Monday, March 13, 2017

வனநாயகன் குறித்து (4) ஆல்பி அவர்கள்

"அத சொன்ன வாய்க்கு முதல்ல சக்கரை போடனும் " என்றோரு பதம்
ஊர் பக்கம் சொல்வார்கள்.  அதாவது ஒரு விசயம்  ஒருவர் சொன்னதுபோல் நடந்துவிட்டால் சொன்னவரை பாராட்டும் விதத்தில் அப்படிச் சொல்வார்கள்.

வனநாயகன் புதினத்தின் (நாவல்) உயரத்தை முதலில் சரியாக கணித்தவர் என்ற முறையில்   நான் முதலில் சர்க்கரை போட நினைப்பது எனது நீயூயார்க் நண்பரும் பதிவருமான ஆல்பி (நியூயார்க் பரதேசி) அவர்களுக்கு தான்.  வனநாயகனை முன்வைத்து அவர் எழுதிய வலைப்பதிவு  இங்கே.

http://paradesiatnewyork.blogspot.com/2017/03/blog-post_9.html

நாவலுக்கு பல பாராட்டுகள் வரும் இந்தத் தருணத்தில் அவரைப் பற்றி -

ஆல்பி பதிவுலகத்தின் மூலம்  எனக்கு அறிமுகமானவர்.   நியூயார்க்கில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் மனிதவளத்துறையின் உயர்பதவியில் இருக்கிறார்.   இலக்கியத்தில் நல்ல பரிச்சம் உள்ளவர்.  சிறப்பான பயணக்கட்டுரைகள் எழுதக்கூடிவர். இளையராஜாவின் தீராத ரசிகர். மேடை பேச்சாளர் எனச் சொல்லிக் கொண்டே போகலாம்.  முக்கியமாக  தொடர்ந்து வாசிப்பவர்.  ஒரு முறை பேச்சினூடே தனது லைப்ரரி கலெக்சனுக்கு வீட்டில் இடமில்லாமல் தனது நூற்றுக்கணக்கான தமிழ் புத்தகங்களை உள்ளூர் தமிழ்சங்கத்துக்கு நன்கொடையாக தந்ததை நினைவு கூர்ந்தார். அந்த அளவுக்கு வாசிப்பில்  ஆர்வமும், ஈடுபாடும் கொண்டவர்.

அவர்தான் எனது எழுத்துகளை விடாமல்  வாசித்து தொடர்ந்து உற்சாகப்படுத்தி வனநாயனின் எல்லா கட்டங்களிலும் உறுதுணையாக இருந்தவர்.  தமிழில் இதுவரை எழுதப்படாத கதைக்களன்.  முற்றிலும் மாறுபட்ட கதைக்கரு. மனிதர்களுடன் நெருக்கமாக பேசும் பாணி. பலவிதங்களில் வித்தியாசம் எனச் சொல்லி என்னை இயக்கியவர்.

" மலேசியாவுக்கு ஒருநாளைக்கு எத்தன ஆயிரம் பேர் போறான் ? எத்தன பேர் அனுபவத்தை எழுதுறான் ? எத்தன பேருக்கு அந்த நாட்டை பத்தி சரியா தெரியும். உங்களுக்கு நல்லா எழுத வருது.  கண்டிப்பாக எழுதுங்க". என தோள் கொடுத்தவர்.

எழுதவேண்டும் எனும் ஆர்வம் ஒருபுறம்   இருந்தாலும் அவர்
வைத்த நம்பிக்கையை காப்பாற்றவேண்டும் எனும் எண்ணம் எனக்கு ஒரு கூடுதல் வேகம் வந்தது.  அந்த வேகமே இரவுபகலாக மலேசியா தொடர்பான பல புத்தகங்களைத் தேடி தேடி வெறித்தனமாக படித்து எழுத வைத்தது.

அவர் ஒரு விசயத்தில் மட்டும்  உறுதியாக இருந்தார். அவர்  நல்ல எழுத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க ஒரு பிரபல பதிப்பகம் கண்டிப்பாக அவசியம் என திடமாக நம்பினார்.   அந்தவிதத்தில் என்னை கிழக்கு பதிப்பகத்தை அணுகச் சொல்லி வழிகாட்டியவரும் அவரே.

வனநாயகன் தொடர்பாக கிழக்கு பதிப்பகத்துக்கு நன்றிசொல்லும் அதேவேளையில் இன்று ஆல்பியையும் இன்னும் ஓரிரு நண்பர்களையும் நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன்.

அவருக்கு நன்றி சொல்லும் அதேவேளையில் இதுபோன்ற நட்புகள் கடல்கடந்த தேசத்தில் கிடைப்பது அரிது என்பதையும் தெரிந்திருக்கிறேன். நன்றி ஆல்பி சார் !!

2 comments:

  1. உங்களுக்கு எழுத்து நன்றாக வருகிறது , தொடர்ந்து எழுதுங்கள் பாஸ்கர் .

    ReplyDelete
  2. Dear Admin,
    Greetings!
    We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website to reach wider Tamil audiance...

    தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

    நன்றிகள் பல,
    நம் குரல்
    Note: To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

    ReplyDelete