Wednesday, February 17, 2021

டெக்சாஸில் வரலாறு காணாத பனிப்புயல்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வரலாறு காணாத கடுங்குளிர். உறைய வைக்கும் குளிரோடு கூடவே தொடர்ச்சியான பனிப் பொழிவால் ஏராளமான சாலை விபத்துகள், உயிர் இழப்புகள் என அங்கு நெருக்கடியான சூழல் நிலவுகிறது. 


இரயில், விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருக்கிறன. கல்விக் கூடங்கள், அரசு அலுவலகங்கள் இயங்கவில்லை.  அவசர நிலைப் பிரகடனம் செய்திருக்கிறார்கள். உதவிக்கு இராணுவமும் களத்தில் இறக்கியிருக்கிறது.

தொடர்ச்சியாக உறைய வைக்கும் குளிர் காற்று வீசிக்கொண்டிருப்பதால் வீடுகளின் மின்சாரத் தேவை அதிகரித்திருக்கிறதாம்.  அதனால் வந்த மின்தட்டுப்பாட்டால் மின்வெட்டு வேறு. ஓரிரு நாட்களுக்குச் சுழல் தான் முறையில் மின்சாரம் என்கிறார்கள். இங்கே சகலமும் மின்சாரத்தில் இயங்குவதால்,  மின்சாரம் இல்லாத அமெரிக்க வாழ்வை நினைத்துப் பார்க்கவே முடியாது. 

ஹூஸ்டனில் இருக்கும் ஒரு நண்பரிடம் பேசினேன். மின்சாரம் இல்லாததால் இரண்டு நாட்களாக சமைக்க அடுப்பு பற்றவைக்க முடியவில்லை. வெளியில் போய் சாப்பிடவும் வழியில்லை. வெப்பம் உறைநிலைக்குக் கீழே சென்றதால் வீட்டுக்குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. வெளியே சாலைகளில் போக்குவரத்து விளக்குகள் எரிவதில்லை.... என மிக நீண்ட கஷ்டப்பட்டியல் வைத்திருக்கிறார்.

இயற்கை என்ற ஒன்று இருப்பதும். அதனோடு மனிதன் இயைந்து வாழ்வது அவசியம் என்பதையும் இதுமாதிரியான நெருக்கடி காலங்களில் கண்டிப்பாக உணரமுடியும் என்பது நிதர்சனம்.  

கடுங்குளிர், பனிப்பொழிவோடு கடுமையான மின்வெட்டையும் எதிர்கொள்ளும் டெக்சாஸ் மாநில அன்பர்கள் விரைவில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப விழைகிறேன்.

இது குறித்த ஒரு காணொளி https://youtu.be/qMivwXOfOmM

No comments:

Post a Comment