Sunday, July 6, 2014

நடிகர் கமலும் ஜன்னலும்

என்னுடய "என் ஜன்னல் வழிப் பார்வையில்" கவிதைத் தொகுதியை
பரிசாக பெற ட்வீட் கவிதைப் போட்டியை முன்னேர் பதிப்பகம்  அறிவித்து இருந்தது.  மேலும் விவரங்கள் இங்கே

http://munnerpathippagam.wordpress.com/2014/06/30/ejvptwpt/

இப் போட்டிக்கான மூன்று வெற்றிக் கவிதைகளை தேர்ந்தேடுக்கும் பொறுப்பை   நண்பர் திரு.சொக்கன் என்னிடம் விட்டு விட்டார்.
எதிர்பார்த்ததை விட அதிக படைப்புகள், கொஞ்சம் சிக்கலான வேலைதான்.
:) போட்டியின் முடிவுகளுக்கு செல்லும்முன் ஜன்னல் பற்‌றி சில வார்த்தைகள்.

"ஜன்னல்"  என்ற சொல்லே வசீகரமானதாகவும் அதில் ஓரு மந்திரம்  இருப்பதாகவும் எண்ணுகிறேன்.

அதில் ஒரு நெடும் கனவு, நிறைவேறாத ஆசை, பொழுதுபோக்கு என சகலமும் சம்பந்தப்படுகிறது. அதனாலயே ஜன்னல் என் நெஞ்சுக்கு நெருக்கமானதாக ஒரு எண்ணம். கண்டிப்பாக உங்கள் வாழ்விலும் ஜன்னல் பற்றிய ஏதேனும் ஒரு நினைவு இருக்கும். அது வீடு,பள்ளி,கல்லூரி அல்லது
ரயீல், பேருந்து என எதனுடாவது தொடர்புகொண்டு இருக்கும்.

மேலும் மொழி வேறுபாடின்றி  ஜன்னல் பற்‌றி எழுதாத கவிஞர்கள் இல்லை என்றே சொல்லலாம். "ஜன்னல்"  பற்றி பல  கவிதைகள் மற்றும் கதைகளையும் கடந்து வந்தாலும் முதலில் மனத்தில் நிழலாடுவது கவிஞர் மு.மேத்தா அவர்களின் இந்த கவிதை.

விழிகள் நட்சத்திரங்களை வருடினாலும்
விரல்களென்னவோ
ஜன்னல் கம்பிகளோடுதான்.
-
கவிஞர்மு.மேத்தா


இது ஒரு மூச்சில் படித்து விட்டு, நாம் கடந்து செல்ல கூடிய கவிதையல்ல,  ஆயிரம் கதை சொல்லக் கூடியது. மன ஏக்கத்தை மிக அழகாக சொல்கிறது.

என்னை கவர்ந்த இன்னொரு "ஜன்னல்" கவிதை நடிகர் கமல் எழுதியது.
(பஞ்சதந்திரம் படப்பிடிப்பின் போது கனடாவில் அவர் எழுதியதாக,
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் குமுதம் நாளிதழில் படித்த
நினைவு)

என் ஜன்னல்வழிப் பார்வை
கலிலியோவின் உலகை சதுரமாக்கியது
-உலக நாயகன் கமல்ஹாசன்


இந்த இருவரிகளும் ஆழ்ந்த கருத்துடையது. இந்த வரிசையில் என்னுடைய "ஜன்னல்" முயற்சியை இங்கே ஓலி வடிவில் கேட்டு மகிழுங்கள்.



இந்தியாவில் நூல்களை வாங்க:
600024.com/store/en-jannal-vaz…-munner-pathippagam
USAவில் நூல்களை வாங்க (PayPal):
Facebook fan page:www.facebook.com/ejvpbook
கவிதை போட்டியின் முடிவுகள் மிக விரைவில். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மிகநன்றி, வென்ற மூவருக்கும் என்  அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

போட்டி முடிவுகள் இதோ :
http://munnerpathippagam.wordpress.com/2014/07/10/ejreslts/

அன்புடன்,
ஆரூர் பாஸ்கர். 

No comments:

Post a Comment