Friday, June 15, 2018

தேசத்துரோகி - எழுத்தாளர் ஷோபா சக்தி

எழுத்தாளர் ஷோபா சக்தியின் தேசத்துரோகி  சிறுகதைத் தொகுப்பு வாசித்தேன்.

தொகுப்பில் மொத்தமாக 14 சிறுகதைகள். அகதிகளாக வெளிநாடுகளுக்கு குறிப்பாக பிரான்சின் பாரிசுக்கு புலம் பெயரும் ஈழத் தமிழர்களின் வாழ்வியலை இந்தச்  சிறுகதைகளின் வழியாகப் பதிவு செய்திருக்கிறார்.
இதில் பிச்சைக்காரர்கள், விசா ஏஜண்டுகள், ஹோட்டல் அடுப்படியில் பாத்திரம் சுத்தம் செய்பவர்கள்,குடிகாரர்கள் என ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு விதமான விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்கிறார்.

தொகுப்பைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய அம்சமும் இதுவாகதான் இருக்கிறது. அதாவது தமிழ் எழுத்துலகில் இதுவரை  பதிவுசெய்யப்படாத கதைக்களம், கதைமாந்தர்களைத் தேர்வுசெய்தது. கதைமொழி ஈழத்தின் பேச்சுவழக்கு என நினைக்கிறேன். ஆனால்,  எழுத்துநடையில் தொடர்ந்தார்போல ஒரு மெல்லிய பகடி நடை இருப்பதாலோ என்னவோ ஒரிருக் கதைகளைத் தவிர வேறு எதுவும் என் மனதில் நிற்கவில்லை.

சமீபத்தில் அவருடைய பாக்ஸ் கதைப்புத்தகத்தை வாசித்து வியந்த எனக்கு இந்தத் தொகுப்பு ஏமாற்றமே.  என்னைப் பொறுத்தவரை
சிறப்பாக அமைந்தக் கதைகள் தேவதை சொன்ன கதை, பகுத்தறிவு பெற்ற நாள்.





2 comments:

  1. நல விமர்சனம்,
    புத்தகம் கிடைக்கும் போது படிக்க வேண்டும்/

    ReplyDelete