Wednesday, November 15, 2017

எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ்

எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் குறித்து சமீபத்தில் எழுத்தாளர் நண்பர் கார்த்திக் புகழேந்தி ஒரு முகநூல் பதிவு எழுதி அவரைப் பற்றிய நினைவுகளைக் கிளரிவிட்டிருந்தார்.

ஸ்டெல்லா புரூஸ் எனக்கு 90களில் வெகுஜன இதழில்களின் வழியாக அறிமுகமானவர். அவருடைய பெயரில் இருக்கும் வசிகரத்தால்தான் நான் முதலில் ஈர்க்கப்பட்டேன் எனச் சொன்னால்
சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.
( இயற்பெயர்- ராம் மோகன்).

நெஞ்சதைத் தொடும் பல சிறுகதைகள், புதினங்கள்(நாவல்கள்) எழுதி
புகழ் அடைந்த அந்த எழுத்தாளர் தனது 67வது வயதில் (2008) தனது மனைவி இறந்தச் சோகத்தால் தற்கொலை செய்து கொண்டார் என்பதை மட்டும் ஏனோ மனம் நம்ப மறுக்கிறது. ஆனாலும், பல  மனிதமனங்களின் உள்ளடுக்களில் சஞ்சாரிக்கும் ஒரு எழுத்தாளனின் வாழ்க்கையில் இத்தகைய விநோதங்கள் சாத்தியமே எனும் குரலும் என்னுள் கேட்கத்தான் செய்கிறது.

அவர் தன் கடைசிகாலத்தில் வறுமையில் வாடிக்கொண்டிருந்தார் எனும்
செய்தி மேலும் துயரமளிப்பதாக இருக்கிறது.

அவருடைய "25 வருடக் கதை" எனும் சிறுகதையை முடிந்தால் வாசித்துப்பாருங்கள்.  அது வசதிவாய்ப்பிற்காக, தன் கொள்கைகளை விட்டு ஒரு பணக்கார வீட்டில் பெண் எடுத்து திருமணம் செய்து கொள்ளும் ஒரு டாக்டரின் கதை. நல்ல கதையம்சம். செறிவான எழுத்து.

நன்றி- படங்கள் இணையம்.


1 comment: