Tuesday, December 27, 2022

வனநாயகன் குறித்து-25 (வசீகரமான தலைப்போடு அறுசுவை)

வனநாயகன்(மலேசிய நாட்கள்) குறித்து தனது வாசிப்பனுவத்தைப் பகிர்ந்த தோழர் அப்துல் காதர் (சென்னை) அவர்களுக்கு மிக்க நன்றி !

//

வாழ்க வளமுடன்.

அன்புத் தோழர் பாஸ்கரன் அவர்களுக்கு,

தங்களின் வசீகரமாக வனநாயகன் வாசித்தேன். சிறப்பான நாவல்.இது குறித்தான கருத்துப் பறிமாற்றம் செய்ய போதுமான அவகாசம் கிட்டவில்லை.

நாவல் வாசித்து நாட்கள் பலவாகி இருந்தாலும், அலுப்பு தட்டாத உங்களின் மொழிநடையாலும், இதுவரை நான் அறியாத பணி களத்தை விவரித்த அழகில், சுஜாதா( ரங்கராஜன்) க்குப் பிறகு சிலிக்கான் தொழில்நுட்ப பணிகளில் இப்படியும் வகையுண்டா? எனும் ஆச்சரிய மேலீட்டாலும், அத்துடன் கலகலப்பான க்ரைம் கலந்து விறுவிறுப்பு கூட்டியதாலும், இரண்டே நாள் அவகாசத்தில் படித்து முடித்து விட்டேன் என்றாலும், தொலைதூர அலுவலகப் பணிகளாலும், விடுமுறை; ஓய்வு எனும் அடிப்படையில் இங்கு வந்ததாக மனைவியும் மகளும் கருதியதாலும் விட்டு விட்டு பயணங்கள் என பொழுது கழிந்ததால், பொருத்தமான கால அவகாசம் கிட்டவில்லை.


ஒராங் உட்டான்(ஓராங் ஊத்தான்) என சாதாரணமாக அறியப்பட்டுள்ள ஓர் உயிரினத்தின் வலிகளையும், அதனைத் தமிழ்ப்படுத்தி வசீகரமான தலைப்பிட்டதிலும் தொடங்கி, துறை சார்ந்த குறிப்புகள் அதனுடன் பின்னிப் பிணைந்த தொழிற்போட்டிகள், எல்லாவற்றையும் மீறிய அரசியல் குறுக்கீடுகள் அல்லது தலையீடுகள் அத்துடன் அளவான ரசபாசமான காதல் உணர்வுகள் என கலந்துகட்டி அறுசுவை விருந்து படைத்து விட்டீர்கள். வாழ்த்துகள்.

பயணக்கட்டுரை போல் இல்லாமல், கதைகளத்தின் ஊடே மலேசிய சுற்றுலாத்தலங்களை அறிமுகப்படுத்தி அவற்றைக் காண வேண்டுமென்ற ஆர்வத்தை தூண்டி விட்டீர்கள். நல்லவேளையாக இந்நாவலை என் மனைவி படிக்கவில்லை. படித்து முடித்தால், லிஸ்டில் மலேசியாவும் சேர்ந்து விடும்.(ஏற்கனவே சிங்கப்பூர் லிஸ்டில் உள்ளது)...

//

வனநாயகன் – மலேசிய நாட்கள் (நாவல்)
ஆரூர் பாஸ்கர்,

கிழக்கு பதிப்பகம்,
பக்கங்கள் 304, விலை ரூ.275

Friday, December 23, 2022

ஜெஸி (எ) ஜெஸிகா கிங் - இப்போது அச்சு நூலாக

மகிழ்ச்சியான செய்தி !! "ஜெஸி (எ) ஜெஸிகா கிங்"  அச்சுநூலாக வருகிறது.  ஜீரோ டிகிரி பதிப்பகம் இதை ஜனவரி புத்தகத் திருவிழாவுக்கு திட்டமிட்டிருக்கிறது. முகப்பு அட்டைப் படமும் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. புதிய அட்டைப் படத்தை நெகிழன் வடிவமைத்திருக்கிறார்.



#jessie


Wednesday, December 21, 2022

வனநாயகன் குறித்து-24 (ஐடி துறை பற்றி பேசும் நவீன புதனம்)

"வனநாயகன்(மலேசிய நாட்கள்)" குறித்து மணிகண்டன் அமேசான்  தளத்தில் பகிர்ந்த கருத்து..










Saturday, December 10, 2022

ஜெஸி என்கிற ஜெஸிகா கிங் - குறித்து(5)

வாசக நண்பர்களின் வாசிப்பனுபவம் தொடர்கிறது...

இதைப் பகிர்ந்த ராஜா திருநாவுக்கரசு அவர்களுக்கு நன்றி !

Read Jessi (India)

Read Jessi (USA)

Tuesday, December 6, 2022

ஜெஸி என்கிற ஜெஸிகா கிங் - குறித்து(4)

அமேசான் கிண்டில் வாசகர்களின் வாசிப்பனுபவம் தொடர்கிறது.

Monday, December 5, 2022

என்.சொக்கன்

ஓரு மொழிக்கு ஆதரவான, ஆரோக்கியமான சூழல் நிலவுகிறதா? என்பதைத் தெரிந்து கொள்ள நாம் அந்த மொழியில் வெளியாகும் புத்தகங்களைச் சற்று கூர்ந்து கவனித்தாலே புரிந்துவிடும். 

அந்த வகையில், நண்பர் என்.சொக்கன் தமிழில் இந்தத் தலைமுறைக்குத் தேவையான நூல்களைத் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கிறார். புனைவு, தன்னம்பிக்கை, வரலாறு, நிறுவன வரலாறு, சிறார் இலக்கியம் போன்ற துறைகளில் 70-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார்.


இவருடைய எழுத்து திருகுகள் அற்ற தெளிவான ஒன்று. இவரைப்போல தமிழில் இந்தக் களங்களில்  எழுதிக் குவித்த  இளம் எழுத்தாளர்கள் யாரும் இதுவரை என் கண்ணில் படவில்லை.

இவருடைய நூல்களை எளிதாக கிண்டிலில் வாங்க முடிந்தாலும் அச்சு நூல்களைத் தேடித்தேடிதான் வாங்க வேண்டி இருந்தது. அந்தக் குறை தீரும் வகையில் இவருடைய எல்லா நூல்களையும் ஜீரோ டிகிரி மறுபதிப்பாக கொண்டு வருவது வரவேற்கப்படவேண்டிய ஒன்று.

இந்த வாய்ப்பை நண்பர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதுவரை வந்த அவருடைய நூல்களுக்கான இணைப்பு கீழே..

https://www.zerodegreepublishing.com/collections/n-chokkan-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D

Monday, October 31, 2022

ஜெஸி என்கிற ஜெஸிகா கிங் - குறித்து(3)

ஒருவருடைய எழுத்துக்கான அங்கீகாரம் என்பது அதனை வாசிப்பவர்களின் அனுபவத்திலிருந்து வருகிறது. அந்த வாசிப்பனுபவத்தைத் தனிமடலில் அல்லது பொதுவெளியில் பகிர்வதில் சிலருக்குச் சில தயக்கங்கள் இருக்கலாம்.

அந்தத் தயக்கங்களில் இருந்து விடுதலைப் பெற்று எங்கிருந்தாவது வரும் அங்கீகாரமே நம்மைத் தொடர்ந்து இயக்கிக் கொண்டிருக்கின்றது.

அந்த வகையில் என்னுடைய எல்லா நூல்களையும் உடனடியாக வாசித்து கருத்துகளை விரிவாகப் பதிவிடும் வாசக நண்பர்களில் ஃபிளாரிடா சேந்தன் முதன்மையானவர்.  அவருடைய வாசிப்பனுபவம் இங்கே..

