Wednesday, May 31, 2023

வீரப்பன் - தீதும் நன்றும்

மிழில் சினிமா, அரசியல் இரண்டும் யூ-டியூபின் இரண்டு கண்கள் என்றால் மூன்றாவது கண் வீரப்பன் விவகாரமாகதான் இருக்கும் என நினைக்கிறேன். அந்த அளவுக்கு தினமும் மக்கள் பரபரப்போடு இணையத்தில்  இதைக் கவனிக்கிறார்கள். வீரப்பன் மரணமடைந்து சுமார் 18 ஆண்டுகளுக்கு மேல் ஆன பின்பும் மவுசு குறைந்ததாக தெரியவில்லை.


'வீரப்பனாரு'க்கு சமைத்தவர், வீரப்பனைத் தூரத்தில் நின்று பார்த்தவர், கடந்து போன பின் காலடித்தடத்தைப் பார்த்தவர், சந்தேக வழக்கில் சிக்கியவர், வீரப்பனின் ஒன்றுவிட்ட சித்தாப்பாவின் பேரன், அங்காளி, பங்காளி ஊர்க்காரர், உறவுக்காரர், சலவைக்காரர் என சகலமானவர்களையும் காடுகளுக்குள் புகுந்து நேர்காணல் எடுத்து போடுகிறார்கள். அந்த  அளவுக்கு மக்களிடம் வரவேற்பு. 

ஏன், பொன்னியின் செல்வன் படத்துக்கு பின் தமிழில் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைச்சித்திரம்‘வீரப்பன் வாழ்க்கை’ வரலாறாக இருக்கும் போல. நெப்போலியனின் ‘சீவலப்பேரி பாண்டி’ சக்கைபோடு போட்டதை இங்கே நினைத்துப் பாருங்கள். (வீரப்பன் தொடர்பான  40-50 ஆண்டுகால நிகழ்வுகளை  சமூகபார்வையில் அணுகி ஏன் உருப்படியான ஓர் ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பிக்கக் கூடாது ?).

இதெல்லாம் போதாதென்று, சிலர் வீரப்பன் காட்டு பழங்குடியினருக்கு உதவுகிறோம் பேர்வழி என பணம் வசூலித்து மோசடி செய்வதாகவும் சொல்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல், வீரப்பன் மறைவுக்கு பின் வெளியாட்கள் பலர் தைரியமாக காடுகளுக்குள் நுழைந்து ஆழ்துளை கிணறு, நீர்முழ்கி மோட்டார் என சகட்டு மேனிக்கு நீரை  உறிஞ்சி இயற்கைக்கு புறம்பான விவசாயம் செய்கிறார்களாம்.

அதுபோல, வீரப்பன் மறைந்து வாழ்ந்த காட்டை மையப்படுத்தி  சுற்றுலா கொண்டுவரும் திட்டம் வேறு சிலருக்கு இருக்கிறதாம். அப்படி, ஏதாவது வந்தால் உல்லாசப் பயணம் என்ற போர்வையில் வெளியாட்கள் உள்ளே புகுந்து இன்னமும் இயற்கை வளத்தை அழிப்பார்கள். பாவம் அங்கே எஞ்சி நிற்கும் உயிரினங்கள்.

இப்படிச் சுதந்திரத்துக்கு முன் ஆங்கிலேயர் அழித்த காடுகளின் பரப்பளவு ஒன்பது சதவிகிதம் எனில் மீதமுள்ளதை அழித்துக் கொண்டிருப்பது நாமே.

#தீதும்நன்றும்

படம் நன்றி- இணையம்.


No comments:

Post a Comment