Sunday, January 21, 2024

வனநாயகன் குறித்து-31 (இலக்கிய சுவையும், அறிவின் தெளிவும் பெற்றேன்)

ஒரு படைப்பாளிக்கு அதிக மகிழ்ச்சி தரும் விசயம் என ஒன்றிருந்தால் அது பாராட்டாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். அது முகம் தெரியாத மனிதர்களிடம் இருந்து வரும்போது இன்னமும் சிறப்பானதாகிறது.

அமெரிக்கா வந்த ஒரு அன்பர் வழியாக மலேசியா பயணப்பட்ட எனது வனநாயகன்(மலேசிய நாட்கள்) நாவல் ஒரு சிராம்பன் நண்பரை நெகிழச் செய்திருப்பது மகிழ்ச்சி (படம்). 


சிரம்பான் (Seremban) நகரம் மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் இருக்கிறது. வனநாயகன் வந்ததிலிருந்தே அது குறித்து பல நல்ல அபிப்பிராயங்களை தொடர்ந்து  கேட்டுக்கொண்டேயிருக்கிறேன். வனநாயகன் மலேசியர்களுக்கானது மட்டும் இல்லை. தமிழர்களுக்கானது. வெளியீடு- கிழக்கு பதிப்பகம்.



No comments:

Post a Comment