//ஆரூர் பாஸ்கர் அவர்களின் புதிய நாவல், வாசிப்பு அனுபவம்:

மார்வெல் யூனிவர்ஸ், விக்ரம் லோகிவெர்ஸ் போன்று ஆரூர் பாஸ்கர் யூனிவர்ஸ் என்று ஒன்றில் நுழைந்ததாகவே தோன்றியது, அவரது முந்தைய நாவலான வனநாயகனில் பத்மாவை திருமணம் முடித்துவிடுவார் என்ற நம்பிக்கையோடு நாவல் நிறைவு பெரும், ஆனால் பத்மாவை மணந்துக்கொள்ளவில்லை என்று கதையின் ஆரம்பமே சற்றும் எதிர்பாராத திருப்பம். நாவலில் வரும் அழகியல் தன்மை ஒவ்வொரு பாத்திரத்தையும், சூழ்நிலையையும் விவரிப்பதில் வெளிப்படுகிறது.
வனநாயகனிலும் சரி, ஜெசி நாவலிலும் சரி, இயற்கையே கதையின் எல்லா இடங்களிலும் இழைந்திருக்கும். இயற்கையின் மீதான ஆரூர் பாஸ்கரின் காதல் அவர் படைப்புகளில் தெரியும். வனநாயகனில் வரும் ஒராங்குட்டானாகட்டும், இர்மா நாவலில் வரும் மேனட்டி ஆகட்டும், ஜெசி கதையில் வரும் கிரேட் ப்ளூ ஹெரான் ஆகட்டும் அந்த இயற்கை குறியீடுகளும், இயற்கை மனிதனின் பேராசையால் அழிக்கப்படும் காட்சிகளும் ஆரூர் பாஸ்கர் அவர்களின் சிக்னேச்சர் (ஹா..ஹா… Sig(nature)-சிக்னேச்சரிலும் கூட நேச்சர் வருகிறது)😅

ஒரு புனைவில் எத்தனை நுட்பமான இயற்கை சார்ந்த தகவல்கள், அதன் பின்னால் இருக்கும் கடும் உழைப்பை பற்றி வியக்காமல் இருக்க முடியவில்லை. திரைபடங்களில் வரும் பின்னனி இசை போல The Great Blue Heron(நீல பறவை) கதை முழுக்க நம் கற்பனைகளில் விரிந்துக்கொண்டே வருகிறது. ஜெசியை பற்றிய வர்ணனைகளை தொடர்ந்து வாசிக்க வாசிக்க, Blue Eyed Blonde பெண்களை கண்டால் ஜெசி கதாபாத்திரம் இப்படி தான் இருப்பாளோ என்று தோன்றிவிடும். கதாநாயகனின் ஜெசி மீதான காதலை சொல்லும் தருணம் மிக subtleலாக அழகாக இருந்தது.
அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் பலரும் அவர்கள் வாழும் ஊர்களை பற்றி, மக்களை பற்றி, இயற்கையை பற்றி அதிகம் தெரியாமலேயே வாழ்ந்துவிடுவார்கள். யாரோ சொன்ன அல்லது எங்கேயோ கேட்டதை வைத்து தங்கள் அனுமானங்களை அமெரிக்கா பற்றிய புரிதலாக உருவாக்கி வைத்திருப்பர். அவர்கள் பலரும் அமெரிக்க வாழ்க்கையை பற்றி அறியாத ஆனால் அவர்கள் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிற அல்லது கடந்து போகிற பல தகவல்களைக் கதையின் போக்கிலேயே எழுதியிருக்கிறார்.


ஃப்ளோரிடா மாகாணத்தில் வசிக்கும் பலருக்கும் பலமுறை பார்த்தும் கூட தெரியாத ஒரு பறவை அநிஹ்ங்கா(Anhinga) (தன் இறக்கைகளை விரித்து பாம்பு போன்ற கழுத்தை நீட்டி ஏரி கரையோரங்களில் வெயில் காய்ந்துக்கொண்டிருக்கும், மற்ற பறவைகளிலிருந்து பார்த்தவுடனே வித்தியாசமாக இருக்கும், இது வட அமெரிக்காவில் ஃப்ளோரிடா மாகானத்தில் மட்டுமே காணகிடைக்ககூடிய பறவை) பற்றிய குறிப்பு வரும் இடத்தை வாசித்த போது, மனிதர் எவ்வளவு தூரம் ஒரு நாவலை எழுத ஆராய்ச்சி செய்திருக்கிறார் என்று தோன்றியது. எனக்கு பிடித்த இன்னொரு செய்தி குறைந்த வாடகை அப்பார்ட்மென்டுகளை தடுக்கும் வெள்ளையின மனநிலையை விளக்கும் இடம். இவற்றை நம்மவர்களும் சேர்ந்து எதிர்க்கும் பல சமயங்களை நானே பார்த்திருக்கிறேன்.

இவை எல்லாமே நாவலில் நான் வாசிக்க வாசிக்க வியந்த இடங்கள், இதை தாண்டி நாவலின் உச்சம் என்பது கடைசி மூன்று அத்தியாங்கள், சரியான திரில்லர்! ....

அருமையான
வாசிப்பு அனுபவமாக படைத்துக் கொடுத்த ஆரூர் பாஸ்கர் அவர்களின் யுனீவர்ஸ் தொடர
வாழ்த்துக்கள்
!

இந்தப் புத்தகம் கிண்டிலில் கிடைக்கிறது, உலகம் முழுதும் வாழும் தமிழர்களுக்கு எங்களூரில் [ஃப்ளோரிடா] இருந்து எழுத்தாளர் ஆரூர் பாஸ்கரால் படைக்கப்பட்டிருக்கிறது. ஜெஸி (எ) ஜெஸிகா கிங் (Tamil Edition)
//

இதைப் பகிர்ந்த சேந்தன் அவர்களுக்கு நன்றி !! இந்த நூலைக் கிண்டிலில் வாசிக்க, கீழே சொடுக்கவும்.

Saturday, October 22, 2022

ஜெஸி என்கிற ஜெஸிகா கிங் - குறித்து(2)

ஜெஸி(எ)ஜெஸிகா கிங் நாவல் குறித்த கருத்துகள் வரத் தொடங்கியிருக்கின்றன.

//ஜெசிகா கிங் என்கிற தலைப்பைப் பார்த்ததும், இந்தக் கதை ஜெசிகா என்கிற அமெரிக்கப் பெண்ணைப் பற்றிய கதை என்பதை எந்த சஸ்பென்சும் இல்லாமல் உடனே தெரிந்து விடுகிறது. இதில் வரும் தமிழ்க் கதாநாயகன் ஒரு பெண் குழந்தையோடு வசிக்கிறான். அவன் வாழ்வில் நுழைந்த ஜெஸி பற்றிய நெடுங்கதை இது. 



இந்த நாவலைப் படிக்கும் போது ஒவ்வொரு அத்தியாயமும் விறுவிறுப்பாக  தங்கு தடையின்றி வழுக்கிச் செல்கிறது. கதாசிரியர் எழுத்துக் கலையில் பயிற்சி பெற்றவர் என்பதும் எப்படி ஒரு அத்தியாயத்தை வாசிப்பவர்களுக்கு சலிப்பை கொடுக்காமல் சுவாரசியமாக நகர்த்தவேண்டும் என்கிற உத்தி தெரிந்தவர் என்பதும் தெரிகிறது. அத்தியாயங்களை ஆரம்பிப்பது, நகர்த்துவது, முடிப்பது போன்றவை தெளிந்த நீரோட்டம் போல இருக்கிறது. தனித் தனியாக வாசிக்கும் போது ஒவ்வொரு அத்தியாயமும் இனிமை. உதாரணத்திற்கு அவன் பெர்மினா வீட்டிற்குச் சென்று ஆருடம் பார்க்கும் காட்சிகள் மிகுந்த அழகு. 

கதையில் வெவ்வேறு குணாதியங்களைக் கொண்ட கதா பாத்திரங்கள் மிக அழகாக வடிவமைக்கப் பட்டிருக்கின்றன. பறவைகள்,பசுமைப் பாதை, அஷோசியேஷன் சண்டைகள்... இவையெல்லாம் அமெரிக்க வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டுகின்றன.  அனைவரும் கண்டிப்பாக வாசிக்கவேண்டிய படைப்பு ஜெஸி என்கிற ஜெஸிகா கிங்.

//

இதைப் பகிர்ந்த அந்த நண்பருக்கு நன்றி !! இந்த நூலைக் கிண்டிலில் வாசிக்க, கீழே சொடுக்கவும்

Read Jessi

Sunday, October 16, 2022

ஜெஸி - கவிதைப் போட்டி

கவிதைப் போட்டி




"ஜெஸி (எ) ஜெஸிகா கிங்" நூலை அமேசானின் ‘பென் டூ பப்ளிஷ்’ (pen2publish)  போட்டியில் இறக்கிவிட்ட பின் ஏதாவதொரு விதத்தில் ‘ஜெஸி’ என்ற பெயரை வாசகர்களிடம் பரவலாக்க வேண்டும் இல்லையா ?

அதற்கான விளம்பர உத்திதான் இந்தக் கவிதைப் போட்டி. இதை மறக்காமல் உங்கள் நண்பர்கள் வட்டத்தில் பகிருங்கள். 

ம்.. பட்டையைக் கிளப்புங்கள். அடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கட்டும்... :)

நன்றி !!

#pen2publish5


Sunday, October 9, 2022

ஜெஸி என்கிற ஜெஸிகா கிங் - குறித்து(1)

வந்தியத் தேவன் மூலமாக ஓலை முதலில் தஞ்சைக்கு போய்விட்டு பிறகு பழையாறை செல்வது போல ஜெஸி நாவல் கிண்டிலில்  pen2publish-இல் வெளியாகிவிட்டது. ஆனால், அந்தச் செய்தி இன்னமும் கிண்டில் அன்லிமிடெட் (kindle unlimited) வாசகர்களுக்கு போய் சேரவில்லை போல. அதற்கு சுமார் 1 வாரம் ஆகும் என தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்.  அதன்பின் பலர் வாசித்து கருத்துகளைப் பகிர்வார்கள் என எதிர்பார்க்கிறேன்.

இதுவரை வாய்வழிச்செய்தியாக கேள்விப்பட்டவர்கள் மட்டும் வாசித்துக் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள். அப்படிச் சமீபத்தில் வந்த ஒரு அமேசான் கருத்து ...


இப்படி எங்கிருந்தெல்லாமோ வரும் உற்சாகம் நம்மைத் தொடர்ந்து இயக்கிக் கொண்டிருக்கிறது. நன்றி நண்பரே !!

Read Jessi

 

கிண்டில் வாங்கித் தர நீ ரெடியா ?

என்னுடைய "ஜெஸி" நாவல் கிண்டிலில் கிடைக்கிறது என்றவுடன் சிங்கப்பூர் நண்பர் ஒருவர் தொடர்பு கொண்டு மானே, தேனே எனச் சொல்லிவிட்டு, "புத்தகம் வாங்கி படிக்க நான் ரெடி.  கிண்டில் வாங்கித் தர நீ  ரெடியா ?" என்கிறார்.  எப்படி இருக்கிறது கதை, பாருங்கள்.


நம்முடைய அன்பு சொந்தகங்களில் பலருக்கு இந்த விசயம்  முன்பே தெரிந்திருக்கலாம். தெரியாதவர்களுக்காக - கிண்டில் நூல்களை வாசிக்க தனியான சாதனம் எதுவும் தேவையில்லை. கிண்டிலின் செயலியை (app) போஃன், டேப்லெட்-களிலும் தரவிறக்கம் செய்து அதில் எங்கும் எப்போதும் வாசிக்கலாம். இல்லையென்றால், எந்தவித சாதனமும் இல்லாமல் கணினி  பிரொளசரிலும் கூட நேரடியாக எளிதாக  படிக்கலாம்.

நேரடியாக பிரொளசரில் படிக்க உதவும் கீழே இணைப்பில் தருகிறேன் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

https://read.amazon.com/kindle-library

Read Jessi

Thursday, October 6, 2022

பின்னட்டைக் குறிப்பு - போட்டி

புத்தகங்களுக்கு  'பளிச்'சென பின்னட்டைக் குறிப்பு இருப்பது அவசியம். அது வாசகர்களைக் கவரும் ஒரு மார்கெட்டிங் யுத்தி என்பதைத் தாண்டி சுமார் நூறு பக்கங்களுக்கு மேல் இருக்கும் ஒரு படைப்பை வாசித்து அதற்கு அழகான சுருக்கம் அல்லது 'blurb' எழுதுவது என்பது ஒரு கலை.  

அந்தக் கலையை ஊக்குவிக்குவிக்கும் வகையிலும் எனது ஜெஸி நாவலைப் பரந்த வாசகர் பரப்புக்கு எடுத்து செல்லும் முயற்சியாகவும் ஒரு சின்ன போட்டி.

அமேசானில் கிடைக்கும் 'ஜெஸி என்கிற ஜெஸிகா கிங்' நாவலை கிண்டலில் வாசித்து 60 சொற்களில் இருந்து 120 சொற்களுக்கு மிகாமல் சிறப்பாக blurb எழுதி அனுப்பும் அன்பர்களுக்கு பரிசு கொடுப்போம். முதல் பரிசு ரூ.1000 மற்றும் 10 பேருக்கு ரூ.150 (தொகை அமேசான் வவுச்சராக) தரலாம்.


விதிமுறை- போட்டியில் கலந்து கொள்பவர்கள் கிண்டிலில் புத்தகத்தை வாசித்து அங்கு  தங்கள் கருத்துகளைப் (ரேட்டிங்ஸ் & ரிவியூ) பகிர்ந்திருக்க வேண்டும். அதை உறுதி செய்த பின் சுருக்கத்தை aarurbass AT gmail.com க்கு அனுப்ப வேண்டும். போட்டிக்கான கடைசி நாள்- அக்டோபர் 10 (இந்திய நேரம்). 

இன்னமும் ஒரு வாரம் இருக்கிறது. ‘அட்டை’காசமாக எழுத வாழ்த்துகள் !

போட்டி நடுவர்களின் முடிவே இறுதியானது. புத்தகத்தை வாசிக்க அமேசான் தள முகவரியை கீழே தருகிறேன்.  இதை மற்றவர்களிடமும் பகிருங்கள்,

Read In Amazon

Monday, October 3, 2022

ஜெஸி (எ) ஜெஸிகா கிங்

நண்பர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி.  எனது "ஜெஸி (எ) ஜெஸிகா கிங்" நாவல் (புதினம்) அமேசான் கிண்டிலில் வெளியாகி இருக்கிறது. 

இதன் மூலமாக ஐந்தாவது ஆண்டாக அமேசான் நடத்தும் ‘பென் டூ பப்ளிஷ்’ (pen2publish) போட்டியில் என்னுடைய நான்காவது புனைவு கலந்து கொள்கிறது.


இந்த அறிவிப்பு வந்தவுடன் என்னைப் பங்கேற்க ஊக்குவித்து உற்சாகப்படுத்திய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி !!

இனி இதை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்லவேண்டியது நண்பர்களின் கைகளில் இருக்கிறது. ஆமாம், இங்கே கீழே புத்தகத்துக்கான இணைப்பைத் தருகிறேன். வாசித்து தங்களுடைய கருத்துகளை (ரேட்டிங்ஸ் அண்ட் ரிவியூஸ்) மறக்காமல் பதிவிடுங்கள்.

Read In Amazon

இந்தப் படைப்பு Pen to publish-ல் இணைத்துள்ளதால் இது மிக முக்கியம்.

Friday, September 23, 2022

சமூக ஊடகங்கள் குறித்த "நில்-கவனி-செல்"

சமூக ஊடகங்கள் குறித்த "நில்-கவனி-செல்" என்ற கட்டுரைத் தொடரை மக்கள் உரிமை இதழில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

அச்சு ஊடகத்தில் இப்படி ஒரு தொடர் எழுதுவது இதுவே முதல் முறை. வாழ்த்தி, ஆதரவு தரும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி !

Monday, September 12, 2022

வனநாயகன் குறித்து-23 (மலேசியா பற்றி அறியும் வாய்ப்பு)

கனடா வாழ் நண்பர் பாமா இதயகுமார் அவர்கள் அனுப்பிய செய்தி. நன்றி பாமா ..

 //

வணக்கம்,...

உங்கள் நான்கு புத்தங்களும் நிச்சயமாக பயனுள்ள சாரத்தை தந்தது என்பதில் ஐயமில்லை. அனைத்தும் எனக்கு மிகவும் பிடித்தன. கூடுதலாக, மலேசியா பற்றி அறிய கூடிய வாய்ப்பு (கதையின் மூலம் விமான செலவு இல்லாமல் அழைத்து சென்று விடும் வல்லமை).

அதேவேளை social media பற்றிய தகவல் , மிக அருமையான புத்தகங்கள். வாழ்த்துக்கள் !!!

//



Sunday, September 11, 2022

அறத்துக்கு அப்பால் - நாகேஸ்வரி அண்ணாமலை

அறத்துக்கு அப்பால் நீளும் அத்துமீறல் குறித்து அமெரிக்க எழுத்தாளர் நாகேஸ்வரி அண்ணாமலை ... 

//

திரு ஆரூர் பாஸ்கர்,

வணக்கம்.  தங்கள்  'அறத்துக்கு அப்பால் நீளும் அத்துமீறல்' நூலை இப்போதுதான் படிக்க முடிந்தது.  எளிமையான தமிழில் நீங்கள் கூற விரும்புவதை சிறப்பாகக் கூறியிருக்கிறீர்கள்.  சமூகத்திற்குத் தேவையான புத்தகம்.  எல்லோரும் படித்துப் பயன் அடைவார்கள் என்று நம்புகிறேன்.

