Monday, April 30, 2018

புதுமைப்பித்தனும் ஆண்டன் செகாவும்

புதுமைப்பித்தனின் "கல்யாணி "(1935) , ரஸ்ய எழுத்தாளர் ஆண்டன் செகாவின் "நாயுடன் வந்த பெண்" (The Lady with the dog) சிறுகதையையும் ஆங்கிலத்தில்  (1899) ஒருசேர வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

மேலோட்டமாக இரண்டு கதைகளையும்  பார்த்தால், திருமண வாழ்வில் திருப்தி அடையாத குடும்பப் பெண்களின் வாழ்வில் நுழையும் ஒர்
ஆணை அவர்கள் எதிர்கொள்வது தான் கதை.

இந்த இரண்டு கதைகளுக்கும் நடுவில் ஏறக்குறைய தலைமுறை இடைவெளி இருக்கிறது. இப்படித் தலைமுறைகள் மாறினாலும் சில
விசயங்களில்  மனிதர்களின் போக்கும் உளவியலும் ஒரேமாதிரியாக இருக்கிறது என்பது புரிகிறது.  அதாவது  எளிய மனிதர்கள் என்றும் புறத்தூண்டல் வயப்படக் கூடியவர்களாக இருக்கிறார்கள். அவர்கள்
உலகம் சொல்லும் இலட்சியவாதம் எனும் பொதுபுத்தியில் இருந்து விலகியிருக்க வாய்ப்பிருக்கிறது.

அதுபோல  பெண்களும் எப்போதும் நாம் எதிர்பார்க்கிறபடி நடந்துகொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் எதுவும் இல்லை; அவர்களுடைய நினைப்பும் போக்கும் தனித்தன்மை உடையதாக இருக்கக்கூடும் என்பதையும் இரண்டு கதைகளும் உணர்த்துகின்றன.

இரண்டு கதைகளும்  இணையத்தில் கிடைக்கிறது. வாய்ப்பிருந்தால்
வாசியுங்கள்.

http://www.chennailibrary.com/ppn/story/kaliyaani.html
http://lekhabooks.com/novels/501-naayudan-vantha-penn

1 comment: