Wednesday, September 30, 2015

தமிழர் (பண்)பாடு - வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை

மக்களே, "வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டைக்கு" கடைசி நாள் என்பதால் துரிதமாய் 30 நிமிடங்களில் எழுதியது.

வகை-(4) புதுக்கவிதைப் போட்டி
முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை - 
அதற்கான உறுதி மொழி:

1) படைப்பு எனது சொந்தப் படைப்பே. 

(2) இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது”. 

(3) “இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது“.


தமிழர் (பண்)பாடு
--

பண்பாடு நம் பண்பாடு
பார் போற்றும்- தமிழ் பண்பாடு,
கொண்டது நம் தென்னாடு

(பண்) பாடு நீ (பண்)பாடு
பாண்டிய,சேர, சோழன்
தாண்டியது நம் பண்பாடு

தாய்மொழி போற்றும்
பண்பாடு
அது தமிழ்ச்சங்கம் வளர்த்த
பண்பாடு

வந்தாரை வாழ வைக்கும்
பண்பாடு - அது
உலகம் அறிந்த கண்கூடு

அன்பில் சிறந்த பண்பாடு
அது பெண்ணை போற்றும்  பண்பாடு
வீரத்தில் சிறந்த பண்பாடு
விருந்தோம்பல் விரும்பும் பண்பாடு

வாழ இலக்கணம் சொன்ன
இணையில்லா பண்பாடு.


பண்பாட்டு எதிரிகளை 
கண்டால், நீ 
விடாது பந்தாடு

எட்டு திக்கும் சென்ற நீர்
எட்டு திக்கும் எட்ட
பாடு,  தமிழ் (பண்)பாடு
என்றும் தமிழர் பண்பாடு. 


-ஆரூர் பாஸ்கர்


No comments:

Post a Comment