இப்போது என்னையே பேஸ் புக்கில் ஒருவர் ஏமாற்றப் பார்க்கிறார்கள். ...

//

என சமூக ஊடகங்கள் குறித்த தன்னுடைய தனிப்பட்ட ஒரு அனுபவத்தையும் இணைந்து பகிர்ந்த அவருக்கு எனது நன்றி !!

நூல் வாங்க இணைப்பு - To buy

Friday, August 26, 2022

"ஜிபே" Google Pay

'லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வருவேன்' என்பது போல புதிய தொழில்நுட்பங்களை விரைவாக கைகொள்வதில் இந்தியாவை அடித்துக்கொள்ள வேறு ஆட்களே இல்லை என்றே நினைக்கிறேன். அந்த விதத்தில் நான் இந்தமுறை கவனித்த விசயம் "ஜிபே(Google Pay)" . 



ஜிபே-ஐ தமிழ்நாடு என்றில்லை ஒட்டுமொத்த இந்தியாவே  தத்து எடுத்திருக்கிறது போல. சாலையோர பழக்கடையில் இருந்து ஐந்து நட்சத்திர ஒட்டல் வரை எல்லோரும் எந்த தயக்கமும் இன்றி ஏற்றுக் கொள்கிறார்கள். நாம் முன்புபோல  பணத்துக்காக ஏடிஎம்களைத் தேடி ஓடவேண்டிதில்லை.

ஆனால் என்ன, கிரிடிக் கார்ட், பே பால் (PayPal) என இப்படி எவ்வளவுதான்  புதிதாக வந்தாலும் எனக்கு பணத்தைக் கண்ணால் பார்த்து, கைகளில் தொட்டு செலவு செய்தால்தான்  திருப்தி. அப்போதுதான் செலவு என் கட்டுக்குள் ஒழுங்காக இருக்கும் என சிலர் சொல்வதும் லேசாக காதில் விழுந்தது. 

Sunday, August 21, 2022

மூத்த அகதி

ஸீரோ டிகிரி பப்ளிஷிங்-தமிழரசி அறக்கட்டளை இணைந்து வழங்கிய 2021 இலக்கிய விருது பெற்ற "மூத்த அகதி"-ஐ வாசித்தேன்.  நூலின் ஆசிரியர் வாசு முருகவேல்.


வாசு முருகவேல் "கலாதீபம் லொட்ஜ்" மூலம் எனக்கு அறிமுகமானவர். நம்பிக்கைக்கு உரிய ஈழ எழுத்தாளர். இங்கே நான்  ஈழ எழுத்தாளர் எனக் குறிப்பிடுவது அவரைத் தனித்துவப்படுத்தி காட்டவே தவிர தனிமைப் படுத்தும் நோக்கம் எதுவும் கிடையாது.

ஒரு நல்ல இலக்கியப் படைப்பு என்பது தன்னளவில் வாசிப்பவர்களுக்கு ஏதேனும் ஒரு சிறிய  மாற்றத்தை, தன்னுணர்வுப் புரிதலைத் தரவேண்டும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பை வாசு முருவேலின் மூத்த அகதி நிறைவு செய்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

ஈழப் போரின் பொருட்டு சில தமிழர்கள் இங்கே அகதியாக வந்தார்கள். அவர்கள் ஆங்காங்கே அகதி முகாமில் வசிக்கிறார்கள் என்றெல்லாம்  மேலெழுந்த வாரியாக பேசப்படும் (தமிழ்நாட்டு) ஈழத் தமிழர் வாழ்வின் ஒரு துளி இந்த மூத்த அகதி.

ஆரம்பத்தில் பல உதிரி மனிதர்களின் கதைகள் சென்னையின் சில தெருக்களில் இலக்கின்றி பயணிப்பது போல தோன்றினாலும் மெல்ல மெல்ல வாசனும், துவாரகனும் கதை மாந்தர்களாக உருபெற்று நம்மை உள்ளிழுத்துக் கொள்கிறார்கள். அதன் பிறகு அவர்கள் நம்மை புத்தகத்தை கீழே வைக்கவே விடுவதில்லை. 

மனதில் நினைப்பதை சுருக்கமாக அதே சமயத்தில் ஆழமாக எழுதுவது என்பது ஒரு கலை. அந்தக் கலையின் உச்சம் என்பது அப்படி எழுதியதை எந்த இடத்தில் மிகச் சரியாக நிறுத்துவது என்பதும் கூடத்தான்.  அதை வாசு சிறப்பாக செய்திருக்கிறார். அந்த வகையில் வாசு ஒரு தேர்ந்த எழுத்தாளராக மிளிர்கிறார். வாழ்த்துகள்

முன்பே சொன்னது போல இது ஈழப் போரின் வரலாற்றை, இன்னல்களைப் பேசும் படைப்பில்லை. மாறாக இது ஒரு தனிப்பட்ட அகதி வாழ்க்கையின் அபத்தத்தை, பண்பாட்டு திரிபைச் சொல்லும் படைப்பு. இது அகதி என்றில்லாமல் கிராமங்களில் இருந்து பொருளாதார வாய்ப்புகளுக்காக நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்ந்த அனைவரும் ஏதோ ஓரிடத்தில் தங்களைப் பொருத்திப் பார்த்துக்கொள்ளும் படைப்பும் கூட.

மேலேலுந்த வாரியாக வாசிப்பவர்களுக்கு நூல் நேரடி மொழியில் இருப்பது போல தோன்றினாலும், தேர்ந்த வாசகர்கள்  இந்தப் படைப்பில் வரும் குறியீடுகளைச் சரியாகப் புரிந்து கொள்வார்கள். வாசு முருகவேலின் மூத்த அகதி வாசிக்கவேண்டிய ஒரு படைப்பு.

Book : மூத்த அகதி

Author: வாசு முருகவேல்

Publisher: எழுத்து பிரசுரம் (Zero Degree Publishing)

********









Thursday, August 18, 2022

அறத்துக்கு அப்பால் - அர்லாண்டோ சேந்தன்

 "அறத்துக்கு அப்பால் நீளும் அத்துமீறல்" புத்தகம் குறித்து அர்லாண்டோ சேந்தனின் விரிவான வாசிப்பனுபவம் (ஃபேஸ்புக்கில் பகிர்ந்தது) ...

