Saturday, July 29, 2023

ஜெஸிகா கிங் - குறித்து (8) -கதை சொல்லி துக்கத்தில் முழுகி விடமாட்டார்

முகநூல் வாசகர் Aarthi Siva, "ஜெஸி என்கிற ஜெஸிகா கிங்" நாவலின் கதைசொல்லி பற்றி பகிர்ந்தது..

//...கதை சொல்லியின் மகளின் வயதை வைத்து கணக்கிடும்போது அவர் தடாலடியாக செயல்படுகிற இளமை வேகம் கடந்தவர்ங்கிறதும், அவரோட  நிதானப்போக்கினை பார்க்கும்போது மிகுந்த யதார்த்தவாதிங்கிறதும் புரியவருது. ᴩꜱyᴄʜᴏ ᴀɴᴀʟyꜱɪꜱ படி சொல்லனும்னா ᴄᴀᴜᴛɪᴏᴜꜱ ᴛyᴩᴇ ᴩᴇʀꜱᴏɴᴀʟɪᴛy. தன் காதலை பத்தியோ, அவளுடனான உறவை பத்தியோ ꜱʜᴀʀᴇ பண்ணிக்கிற அளவுக்கு கூட வேறு நெருக்கமான நட்போ உறவோ இல்லாதவர். தமிழ்நாட்டு பாணில "நல்ல குடும்பத்துப் பையன்" ᴛyᴩᴇ. அவளது (ஜெஸி) இழப்பினால் விளைந்த துக்கத்தை மௌனமாக விழுங்கி ஜீரணிப்பாரே தவிர துக்கத்தில் முழுகிவிடமாட்டார். அதனால அவர் பேர்ல இரக்கம் தோணலன்னு நினைக்கிறேன்.//




பிரதிக்கு :

Zero degree publication 98400 65000
முதல் பதிப்பு ஜனவரி 2023
விலை ரூ 330.


ஜெஸிகா கிங் - குறித்து (9) - மனதில் ஒரு நீலநாரையின் கல்வெட்டு

ஜெஸி (எ) ஜெஸிகா கிங் குறித்த தனது வாசிப்பனுபவத்தை முகநூலில் பகிர்ந்த பிரியா பாஸ்கரன் அவர்களுக்கு நன்றி. நூலின் இறுதியில் வரும் கவிதை அவருடையதே.

//

மனதில் ஒரு நீலநாரையின் சிலாசாசனம் (கல்வெட்டு)

ஒரு நாவலின் பக்கங்களுக்குள் எல்லையற்ற உலகங்கள் உருவாக்கப்படுகின்றன. கனவுகள் உயிர்ப்பிக்கப்படுகின்றன. மனித ஆத்மாவின் யதார்த்த எல்லைக்கு அப்பால் உயர்ந்து, வாசகரின் இதயத்திலும் மனதிலும் ஒரு அழியாத அடையாளத்தை விட்டுச்செல்ல வேண்டும் அந்த நாவல்.
எழுத்து பிரசுரம் மூலம் வெளிவந்துள்ள, நாவலாசிரியர் ஆரூர் பாஸ்கர் எழுதிய ஜெஸி (எ) ஜெஸிகா கிங் என்ற நாவலை வாசித்து முடித்த பொழுதில், Blue Heron பறவையும், ஜெஸிகா என்ற பெண்மணியும் மனதில் கல்வெட்டாய் பதிந்துள்ளனர்.


கதைக்களம் வட அமெரிக்காவின் ஃபிளாரிடா மாகாணம். ஒரு குடியிருப்பு பகுதியில் கொரோனா கால கட்டத்தில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு நாவல் நகர்கிறது.
Sub divisionல் வசிக்கும் அண்டை வீட்டினைச் சேர்ந்த டீன் ஏஜ் பெண் கேசியின் அம்மாவான ஜெஸி என்ற பெண்மணிக்கும், அதே சம வயது டீன் ஏஜ் பெண் பிரியாவின் அப்பாவான கதை நாயகனுக்கும் இருக்கும் நட்பையும், திடீரென கொரோனா கால கட்டத்தில், காணாமல் போன ஜெஸியைக் குறித்து கவலை கொள்ளும் கதாநாயகனின் மன நிலையையும், அவளுக்கு என்னவாயிற்றோ எனக் கண்டுபிடிக்க அவன் எடுக்கும் முயற்சிகளே கதையின் போக்காக அமைந்துள்ளது.

இது ஒரு கிரைம் நாவலாக இருப்பதால், அத்தியாயத்திற்கு அத்தியாயம் ஜெஸிக்கு என்ன ஆகியதோ என நம்மையும் தேட வைக்கிறார் ஆசிரியர். கதை வாக்கில் பறவைகள் குறித்தான தகவல்கள் நிறைய உள்ளன. Like..
தெரியும்மா இப்படி பறவைகள் ‘V’ போலப் பறப்பதால் எனஜியைச் சேமிக்குது. அப்புறம் அந்தப் பறவைகளின் எண்ணிக்கை இரட்டைப் படையில் இருக்குப் பாத்தியா?
வட அமெரிக்கா நிலப்பரப்பின் அடையாளங்களை, தனது எழுத்து நடையில் விரிவாக பாஸ்கர் கொண்டு வந்துள்ளதால் எளிதாக என்னால் காட்சிப் படுத்திப் பார்க்கவும், கதை மாந்தருடன் பயணிக்கவும் முடிந்தது. இறுதியில் ஜெஸிகாவுக்கு என்ன ஆயிற்று என்பதின் மர்ம முடிச்சை அவிழ்க்கும் வரைக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்கள், அமெரிக்கர்கள், மற்ற நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்தோரின் பழக்க வழக்கங்களை விரிவாகக் கண் முன்னே காட்சிப்படுத்தியுள்ளார் ஆசிரியர்.
ஜெஸியின் கையில் “Blue Heron” பறவையைப் பச்சைகுத்தி இருப்பாள். அதுவே இந்த நூலின் அட்டைப்பட வடிவமைப்பிலும் வந்துள்ளது.
வழிமாறித் திசைமாறிப் பறக்கும்
நீல ஹெரான் பறவையைப்
பார்க்கும் பொழுதெல்லாம்
இணைந்தே பயணிக்கிறோம் நீயும் நானும்
மீளவும் மீளவும்
புலரியில் எழும் அந்திச் சூரியனைப் போல.
- Priya Baskaran பிரியா பாஸ்கரன்
என்ற எனது இந்தக் கவிதை வரிகளுடன் இந்த நாவலை நிறைவு செய்துள்ளார் எழுத்தாளர் ஆரூர் பாஸ்கர்...//


நூல்: ஜெஸி (எ) ஜெஸிகா ஜிங்
எழுத்தாளர்: ஆரூர் பாஸ்கர்
பதிப்பகம்: எழுத்து பிரசுரம்
விலை: ரூ. 330/-

Thursday, July 20, 2023

கூந்தல் குழந்தை எது ?

 'ஆலங்குயில் கூவும் இரயில்..' பாடலில் கவிஞர் கபிலன் மீசையை "கூந்தல் குழந்தை" என்ற புதிய கோணத்தில் உருவகப்படுத்தி எழுதியிருப்பார் (படம்-பார்த்திபன் கனவு). அது நடந்ததோ 2003-வாக்கில்.


அந்தக் கூந்தல் குழந்தை குறித்து ஒரு சிறுகதை எழுதுவேன். அது பரிசு பெறும் கதையாகும் என்றெல்லாம் சுத்தமாக நினைக்க வில்லை. 'நீட்டலும் மழித்தலும்' இடம் பெற்ற 'அமெரிக்கக் கதைகள்' புத்தகம் இப்போதுதான் கைகளுக்கு வந்து சேர்ந்தது.


அந்த நூலின் முன்னுரையில் ஈழ எழுத்தாளரும் கவிஞருமாகிய தீபச்செல்வன் இப்படி எழுதியிருக்கிறார்.


