Friday, June 1, 2018

போர்னியோ தீவின் குரங்குகள்

படத்தில் நீங்கள் பார்க்கும் தீவு போர்னியோ (Borneo).  இந்தத் தீவின்
வளங்கள் படிப்படியாக அழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை விளக்கும் ஒரு ஒப்பீட்டுப் படத்தை மலேசிய நண்பர் ஒருவர் அனுப்பி இருந்தார். போர்னியோ பற்றிய தெரியாதவர்களுக்காக..

போர்னியோ-  வஞ்சனையில்லாமல் இயற்கை எழில் கொஞ்சும் தீவு.
முழுமையும் பசுமையான மழைக்காடுகள். மலேசியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் நடுவில் அமைந்திருக்கும் இந்தத் தீவை இந்தோனேசியா, மலேசியா, புரூணை போன்ற மூன்று நாடுகள் சொந்தம் கொண்டாடுகின்றன. இது  உலகின் மூன்றாவது பெரிய தீவும் கூட (முதல், இரண்டாம் இடத்தில் முறையே கிரீன்லாந்து, புதிய கினியாவும் இருக்கின்றன)

போர்னியோவின் சிறப்பம்சம் அங்கிருக்கும் பழமையான மழைக்காடுகளில் வாழும் "ஓராங் ஊத்தான்" எனும் மனிதக் குரங்குகள். ஆங்கிலத்தில் "ஒராங்குட்டான்" (orangutan) . செம்மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்தக் குரங்குகள் மிகவும் சுறுசுறுப்பானவை. பழங்கள், மரப்பட்டை, இலைகள் இதன் உணவு.

துரதிஷ்டவசமாக மற்ற கிழக்காசிய நாடுகளைப் போலவே மலேசியாவும், இந்தோனேசியாவும் போட்டி போட்டு பல்லாண்டுகளாக இத்தீவின்  இயற்கை வளங்
களைச் சூரையாடி வருகின்றன. அதனால்,  தங்கள் வாழ்வாதரத்தை இழந்த பல லட்சம் ஒராங்குட்டான் குரங்குகள் செத்து மடிந்துகொண்டிருக்கின்றன.


எனது வனநாயகன் நாவல் பேசும் அரசியலும்  அதுதான்.   புத்தகத்தின்  அட்டைப்படத்தில்  இருப்பதுகூட இந்த "ஒராங்குட்டான்" குரங்கு தான்.
தங்கள் இருப்பிடத்தை விட்டு விரட்டப்பட்டு, வேட்டையாடப்படும் இந்தக் குரங்குகள் படும்பாட்டை கதையோட்டத்தோடு சொல்லி இருப்பேன். சர்வதேச அளவில் அழிந்து வரும் அரியவகை விலங்காக இவை அறிவிக்கப்பட்டிருந்தாலும் மனித அட்டூழியங்கள் தொடரத்தான் செய்கின்றன. அதன் உச்சமாக இந்தக் குரங்குகள் இந்தோனேசியா போன்ற நாடுகளில் விபச்சாரத்துக்கு பயன்படுத்தப்படுகிறன போன்ற அதிர்ச்சிகர தகவல்களும் அதில் உண்டு.

***
"வனநாயகன்-மலேசிய நாட்கள்"  வாங்க

வனநாயகன்  இப்போது கூகுள் புக்ஸிலும் கிடைக்கிறது
https://books.google.com/books?id=QqfVCwAAQBAJ&printsec=frontcover&dq=%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D&hl=en&sa=X&ved=0ahUKEwjOr_emlbLbAhXP21MKHV9WCLUQ6AEIKTAA

1 comment: