Friday, March 3, 2017

வனநாயகன் குறித்து-3 (இவன் பல நாடுகளைச் சுற்றுவான்போல் தெரிகிறது)

"வனநாயகன்: மலேசிய நாட்கள்"  நாவல் குறித்து நண்பரும்  எழுத்தாளருமான என்.சொக்கன் தனது முகநூலில் பகிர்ந்தது.


******************************************************************************
ஆரூர் பாஸ்கரின் சமீபத்திய நாவலான ‘வனநாயகன்: மலேசிய நாட்கள்” படித்தேன்.
அடிப்படையில் இது ஒரு த்ரில்லர்தான். மென்பொருள்துறைப் பின்னணி என்பதால், கொஞ்சம் கணினி/இணையப் பாதுகாப்புபற்றிய விஷயங்களைத் தொட்டுக்கொண்டிருக்கிறார்.

மற்றபடி, ‘யார் இதைச் செய்தார்கள்?’ என்கிற துரத்துதல்தான்.
ஆனால், மற்ற த்ரில்லர்களிலிருந்து இதனைப் பிரித்துக்காட்டுபவை இரு விஷயங்கள்:

முதலாவதாக, நாவலுக்குள் ஒரு சுற்றுலாக் கையேடுபோல மலேசியாவின் பல்வேறு முக்கியமான பகுதிகளைச் சரித்திரத்துடன் அறிமுகப்படுத்துகிறார், அது துருத்திக்கொண்டு நிற்காமல் கதையோடு கலந்து அமைகிறது. நாயகன் மர்மத்தைத் துப்புத்துலக்குவதற்காக மலேசியாவைச் சுற்றிவந்துவிடுகிறான், நாவலின் சூசகமான தலைப்பைப் பார்த்தால் வருங்காலத்தில் இவன் இன்னும் பல நாடுகளைச் சுற்றுவான்போல் தெரிகிறது!

இரண்டாவதாக, என்னதான் த்ரில்லர் என்றாலும், நல்லவன், கெட்டவன் கோட்டைக் கொஞ்சம் மசங்கலாகவே அமைத்திருக்கிறார். பாத்திரங்கள் அனைத்திலும் நல்லவையும் உள்ளன, கெட்டவையும் உள்ளன, அவ்விதத்தில் எனக்கு இது கொஞ்சம் நெருக்கமாகத் தோன்றியது.

*********************************************************************************

No comments:

Post a Comment