'நீட்டலும் மழித்தலும் என்ற கதை இயல்பான மொழியில் மீசை தமிழ் சூழலில் கொள்ளும் இடத்தையும் புலம்பெயர் தேசத்தில் மீசை குறித்த பார்வையும் ஒரு தனி மனிதனிடத்திலும் அவன் குடும்ப வாழ்விலும் மீசை ஏற்படுத்தும் அசைவுகளையும் நிலத்திற்கும் புலம்பெயர் நிலத்திற்குமான பெயர்வின் வழியாக ஏற்படும் தத்தளிப்புகளையும் மனக்குழப்பங்களை மிக நேர்த்தியாக பேசுகிறது. அதே நேரம் மிக இயல்பாக அதிர்வை உண்டு பண்ணுகிறது.'

நன்றி-தீபச்செல்வன்



Saturday, July 15, 2023

காலந்தாழ்த்தி வந்த பதவி உயர்வு

நண்பருக்கு தனது பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்காமல் நீண்ட நாள் தள்ளி போய் கொண்டே இருந்தது. பொறுமையிழந்த அவரோ தனது தகுதிக்கு ஏற்ற இன்னொரு வேலையைத் தேடிக் கொண்டார்.



அதைக் கேள்விப்பட்ட பழைய நிறுவனமோ 'போகாதீங்க.. பதவி உயர்வை இப்போ தர்றோம்..' என்றார்களாம். ஆனால், நண்பரோ காலந்தாழ்த்தி  இறுதியில் வரும் பதவி உயர்வு தனக்கு வேண்டாம் என மறுத்துவிட்டார்.

புதிதாக கிடைத்த வாய்ப்பு என்பது கொஞ்சம் சவாலாக இருந்தாலும் அதைச் செய்து முடித்துவிடலாம் என்ற நம்பிக்கையோடு, பழைய நிறுவனத்தில் 'TOO LATE...' எனச்  சொல்லிவிட்டார்.

இதை நண்பர் ஆழ்மனதின் வழிகாட்டுதலில், பெரிதாக யோசிக்காமல் செய்திருக்கலாம்.

ஆனால், அது பற்றி கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தபோது எனக்குத் தோன்றியது ;

காலம் கடந்து கிடைக்கிற ஒன்றை வேண்டாம் என மறுப்பதன் மூலம் அதைச் சார்ந்து இருக்கின்றவர்களைத் தண்டிப்பதாக நமது மனது உள்ளூர ஆறுதல் கொள்வதே காரணம்  என நினைக்கிறேன்.

மேற்கண்ட பதிவை முகநூலில் பகிர்ந்தபோது பல அன்பர்கள் 'தன்மானம் ' என்பதும் இன்னொரு காரணம் எனக் குறிப்பிட்டிருந்தனர்.

Tuesday, July 11, 2023

பறவைகள் திசை அறிவது எப்படி ?

நம்முடைய மனம், உடல் மட்டுமின்றி உலகின் பல சிக்கலான விசயங்கள் குறித்த ஆய்வுகள் இன்னமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

அப்படி ஆராயப்படும் பல விடயங்களில் ஒன்று பறவைகள் வலசை போவது. இதைப் பற்றி பேசும் How do birds find their way? எனும் ஒரு புத்தகம் வீட்டில் கண்ணில் பட்டது.

பல பறவைகள் குளிர் காலங்களில் சூடு தேடி கண்டம் விட்டு கண்டம் பறப்பது நமக்குத் தெரிந்த ஒன்றுதான். அதன் வழித்தடம்தான் பலருக்கு முன்னுள்ள மிகப்பெரிய கேள்வி. சிலர், அந்தப் பறவைகள் சூரியன் எழும் திசை, மறையும் திசை ஏன் இரவில் வானில் தோன்றும் நட்சத்திரங்களின் அமைப்பைப் பொருத்தும் கூட அவை இரவும் பகலும் பயணிக்கின்றன என்கிறார்கள். அதே சமயத்தில், அவைகளால் மேகமூட்டமான நேரத்திலும் பயணிக்க முடிகின்றன என்பதையும் கவனிக்கிறார்கள்.