****
சில புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்த உடனே உள்ளே இழுத்துக்கொள்ளும் அப்படியான எழுதும் கலையை கைவரப்பெற்றவர் எழுத்தாளர் திரு. ஆரூர் பாஸ்கர். அவரின் ஒரு வருட உழைப்பின் பலனாக, எழுதிய புத்தகம் தான் சமீபத்தில் வெளிவந்த இந்த அபுனைவு (Non-fiction) படைப்பு, ஆனால் ஆரம்பமே ஒரு த்ரில்லர் நாவலை வாசிக்க ஆரம்பிக்கிறோமா என்று நினைக்க வைக்கும் வேகம். மிக லாவகமாக வாசகனை புத்தகத்தோடு இறுக கட்டிவிடுகிறார். முதல் இரு அத்தியாயங்களை வாசித்த பிறகே முன்னுரை, அறிமுக உரையெல்லாம் வாசித்தேன்.
முதல் இரு அத்தியாங்கள் வெவ்வேறு பின்னனியில் சமூக ஊடகங்களில் நிகழும் குற்றச்சம்பவங்களை பற்றியது. அது எழுதப்பட்ட விதம் என் வாசிப்பு அனுபவத்தில் புதியது. முதல் சம்பவம் உச்சம் பெறும் இடத்தில் நிறுத்தி, அடுத்த சம்பவத்தை பற்றி ஆரம்பிக்கிறார். அடுத்த சம்பவத்தின் உச்சத்தில், முதல் சம்பவத்தின் தொடர்ச்சி வருகிறது. இந்த எழுத்துமுறை வித்தியாசமாக இருக்கிறது. ஆனால் சுவாரஸ்யம் குறையவில்லை.
நைஜீரிய தொழில்நுட்ப குற்றக் குழுக்கள் எப்படியெல்லாம் சமூக ஊடகங்களை வைத்து Social Engineering (சரியான நபர் போல் பேசி தகவல்களை திருடி ஏமாற்றவது) செய்து ஏமாற்றுகிறார்கள் என்று புட்டு புட்டு வைத்திருக்கிறார். அடுத்த அத்தியாயமே பெண்கள் சமூக ஊடகங்களில் எவ்வாறான கெடுபிடிகளையும் அருவருப்புகளையும் சந்திக்கிறார்கள் என்பது பற்றியது.
சமூக ஊடகங்களின் வழியே வேலை வாங்கி தருகிறோம் என்று ஏமாற்றும் கும்பல்களை பற்றிய அத்தியாயம் தமிழக இளையர்கள் வாசிக்க வேண்டிய பதிவு. சமூக ஊடகங்கள் இவ்வளவு இழிவான செயல்களுக்கு தான் பயன்படுகிறதா எனும் அயர்ச்சி வரும் போது, அவரே அதை ஆக்க பூர்வ பணிகளுக்கு பயன்படுத்துபவர்களை பற்றிய தனித்தனி அத்தியாயங்களாக பதிவு செய்திருக்கிறார்.
தமிழக பெண்களின் சமூக ஊடக அனுபவங்களை அவர்களிடமே கேட்டு எழுதிய அத்தியாயங்கள் அருமை. பொதுவாக ஆண்களே பெண்களுக்கும் சேர்த்து கருத்து சொல்வதை தான் நாம் அதிகம் பார்த்திருப்போம் அதை கவனமாக தவிர்த்திருக்கிறார்.
சமூக ஊடக வெளியில் இருக்கும் பெண்களின் பதிவுகளில் தமிழ் இணைய சமூகம் எவ்வளவு பிற்போக்கானது என்பதும், சமூக ஊடகங்களில் பெண்கள் மீது எவ்வளவு வெறிக்கொண்டு தாக்குதல் நடைபெறுகிறதென்றும் தெரிகிறது, நாமும் இதை பலமுறை பார்த்து கடந்திருப்போம், அது வேறு ஒருவருக்கு நிகழ்கிறது அதனால் பெரிதாக கண்டுகொள்வதில்லை, அதன் தாக்கம் அந்த பெண்களின் வாழ்க்கையில் எப்படி இருக்கிறது என்று ஒரு முறை ஏனும் யோசித்திருப்போமா என்று நினைத்த போது, இல்லை என்று தான் சொல்வேன்.
ஒவ்வொரு அத்தியாத்தை முடித்தவுடன், அது போன்ற விஷயம் நமது சமூக ஊடக பயணத்திலும் நிகழ்ந்திருக்கிறதே என்று தோன்றும், அல்லது நமக்கு தெரிந்தவர்களுக்கு நடந்து இருக்கிறதே என்று தோன்றும். அதனால் இந்த புத்தகத்தை இன்னும் நெருக்கமாக நம்மால் வாசிக்க முடிகிறது.
நேற்று இரவு வாசிக்க ஆரம்பித்து அதிகாலை 2 மணி வரை வாசித்துவிட்டு இன்று மாலை மீண்டும் ஆரம்பித்து இப்போது தான் முடித்தேன் கிட்டதிட்ட நான்கு மணி நேர வாசிப்பு. தமிழில் சமூக ஊடகங்களை பற்றி இப்படி ஒரு புத்தகம் வந்திருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் சமூக ஊடக வெளியில் உலவும் அனைவரும் வாசிக்க வேண்டிய
அருமையான
நூல்.
****
நூல் குறித்து விரிவாக எழுதி பகிர்ந்தமைக்கு நன்றி சேந்தன் !!

Saturday, August 13, 2022

ஓலா(Ola cabs)- பயண அனுபவங்கள்

ஓலா-வில் ஓடிபி (OTP) எண் சொல்வதில் தாமதம். அதனால், பயணம் செய்தவர் ஓலா கார் டிரைவரால்  அடித்துக் கொலை என்றொரு செய்தியைச் சமீபத்தில்  பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.  எதற்கெல்லாம் கோபப்படுவது,  கொலை வரை போவது என்ற வரைமுறையெல்லாம் போய்விட்டது.

நானும் ஊரில்  ஓலா (Ola cabs) பயன்படுத்தி இருக்கிறேன். அதுவும் இந்தமுறை ஒருநாளைக்கு இரண்டு மூன்று முறை என்ற அளவில் அதிகமாக பயன்படுத்தினேன்.  இதில் ஒவ்வொருவருக்கும் ஒரு அனுபவம். நண்பர் சுரேஷ் கண்ணன் கூட தான் நீண்ட காலமாக ஷோ்ஆட்டோவில் பயணிப்பவன் எனச் சொல்லி தன்னுடைய அனுபவங்களைத் தொடர்ச்சியாக முகநூலில் பதிவிட்டு வருகிறார்.

என்னுடைய ஓலா அனுபவங்கள் ஊரில் கலவையாக இருந்தன. ஒரு ஓட்டுநர் இரவு 11 மணிக்கு  தான் தூங்காமல் இருக்க எனச் சொல்லி தனது சொந்த கதை பேசியபடி ஓட்டி வழியை கோட்டை விட்டுவிட்டார்.  அன்று வழிதவறி  ஊரெல்லாம் சுற்றிவிட்டு வீட்டுக்கு வரும் போது நள்ளிரவாகிவிட்டது. இத்தனைக்கும் உதவிக்கு கூகுள் இருந்தும் இந்த இலட்சணம். நேரமும், பணமும் விரயம்.

சிலர்  வண்டிக்கு பெட்டோல் போடனும்ங்க, சில்லறை மாத்தனும்ங்க என நமது அவசரம் தெரியாமல் வழியில் நிறுத்தி இம்சித்தார்கள். ஒருவர் நான் அவசரமாக ஒன்னுக்கு போகனும்ங்க என வண்டியை ஒரு புதரோரம் ஓரங்கட்டி நிறுத்தி விட்டு  என்னை அம்போ விட்டுவிட்டு போய்விட்டார்.

ஒரு நண்பரிடம் ஓலா ஆட்டோ 3 பேருக்குதான். நான்காவதாக சுண்டெலி போல ஒரு பிள்ளை ஏறினாலும் கூடுதல் கட்டணம் 50 ரூபாய் என கராராக வசூலித்து விட்டார் என என்னிடம் வந்து புலம்பினார்.

(குறிப்பு - எல்லா ஓலா ஓட்டுநர்களையும் குற்றம் சொல்வது இந்தப் பதிவின் நோக்கம் அல்ல)

Friday, August 12, 2022

வீரப்பனின் நட்பால் சிறைசென்ற அன்புராஜ்



வீரப்பன் நட்பால் சிறை தண்டனை அனுபவித்துவிட்டு வந்திருக்கும்
அன்புராஜ்-ஐ சமூக ஊடகங்களின் வழியாக நான் கவனித்து வருகிறேன். கலை இலக்கியங்களின் வழியாக தனிமனித மாற்றங்கள் சாத்தியப்படும் என்பதற்கு அவர் தன்னையே உதாரணமாக காட்டுகிறார்.

அது மட்டுமல்லாமல், சிறைவாசிகள் குறித்தும் இந்தியச் சிறைத்துறையில் தேவைப்படும் அவசியமான சீர்திருத்தங்கள் குறித்தும் அவர் தனது அனுபவங்களின் வழியாக தொடர்ச்சியாக பேசி வருகிறார். இப்படி நமது அரசியல் சாசனம் வகுத்த சட்டதிட்டங்கள் எளிய பின்புலம் உடைய சிறைவாசிகளுக்கு தொடர்ந்து மறுக்கப்படுவது என்பது அநீதி. 

இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல்,  அக்கறையின்றி அசட்டையாக இருப்பது என்பது ஒரு பண்பட்ட சிவில் சமூகத்துக்கு கண்டிப்பாக அழகில்லை.  சிறைவாசிகளும் தேர்தலில் வாக்களிக்க உரிமை தரப்பட்டால் இந்த நிலைமை மாற வாய்ப்பு இருக்கிறதோ என்னவோ தெரியவில்லை. 

அன்புராஜின் சமீபத்திய காணொளி ஒன்றை கீழே   இணைத்திருக்கிறேன். நேரம் இருக்கும்போது பாருங்கள்.


Sunday, August 7, 2022

பேரா.ஹாஜா கனி நேர்காணல் (Part-2) - முழு வடிவம்

பேரா.ஹாஜா கனியுடனான எனது கலகலப்பான நேர்காணலின் 2-வது பகுதியைக் கீழே இணைத்திருக்கிறேன்.  பாருங்கள்.




இந்தச் சந்திப்பில் பல சுவையான சம்பங்களுடன்  கனி தனது நண்பரும் பாடலாசிரியருமான கவிஞர் யுகபாரதியுடனான  ஒரு  நெகிழ்ச்சியான சம்பவத்தையும் நினைவு கூர்ந்திருக்கிறார். தவறவிடாதீர்கள்.

