்கள் தோற்குமிடம் மௌனம் ஆள்கிறது

புரியாத உண்மைகளை அதுவே சுமக்கிறது.

Saturday, October 4, 2025

குவிகம் நடத்தும் குறும் புதினப் போட்டி -2025

குவிகம் நடத்தும் குறும் புதினப் போட்டி

படைப்புகள் சுமார் 5000 சொற்களில் இருக்க வேண்டும். படைப்பு அனுப்பக் கடைசி நாள் டிசம்பர், 2025, 31 ஆம் தேதி.



Saturday, June 28, 2025

சிறப்பித்த சிறகுகள்- வாழ்த்துகள் மாணவர்களே !

சிறகுகள் கல்வி அறக்கட்டளை சார்பில் இந்த ஆண்டு 10-ஆம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பழையவலம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினோம். 

பத்தாம் வகுப்பு பொது தேர்வு முதலிடம்:  இ.அகல்யா- பரிசுத் தொகை ரூ-5000 /- , இரண்டாம் இடம்:  அ.அனுஸ்ரீ- பரிசுத் தொகை 2500/-, மூன்றாம் இடம்: வி.மாதேஸ்வரி, த.செமிலா, ஜோ.ஜெபஸ் ராஜா-பரிசுத் தொகை ரூ 1000/- 

இந்த ஊக்கத் தொகையுடன்,  கேடயமும், சான்றிதழ்களும் வழங்கினோம்.  நிகழ்வில் சிறப்பிக்கப்பட்ட மாணவர்களுக்கும், சிறப்பாக செயல்பட்ட ஆசிரிய பெருமக்களுக்கும் வாழ்த்துகள் !









Sunday, January 26, 2025

சிறுகதைப் போட்டி-2025

அந்திமழை இளங்கோவன் நினைவு சிறுகதைப் போட்டி-2025.  இறுதி நாள் மார்ச்-01-2025



Monday, January 13, 2025

கி.வா.ஜ. சிறுகதைப் போட்டி - 2025

மூன்று சிறுகதைகள் பரிசுக்கு உரியதாகத் தேர்ந்தெடுக்கப்படும். ஒவ்வொன்றுக்கும் பரிசுத் தொகை 6000 ரூபாய். மேலதிக விவரங்கள் கீழே...






திருப்பூர் சக்தி விருது 2025

 


Tuesday, December 31, 2024

2024: உள்ளேன் ஐயா !

2024-ஆம் ஆண்டை வழியனுப்பி, திரும்பிப் பார்க்கும் இந்த நேரத்தில் வலை நண்பர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. 

கடந்த ஆறு மாதங்களாக நான் வகுப்பில் "உள்ளேன் ஐயா" சொல்லிக்கொண்டிருக்கிறேன் நண்பர்களே. ஆமாம்... அமெரிக்க மண்ணில் அமெரிக்கர்களோடு இணைந்து பயில வேண்டும் எனும் இலட்சியக் கனவு நனவாகி இருக்கிறது.  

அமெரிக்கக் கல்லூரியில் எம்பிஏ (MBA) எனும் தொழில் நிா்வாக முதுநிலைப் பட்டத்தை வார இறுதி வகுப்பாக படித்துக் கொண்டிருக்கிறேன்.

என்ன ஒரு குறை?  கொஞ்சம் காலதாமதமாகி விட்டது. அதனால் என்ன? வீட்டின் அடுத்த தலைமுறை கல்லூரிக்குள் நுழையும் முன்பு  இதை செய்த முடிந்ததே என நினைத்துக் கொள்கிறேன். மனதுக்கும், படிப்புக்கும் வயதில்லை தானே.




பல புதிய நம்பிக்கைகளுடன் 2025-ஐ நோக்கி பயணிப்போம். நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் !