Wednesday, February 22, 2017

வன நாயகன் குறித்து-2 (விட்டதை, வன நாயகனில் பிடித்து விட்டார்)

"வனநாயகன்-மலேசிய நாட்கள் குறித்து எழுத்தாளர் அரசன் (இண்ட முள்ளு நூலாசிரியர் ) முகநூலில் பகிர்ந்தது.

*******************************************************************
வன நாயகன் - ஆரூர் பாஸ்கர் பங்களா கொட்டா நூலின் வாயிலாக அறிமுகம் ஆனவர், அமெரிக்க மண்ணில் இருந்துகொண்டு தமிழ் வளர்க்கும் மனிதர். தனது இரண்டாவது தொகுப்பு "வன நாயகனை" கிழக்கு பதிப்பகத்தின் மூலம் கொண்டு வந்திருக்கிறார். பங்களா கொட்டாவில் விட்டதை, வன நாயகனில் பிடித்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

கும்பகோணத்திற்கு பக்கத்திலுள்ளா ஊரிலிருந்து சுதாங்கன் எனும் இளைஞன் பணி நிமித்தமாக மலேசியா செல்கிறான், சில மாதங்களில் எவ்வித முன்னறிவிப்புமின்றி நிர்வாகத்தினரால் நீக்கப் படுகிறான், தான் நீக்கப்பட்ட காரணத்தை அறிய பயணப்பட்டு, அதற்கான விடைகளை அறிய முற்படுவது தான் நாவலின் சாரம்சம்.
ஒரு இக்கட்டில் சிக்கிக் கொண்டு அதிலிருந்து மீள ஒருவன் என்ன என்ன முயற்சிகள் எடுக்கிறான் என்பதை அவ்வளவு நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார். படித்தது போதும் மீதியை நாளை படித்துக் கொள்ளலாம் என்கிற எண்ணத்தினை வரவழைக்காமல் அடுத்தடுத்து நம்மை நகர்த்திச் செல்லுதலில் இருக்கிறது நாவலின் வெற்றி, அந்த வேகம் வன நாயகனிலும் இருக்கிறது.


நிர்வாக அரசியல், இடம்பெயர்ந்து வேலைக்கு செல்லும் மனிதர்களின் மன நிலை, அங்குள்ள மக்களின் வாழ்வியல் பழக்கங்கள், கடற்கரை பற்றிய நுணுக்கமான வரலாறு, காடுகளின் வளங்களை சூறையாடும் பெரு முதலாளிகளின் அரசியல் என்று ஒவ்வொன்றையும் நிதானமாக பதிவு செய்திருக்கிறார். வெறுமனே கதையை நகர்த்திவிடாமல் வாசிப்பவரையும் அதனோடு பயணிக்க வைத்திருக்கும் செய் நேர்த்திக்கு வாழ்த்துக்கள் பாஸ்கர். தொடர்ந்து இயங்குங்கள், இன்னும் நிறைய படைப்புகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்...

*******************************************************************

2 comments:

  1. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி பாரதி. அடிக்கடி வாருங்கள் !! :)

      Delete