பேரா.ஹாஜா கனி நேர்காணல் (Part-2) - முன்னோட்டம்

நண்பர் பேரா.ஹாஜா கனியுடனான எனது நேர்காணலின் 2-வது பகுதி எங்கே ? எங்கே? என பலர் முகநூல் உள்பெட்டியைத் தட்டிவிட்டார்கள்.  அவர்களுக்காக அதன் 2 நிமிட முன்னோட்டத்தை ஒலி மேம்படுத்தி  இணைப்பில் தந்திருக்கிறேன். பாருங்கள்.

இந்த இரண்டாவது பகுதியில் அவருடைய அரசியல், பொது வாழ்க்கை, நட்புவட்டம் போன்ற பல கேள்விகளை முன்வைத்திருக்கிறேன். கலகலப்பான அந்தச் சந்திப்பின்  முழுமையான வடிவத்தை வரும் ஞாயிறு அன்று தருவேன். காத்திருங்கள்.



Saturday, July 30, 2022

வெளிநாட்டு பாஸ்போர்ட்(கடவுச்சீட்டு) வைத்திருப்பவர்களுக்கு

இந்தியாவில் வெளிநாட்டு பாஸ்போர்ட்(கடவுச்சீட்டு) வைத்திருப்பவர்களுக்கு விமான நிலையங்களில் தனி வரிசை என்பது தெரிந்ததே. 

சென்னை போன்ற நகரங்களில் முன்பெல்லாம் அந்த வரிசையில் பெரும்பாலும்  ஒன்றிரண்டு வெள்ளை முகங்கள் நின்று கொண்டிருப்பார்கள். 


ஆனால், இந்தமுறை வந்த போது நிலையோ தலைகீழ். வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களின் வரிசை என்பது உள்நாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு குறைவில்லாமல் நீண்டிருந்தது. அவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்தியாவில் பிறந்து, வளர்ந்து  வெளிநாடு சென்று அந்தநாட்டு பாஸ்போர்ட் வாங்கிக் குடியேறியவர்களாக இருந்தார்கள்.(அவருடைய குடும்பத்தினர்)

இந்த நேரத்தில் அமெரிக்கக் குடியுரிமை பெற தங்களுடைய சொந்த நாட்டு குடியுரிமையைத் துறந்தவர்களில் இந்தியர்கள் 2-ஆவது இடத்தில் இருக்கிறார்கள் என்பதை இங்கே நினைவுபடுத்த வேண்டி இருக்கிறது.

Sunday, July 10, 2022

பி.எச். அப்துல் ஹமீது - நியூயார்க்கில் ஒரு சந்திப்பு

தன்னுடைய தனித்துவமான தமிழாலும் இனிமையான குரலாலும் நம்மைக் கவர்ந்த இலங்கை வானொலி புகழ் பி.எச். அப்துல் ஹமீது அவர்களை நேரில் சந்தித்து  பழகும் ஒரு வாய்ப்பு நியூயார்க்கில் (பெட்னா) அமைந்தது.

கொஞ்சம் யோசித்தால் என்னைத் தமிழை நோக்கி ஈர்த்ததில் இலங்கை வானொலியின் பங்களிப்பு என்பது எனது தமிழாசிரியர்களுக்கு உள்ள பங்களிப்புக்குச் சற்றும் குறைவு இல்லாத ஒன்று என்றே நினைக்கிறேன்.

அதிலும் குறிப்பாக அறிவிப்பாளர்கள் அப்துல் ஹமீது, ராஜேஸ்வரி சண்முகம் போன்றவர்களை என்னால் எளிதில் மறக்க முடியாது. அந்த வகையில்,  நான் தமிழில் எழுதிய முதல் வாசகர் கடிதமே இலங்கை வானொலிக்காக அதுவும் அப்துல் ஹமீது அவர்களுடைய நிகழ்ச்சிக்காகதான்.


நேர்பேச்சில் இதுபோன்ற பல விவரங்களைக்  குறிப்பிட்டு  நானும் நண்பர் ஹாஜாகனியும்  அவருடன் சில மணிநேரங்கள் அளவளாவியது பெருமகிழ்ச்சி.   அவர் பெட்னா  மாநாட்டில் வெளியிட்ட 'வானலைகளில் ஒரு வழிப்போக்கன்' நூலை நாமும் நண்பரும் பெற்றுக்கொண்டோம். 




கடந்தவாரம் அப்துல் ஹமீது அவர்களைச் சந்தித்து உரையாடியது , அவருக்கு  என்னுடைய வனநாயனையும், அறத்துக்கு அப்பால் நூலையும்  பரிசளித்தது எல்லாம் நான் சற்றும் எதிர்பாராமல் ஒரு கனவு போல நடந்திருக்கிறது.  

வாழ்க்கைக்கு இதுபோல கனவுகளும், கற்பனைகளும் அவ்வப்போது தேவையாகத்தானே இருக்கிறது. :)

Wednesday, July 6, 2022

35-ஆவது பெட்னா பேரவை விழா

"தலைமுறை தாண்டியும் தமிழ்" எனும் கருப்பொருளோடு தொடங்கிய பெட்னாவின் 35-வது ஆண்டு பேரவை விழா கடந்த திங்களன்று நியூயார்க்கில் நடந்து முடிந்திருக்கிறது. இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் இந்த ஆண்டாவது நடக்குமா ? (கொரோனா பெருந்தொற்று)  நடந்தாலும் கூட்டம் வருமா ? என்பது போன்ற பல சந்தேகங்களைப் பொய்யாக்கும் வகையில் நியூயார்க் தமிழ்ச்சங்கம் இந்த ஆண்டு பேரவை விழாவை ஒருங்கிணைத்து சிறப்பாக நிகழ்த்திக் காட்டியிருப்பது மிகப்பெரிய சாதனை. அந்தவகையில் நியூயார்க் தமிழ்ச்சங்கத்துக்கும் பெட்னா-வுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்!.

விழாவில் பல சிறப்பான நிகழ்வுகள்-  திருநங்கை ரேவதியின் 'வெள்ளை மொழி' ஓரங்க நாடகம், அடுத்தத் தலைமுறைக்கான தமிழ் குறித்த கருத்துக் களம், ஆபிரகாம் பண்டிதர் -ஆவணப்படம், சிறார் யோகா (இளையராஜா-கவிதா), தமிழ்ச்சங்கங்களின் நாட்டிய நாடகங்கள் போன்றவை நினைவில் நிற்கின்றன. அதிலும் குறிப்பாக 'தகடூரான் தந்த கனி'-யும் அதைத் தொடர்ந்த நாட்டிய நாடகமும் உலகத்தரம். அந்தக் குழுவினரின் ஈடுபாடும், உழைப்பும் ஒவ்வொரு காட்சியிலும் மிளிர்ந்தது. பாராட்டுகள் !



அதே சமயத்தில், நிகழ்ச்சி நிரலை இன்னமும் சிறப்பாக மெருகேற்றி கடைசி நேரக் குளறுபடிகளைத் தவிர்த்து இருக்கலாம். உணவு உபசரிப்பு நேரத்தை இன்னமும் துரிதப்படுத்தி இருக்கலாம். விடுதி விருந்தினர்களின் பயண நேரத்தைக் குறைத்து இருக்கலாம்.  மக்கள் கூட்டத்தை ஈர்க்க வல்ல (crowd-puller) விருந்தினர் ஒரு சிலரையாவது அழைத்து இருக்கலாம் என்பது மாதிரியான குற்றச்சாட்டுகள் காதில் விழாமல் இல்லை.

வழக்கத்தை விட  இந்த ஆண்டு அதிக அளவில் விடுமுறைக்கு தாயகம் சென்றுள்ள அமெரிக்க குடும்பங்கள், இன்றைய அமெரிக்க பொருளாதார சூழல், சிறப்பு விருந்தினர்களுக்கு விசா நேர்காணல் கிடைக்காதது, கடைசி நேர மாற்றங்கள், நெருக்கடியான நியூயார்க் நகரம் என்பது மாதிரியான பல தடைகளைக் கடந்தே இந்த மிகப்பெரும் நிகழ்ச்சி சாத்தியமாகி இருக்கிறது என்பதையும் இங்கே நினைவுபடுத்த வேண்டி இருக்கிறது.

பல ஆண்டுகளாக பெட்னா நிகழ்வுகளில் பங்கேற்பவன் என்ற முறையில் மேலே சுட்டிக் காட்டப்படும்  சிறிய குறைகள் எளிதில் களையப்படக் கூடியவை.  தமிழுக்காக... தமிழர்.. என்ற உணர்வோடு முற்றிலும் தன்னார்வத்தோடு ஒருங்கிணைக்கப்படும் இந்த நிகழ்வு வரும் ஆண்டுகளில் சுட்டிக் காட்டப்படும் சிறு சிறு குறைகள் களையப்பட்டு மேலும் சிறப்பாக நிகழும் என்பதில் இங்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. 

