Tuesday, April 3, 2018

அழியாச் சுடர் - ஜி.நாகராஜன்

'மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்' என எழுதி நம்மில் நீங்காத இடம்பிடித்த
எழுத்தாளர் ஜி.நாகராஜன் குறித்த "அழியாச் சுடர்" கட்டுரையை வாசித்தேன் (2017-டிசம்பர் தடம் இதழ்).

இதுவரை ஜி.நாகராஜனை வாசிக்காதவர்களையும் வாசிக்கத்தூண்டும் அருமையான கட்டுரை. கண்டிப்பாக பாதுகாக்கப்படவேண்டிய ஒன்று. ஒரு ஆளுமையைப் பற்றியும் அவருடைய படைப்புகளைப் பற்றியும் எப்படி எழுதவேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளவாவது இந்தக் கட்டுரையை வாசிக்கவேண்டும். ஜி.நாகராஜனின் படைப்புகளை ஆழ்ந்து வாசித்த ஒருவரால் மட்டுமே இந்தப் பங்களிப்பைச் செய்திருக்க முடியும். அந்தவகையில் கட்டுரையை எழுதிய ஆசிரியர் சி.மோகன் பாராட்டுதலுக்கு உரியவர். கட்டுரைக்கு பொருத்தமான ஒவியம் கூட அருமை.

நல்ல இலக்கிய ஆளுமைகளை அடையாளம் காட்டும் தடம் இதழுக்கும் வாழ்த்துகள்!


No comments:

Post a Comment