சிலர் பறவைகளின் உடலுக்குள்ளேயே தென்புலம், வடபுலம் அறியும் காந்த ஊசி இருப்பதாக நம்புகிறார்கள். ஏன், வலசை என்றில்லை பொதுவாகவே பறவைகள் எப்படி பறவைகள் தங்கள் வழித்தடத்தை தொடர்கின்றன அல்லது கூட்டை வந்தடைகின்றன  என்பதே இன்னமும் புதிராகவே இருக்கிறது. 

அதிலும் குறிப்பாக புறாக்கள் (homing pigeons) தங்கள் வழியைக் கண்டுபிடிப்பதில் கில்லாடிகளாம். ஒரு முறை அதன் கண்களைத் திரையிட்டு மறைத்தாலும் அவைச் சரியான வழியில் பயணித்து தன்னுடைய கூடுவந்து சேர்ந்து விடுகின்றனவாம். (இதெல்லாம் தெரிந்துதானே அன்றே நம்மாட்கள் புறாவை தூது அனுப்பினார்கள் :))

ஒரு லண்டன் பறவையை திடீரென விமானத்தில் கொண்டுவந்து அமெரிக்காவில் 'அம்போ' என விட்டிருக்கிறார்கள். ஆனால், அந்தப் பறவையோ சரியாக  12-வது நாள்  தன்னுடைய லண்டன் கூட்டில் ஜாலியாக வந்து உட்கார்ந்து பலரை ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது.

இப்போது நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு பறவைகளின் வழித்தடம், அதன் பறக்கும் உயரம், காலநிலை போன்றவைகளை மிகத் துல்லியமாக தெரிந்து கொள்கிறார்கள். ஆனாலும், பறவைகளின் உள்ளுணர்வு எனபது இன்னமும் ஆய்வுக்குரிய ஒன்றாகவே இருக்கிறது.

Saturday, July 8, 2023

வனநாயகன் குறித்து-29 (கணினி மென்பொருளாளர்கள் அனைவரும்...)

முகநூல் நண்பரான விஜயன் (Vijayan Usilai) 'வன நாயகன்- மலேசிய நாட்கள்' குறித்து முகநூலில் சமீபத்தில் பகிர்ந்தது. நன்றி விஜயன்!

//

ஆரூர் பாஸ்கரின் புதினமான "வன நாயகன்" அப்படியே கிட்டத்தட்ட நான் ஜப்பான் நாட்டில் வேலை செய்த அனுபவத்தை கருவாகக்கொண்டு எழுதப்பட்டிருந்தது. நம் மனத்திற்குள் நினைப்பதை தெளிவாகவும், மனதில் பதியும்படி சுவையாகவும் எழுதுவது எழுத்தாளர்களுக்குத்தான் முடியும். அதில் ஆரூர் பாஸ்கர் அவர்கள் சூப்பர்.


வேலைபார்த்த இடத்தில் நான் பெற்ற கசப்பான மற்றும் கொடுமையான நிகழ்வுகளை பெற்ற ஒரு கணினி மென்பொருளாளனின் உணர்வுகளை சுவைபட தத்ரூபமாக விளக்கியிருந்தார். அந்த புதினத்தின் அட்டைப்படத்தில் உள்ள உராங்குட்டான் குரங்கின் படத்திற்கான விளக்கத்தினை நீங்கள் புரிந்துகொண்டால் நீங்கள் கில்லாடிதான்.
கணினி மென்பொருளாளர்கள் அனைவரும் கண்டிப்பாக படிக்கவேண்டிய புதினமாகும் "வன நாயகன்".
//

வனநாயகன் – மலேசிய நாட்கள் (நாவல்)
ஆரூர் பாஸ்கர்,

கிழக்கு பதிப்பகம்,
பக்கங்கள் 304, விலை ரூ.275
நூலை இணைய வழியே வாங்க:
வனநாயகன் – மலேசிய நாட்கள்
மின்னூல்
அச்சுநூல்