நியூயார்க் தமிழ்ச்சங்கம், பெட்னா - மீண்டும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் !!. இந்த நேரத்தில் 36-ஆவது பெட்னா பேரவை விழாவை நடத்த இருக்கும் சாக்ரமெண்டோ (கலிபோர்னியா) தமிழ்ச்சங்கத்துக்கு நம் இதயப்பூர்வமான வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வோம்.

*******
குறிப்பு- பேரவை விழாவின் யூ-டியூப் நேரலையை கீழே தருகிறேன். நேரம் இருக்கும் போது பாருங்கள் (முழுவதுமானது அல்ல).

(FETNA 2022 l JULY 03 2022 l Live)

(FETNA l New York l July 02 2022 l Live)

Tuesday, June 7, 2022

கவிஞர் பிரியா பாஸ்கரன்

மொழியின் அடர்செறிவான வடிவம் கவிதை. அதன் நுட்பம் கவிஞர் பிரியா பாஸ்கருக்குச் சரியாக கை வந்திருக்கிறது என நினைக்கிறேன். 

அமெரிக்காவின் மிக்சிகனில் இருந்து எழுதும் அவரை நான் சில ஆண்டுகளாக கவனித்து வருகிறேன்.  வாசிப்பவர் நெஞ்சம் நிரம்பி வழிந்தோடும் காத்திரமான கவிதைளை அவர் தொடர்ச்சியாக எழுதிவருகிறார்.  இதுவரை பிரியா இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார்.


அவருடைய 'அப்பாவின் சைக்கிள் கவிதை' எனக்கு நெருக்கமான ஒன்று. அந்தக் கவிதையைக் கீழே இணைத்திருக்கிறேன் பாருங்கள். நெஞ்சில் நங்கூரமிடும் இதுபோன்ற  பல கவிதைகள் படைக்க பிரியாவை வாழ்த்துகிறேன் !

அப்பாவின் சைக்கிள்

அப்பாவின் சைக்கிளுக்கும் அவருக்கும் ஐம்பத்தைந்து வருடத் தோழமை.

அவரது சம்பாத்தியத்தில் முதல் வாகனம். சனிக்கிழமை தோறும் அதற்கும் எண்ணெய்க் குளியல். இருவரும் தனிமையில் உரையாடிக் கொள்வார்கள். அதற்குத் தெரியாத அப்பாவின் இரகசியங்கள் என்று ஒன்றும் இல்லை. நாங்கள் கற்றுக் கொள்ள எடுத்துத் தவறிக் கீழேவிழுந்தபோதும் வாஞ்சையுடன் அதனைத்தான் தடவிக் கொடுத்தார். விபத்தொன்றில் காலிழந்து செயற்கைக் கால் பொருத்தப்பட்ட பின்னரும் அவர் ஓட்டும் ஒரே வாகனம் அந்த சைக்கிள் தான். அப்பா எங்களைச் சுமந்தது போலவே சலிப்பேதுமின்றி அப்பாவை சுமக்கிறது சைக்கிள். -பிரியா பாஸ்கரன்

Tuesday, April 19, 2022

வனநாயகன் குறித்து-22 (தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன)

அமெரிக்காவில் வசிக்கும் கனிமொழி (Kanimozhi MV)  வனநாயகன்- மலேசிய நாட்கள் குறித்து எழுதிய முகநூல் குறிப்பு (2017)

"தோழர் ஆரூர் பாஸ்கர் அவர்களின் வனநாயகன் நெடுங்கதைப் படித்தேன்...

 பெரும்பாலும் நெடுங்கதைகள் படிக்கும் பழக்கம் இல்லை, கடைசியாக படித்த நெடுங்கதை நினைவில் கூட இல்லை... அதனால் சற்றுத் தயங்கியபடியே தான் படிக்க ஆராம்பித்தேன். ஒரு 25 பக்கங்கள் பொறுமையாக திருப்பிக்கொண்டு வந்தேன், பின் போக போக கதை விறுவிறுப்புடன் சென்றது, மலேசிய கதைக்களம், நாம் மலேசியாவில் இருப்பதுபோன்று காட்சிகள் அழகாக விவரிக்கப்பட்டிருந்தது. 

கதையின் நடுவே ஏராளமான செய்திகள், மலேசியாவின் ஊர்ப்பெயர்கள் பற்றி அங்கே வாழ்க்கை முறை பற்றி தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. 

ஒரே ஒரு வருத்தம் அந்த முக்கிய கதை நாயகனை சைவமாக வைத்திருக்க வேண்டாம் 😄😄



ஒரு நெடுங்கதைக்கு முக்கியத் தேவை படிப்போரை இறுதிவரை கதையை முடித்துவிட வேண்டும் என்ற  உந்து சக்தியை தக்க வைப்பது.. அதை தோழர் சிறப்பாக செய்திருக்கின்றார்

வாழ்த்துகள் தோழர் !! "

புத்தகங்களை வாங்க

https://dialforbooks.in/product/9788184936773_/



Wednesday, April 6, 2022

ஃபேஸ்புக்ல இப்பெல்லாம் எழுறது இல்லையா ?

"ஃபேஸ்புக்ல இப்பெல்லாம் எழுறது இல்லையா. உங்க போஸ்டையே பாக்க முடியலையே..." என நேர்பேச்சில் சிலர் என்னிடம் கேட்கிறார்கள். அப்படி ஒருவருடைய பதிவுகள் தங்கள் ஃபேஸ்புக்-இல் வருவதில்லை எனக் குறைபட்டுக் கொள்பவர்களுக்காக...


இது ஒரு தொழில்நுட்பம் சார்ந்த விசயம். ஆமாம். பேஸ்ஃபுக் அல்காரிதம் என்பதும் அதுதான். நீங்கள் யாருடைய பதிவுகளை அதிகம் படிக்கிறீர்களோ, அவர்களுடைய பதிவுகளே உங்களுடைய பக்கத்தில் தொடர்ந்து  வரும். இங்கே படிப்பது என்றால் அதைச் சும்மா பாரத்துவிட்டு நகர்வது அல்ல. அந்தப் பதிவுகளுடன் நீங்கள் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு கொள்ளவேண்டும்.

அதாவது,  நான் இந்தப் பதிவுகளை விரும்புகிறேன் எனும் விதத்தில் லைக் பொத்தானை அழுத்த வேண்டும். இல்லை மறுமொழி (கமெண்ட்) தரவேண்டும்.

அப்படி எதுவும் செய்யாத பட்சத்தில் அந்தப் பதிவுகளை நீங்கள்| படிக்காமல் தவிர்த்து விட்டு கடந்து போவதாக பேஸ்ஃபுக் (இப்போதைக்கு)  புரிந்து கொள்கிறது. இது அவர்களுடைய அல்காரிதத்தின் ஒரு அம்சம் மட்டுமே. ஏனென்றால், நீங்கள் பொழுதுபோக்கு என்ற இடத்தில் பிரியாணி சமைப்பது எனக் குறிப்பிட்டு இருந்தால்,  உங்களுக்குப் பிரியாணி தொடர்பான தகவல்களைத் தொடர்ந்து   காட்டி உங்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைப்பதும் அவர்களுடைய அல்காரிதத்தின் இன்னொரு அம்சமே. இப்படிப் பல...

அதனால், இனி யாரிடமும் "நீங்க இப்பெல்லாம் போஸ்டே போடறதில்லையா... ?" எனக் கேட்பதற்கு முன் நீங்கள் முதலில் அவருடைய நட்புப் பட்டியலில் இருக்கிறீர்களா? அவர்களுடைய டைம்லைனில் புதிய பதிவுகள் இருக்கின்றனவா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். 

வனநாயகன் குறித்து-21 (இரட்டைக் குழல் துப்பாக்கிகள்)

வனநாயகன் குறித்து தனது கருத்துக்களைத் தனி மடலில் பகிர்ந்த அகிலா-வுக்கு நன்றி ! 

//சார்,

சமீபத்தில் நான் நக்கீரனின் காடோடி படித்தேன். கிழக்கு மலேசியாவில் நடந்த (நடந்து கொண்டிருக்கிற) காட்டழிப்பில் பங்கேற்ற அல்லது உதவியாக இருந்த ஒருவருடைய மனநிலையைப் பற்றி பேசும் நாவல்

இந்தப் படைப்பின் வழியாக ஆசிரியர் தொல்குடியினரின் வாழ்வையும் அந்த நிலப்பரப்பையும், விலங்குகளையும் குறித்து பதிவுசெய்திருக்கிறார். அது குறித்தான தகவல்களை மேலும் அறிய உரிய ஆங்கில சொற்களும் தரப்பட்டிருந்தால் உதவியாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.

மலேசிய பின்புலத்தில் நீங்கள் எழுதிய வனநாயகன் (மலேசிய நாட்கள்)-னும் இந்தக் காடோடி-யும் சம காலத்தில் மலேசிய நிலப்பரப்பு குறித்தும், சூழல் குறித்தும் எழுதப்பட்ட அழுத்தமான படைப்புகள் என நினைக்கிறேன்.  இரட்டைக் குழல் துப்பாக்கிகள் போல.. வாழ்த்துகள் !

//

Tuesday, April 5, 2022

மூப்பில்லா தமிழே தாயே

'மூப்பில்லா தமிழே தாயே..' பாடல் வெளியாகி இருக்கிறது.  இதுவரை அதை யூடியூப்-இல் பல இலட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். பல நூறு ஆண்டுகளுக்கு நிற்கவேண்டிய இந்தப் பாடலில்  குறுகிய கண்ணோட்டத்தோடு எங்கு பார்த்தாலும் விளம்பரங்களைச் சேர்த்திருக்கிறார்கள் என்கிறார்கள் சிலர்.  சிலர், தமிழர்களின் பாரம்பரிய கலைகளை அதில் சரியாக பிரதிபலிக்கவில்லை என்கிறார்கள். அதுபோல, பாடகிகளின் குரல் தேர்வு, உச்சரிப்பு குறித்தெல்லாம் அதன் வல்லுநர்கள் கருத்து சொல்லட்டும். பிரச்சனையில்லை. அது அவர்களுடைய சுதந்திரம்.


ஆனால், தமிழ் கலாச்சாரத்தை, பாரம்பரியத்தை முன்னெடுத்து தரணி ஆள தமிழை அழைக்கும் பாடலில் ஒரு விசயம் என் கண்னை உறுத்தியது.  அதில் ஒரு காட்சியில் ஒருவர் (எழுத்தாளர்? ) ஊஞ்சலில் அமர்ந்தபடி யோசித்து பேனாவால் எழுதுவது போல அமைத்திருக்கிறார்கள். தமிழில் எழுதுபவர்களை என்றும் வயதானவர்களாகக்  காட்டி அந்நியப்படுத்த வேண்டுமா என்ன ? கூடவே, தமிழில் ஓர் இளைஞியோ இளைஞனோ கைப்பேசியில் இல்லை கணினியில் ஆர்வத்தோடு தட்டச்சு செய்வது போல காட்டி இருக்கக் கூடாதா ?  இளைஞர்களுக்குத் தமிழ் என்பது ஆடல், பாடல் என்பது மட்டும்தானா  ? 

இல்லை, அந்த வயதானவரே கூட அடுத்த கட்ட நகர்வாக தாளில் எழுதாமல் தமிழில் தட்டச்சு செய்வது போல காட்டி இருக்கக் கூடாதா.  இத்தனைக்கும் பின்னணியில் ஒலிக்கும் பாடல் வரிகள் (கவிஞர் தாமரை) தட்டச்சில் தனியே நின்றோம்.. என  வருகிறது என நினைக்கிறேன். அதைக் காட்டுவதில் அவர்களுக்கு என்ன தயக்கமோ. இல்லை என்ன பிரச்சனை வந்துவிட போகிறதோ தெரியவில்லை.

நமக்கு, இதைப் பார்க்கும் பல கோடி தமிழர்களில் சில நூறு பேராவது (குறிப்பாக இளைய தலைமுறை) தமிங்கிலத்தில் எழுதாமல் தமிழில் எழுத முயற்சி செய்ய மாட்டார்களா என்ற ஆதங்கம்தான் வேறென்ன.

பாடலின் குறிப்பிட்ட அந்தக் காட்சிக்கான இணைப்பை மறுமொழியில் தந்திருக்கிறேன். நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.

https://youtu.be/JDYiJGTOFHU?t=271




Sunday, March 20, 2022

இளையராஜாவுக்குக் கிடைக்காத அந்த வாய்ப்பு

இசை என்றால் இளையராஜா எனப் பேசப்பட்டாலும்  அவருடைய தமிழ் மொழி ஆளுமை என்பது வெளியில் பெரிதாக பேசப்படாத ஒன்றாக இருக்கிறது என்கிறார் கவிஞரும் பாடலாசிரியருமான யுகபாரதி (புத்தகம்; இசை அல்லது இளையராஜா-யுகபாரதி ).


அதாவது, புலவர்களே எழுத அஞ்சும் பல வெண்பாக்களை இளையராஜா  தளை,சீர் தட்டாமல் எழுதி பல புத்தகங்களாக வெளியிட்டு இருக்கிறார். பாடலுக்கு இசையமைக்கும் போதே பெரும்பாலும் பொருத்தமான சுண்டியிழுக்கும் முதல் அடியையும் சேர்த்து எழுதி விடுவார். செந்தமிழ் பாடல் வரிகளை வெகுஜன மக்களின் இரசனைக்கு ஏற்றாற் போல வழக்குமொழிக்கு மாற்றி எளிமைப்படுத்தி இருக்கிறார் என நீண்ட பட்டியல் இட்டிருக்கிறார்.

கூடவே,  புத்தகத்தில் அவர் அங்கலாய்த்து சொல்லும் ஒரு விசயம்.  இன்று ஒட்டுமொத்தத் தமிழ்ச்சமூகமும் எழுந்து நிற்கும் தமிழ்த்தாய் வாழ்த்திற்கோ செம்மொழிப் பாடலுக்கோ அவர் (ராஜா) இசையமைக்க முடியாமல் போனது துரதிர்ஷ்டம் என்றும் அந்த வாய்ப்பை காலமோ அரசியலோ அவருக்கு  வழங்கியிருக்கலாம் என்கிறார் யுகபாரதி. 

அது போலோரு வாய்ப்பு இளையராஜாவுக்கு இனியேனும் அமையுமா எனத் தெரியவில்லை.

Book Reference. ISAI ALLADHU ILAYARAAJA (Tamil Edition by Yuga Barathi). Kindle Edition. 

Thursday, March 10, 2022

செந்தமிழ் நாடெனும் போதினிலே..

செந்தமிழ் நாடெனும் போதினிலே  பாடலை எழுதியது மகாகவி பாரதியார் என்பது  பலருக்குத் தெரியும்.  ஆனால், அந்தப் பாடல் பிறந்த கதை  நம்மில் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அந்தப் புகழ்பெற்ற பாடல் ஒரு போட்டிக்காக பாரதியால்  எழுதப்பட்டிருக்கிறது.  ஆமாம், அந்த நாளில் மதுரைத் தமிழ்ச் சங்கத்தை முன்னின்று நடத்திக் கொண்டிருந்தவர் பாண்டித்துரைத் தேவர் எனும் பெருமகனார். அவர் ஒரு போட்டி ஒன்றை நடத்தி இருக்கிறார்.




அதன்படி, தமிழ்நாட்டைப் பற்றிச் சுருக்கமாக எல்லோரும் பாடக்கூடிய மெட்டில் பாட்டு எழுதி அனுப்புக. நல்லதற்குப் பரிசு தருகிறோம் என அறிவித்திருக்கிறார்.

அந்தப் போட்டியில் பாரதியைக் கலந்து கொள்ளும்படி பாரதிதாசனும், இன்னும் சிலரும் அவரை வற்புறுத்தி வேண்டியிருக்கிறார்கள். அதற்காக எழுதப்பட்ட பாடல்தான் நாம் இன்று இன்புற்று பாடி மகிழும்செந்தமிழ் நாடெனும் போதினிலே என்ற அந்தப்பாடல்.

ஆதாரம்-பாரதிதாசனோடு 10 ஆண்டுகள்- ஈரோடு தமிழன்பன் (விழிகள் பதிப்பகம்)



























































































































































































ம் என அறிவித்திருக்கிறார்.

அந்தப் போட்டியில் பாரதியைக் கலந்துகொள்ளும்படி பாரதிதாசனும் இன்னும் சிலரும் வற்புறுத்தி ஒரு பாடல் எழுத வேண்டி இருக்கிறார்கள். அப்படி எழுதப்பட்டதுதான் நாம் இன்று பாடி இன்புறும் செந்தமிழ் நாடெனும் போதினிலே பாடல்.

ஆதாரம் - பாரதிதாசனோடு 10ஆண்டுகள் ஈரோடு தமிழன்பன் (விழிகள் பதிப்பகம்)