Wednesday, January 7, 2015

சென்னை புத்தகக் கண்காட்சியும் Mark Zuckerbergம்

 சென்னை புத்தகக் கண்காட்சி இந்த வருடம் ஜனவரி  9- முதல், 21-ம் வரை சென்னை ஒய்.எம்.சி.ஏ. கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. பொதுவாக ஜனவரி  துவக்கத்தில் சென்னையில் மட்டும் தான் புத்தக  ஜுரம் இருக்கும்.

ஆச்சர்ய படும்படி இவ்வாண்டு இந்த ஜுரம் உலகம் முழுமையும் தொற்றி விட்டது. உபயம் ஃபேஸ் புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்.

புத்தக கிளப் எனும் கான்செப்ட்டை இந்த புது வருடத்‌தில் இருந்து துவங்கி இருக்கிறார். ஒவ்வொரு வாரமும்  அவர் படிக்கும் நூல்களை தன்னுடைய முக நூல் பக்கத்‌தில் பகிரவுள்ளார்.  நீங்கள் செய்ய வேண்டியது அவருடைய வாசிப்பு சவாலை பின்பற்றி அவர் தேர்வு செய்த புத்தகங்களை படிக்க வேண்டும்.

அதன்படி  இந்த ஆண்டின் முதல் புத்தகமாக  "The End of Power" யை தேர்வு  செய்துள்ளார். இப்போ இந்த புத்தகத்‌திற்க்கு மார்கெட்டில் ரொம்ப கிராக்கியாம்.  எல்லாம் மார்க்கெட்டிங் ஸ்டண்டா இருக்கலாம்.  அந்த சரஸ்வதிக்கே வெளிச்சம் .   அவருக்கு தமிழ் படிக்க தெரிஞ்சா நம்ம புக்க கூரியர் பண்ணலாம். :)

அது போகட்டும்.

கண்டிப்பாக வரும் இரண்டு மூன்று வாரங்களுக்கு பெரும்பாலும்  தமிழகம் முழுவதும்  எங்கு பார்த்தாலும் புத்தகங்கள் மற்றும் புத்தக வாசிப்பு பற்றிய பேச்சாகதாகத் தான் இருக்கும்.  சாப்பிடாவிடினும் பரவாயில்லை, 'படி' ங்கனு சொல்லுவாங்களே !?

என்னை பொருத்த வரை ஆங்கிலமோ தமிழோ புத்தக வாசிப்பு என்பது ஒரு அனுபவம். யாரோ  சொல்வதால் புத்தகங்களை  பலர் வாங்கலாம்.  ஆனால் மிகச் சிலர் மட்டுமே வாசித்தல், அனுபவம் என அடுத்தக் கட்டத்திற்க்கு
செல்கிறார்கள்.

புத்தகங்களை  வேண்டுமானால் சீசனில் வாங்கலாம் ஆனால் புத்தக வாசிப்பு என்பது  ஓரு சீசனாக இல்லாமல் நம்முடைய தினசரியில் அது ஒன்றி இருக்க வேண்டும். அதை நாம் சிறு வயதில் இருந்தே  வீட்டில் தொடங்குதல் நலம்.  நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் நம்மிடம் வாசிப்பு பழக்கம் மிகக் குறைவு என்பதுதான் உண்மை.

இதற்கு முற்றிலும் பாட புத்தகங்களை மட்டும் சார்ந்து இருக்கும் நமது
கல்வி முறையும் காரணமாக இருக்கலாம். ஆனால்  தயவு செய்து குமுதம்,ஆனந்த விகடன் அல்லது செய்தித்தாள் வாசிப்பை இதனுடன் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம்.

சமீபத்தில் தமிழ் புத்தகங்களின் வாசிப்பு மற்றும் விற்பனை பற்றி ஒரு பதிப்பக நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் சொல்வதைப் பார்த்தால் தமிழ் புத்தகச் சந்தை இந்த ஜனவரி கண்காட்சியை ஒட்டியே பெரும்பாலும் இயங்குகிறது. உதாரணத்திற்கு  ஒவ்வொரு ஆண்டும் தமிழில் வெளியாகும் புதிய நூல்களில் 90% சதவீதம் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் மட்டுமே  "சுட சுட"  அச்சிடப்படுகின்றன.

விற்று தீர்ந்த மீதமே பின் வரும் மாதங்களில்  சில்லறை கடைகள், ஆன்லைன் மற்றும் சிறிய நகரங்களில்   புத்தக கண்காட்சி மூலம் விற்பனையாகுமாம்.

தமிழில் சமையல் மற்றும் சாமி  புத்தகங்களை தாண்டி அதிகம் விற்பனையாவது Non fiction எனப்படுகின்ற புனைக்கதை அல்லாதவை. ரஜினியின் பொன்மொழிகள், திரைக்கதை எழுதுவது எப்படி,  Time Management அல்லது நேர மேலாண்மை, ஜெயிப்பது எப்படி, ஆயுளை அதிகமாக்க அக்குபிரஷர்  போன்ற இத்யாதிகள் இதில் அடங்கும்.

இதில் எதற்கேனும் கடைசியிடம் இருக்குமானால் அது கவிதை தொகுப்புகளுக்கு தான். இப்பொழுதெல்லாம் இளைஞர்கள் யுவதிகளை ஃபேஸ் புக் மற்றும் வாட்ஸ் அப்பில் பிஸியாக  விரட்டிக் கொண்டிருக்கிறார்கள் போல. கவிதைகள் எல்லாம் கொஞ்சம் ஓல்ட் பாஷன். அப்படியே தேவைப்பட்டால் கைவசம் இருக்கவே இருக்கிறது சினிமா பாடல்கள் அப்புறம் என்ன?

கவிதை எனறால் காதல் கவிதைகள் தான் என்ற நியதி ஏனோ தெரியவில்லை.  நல்ல வேலையாக  என்னுடய தொகுப்பில் காதல், இயற்கை, சமூகம் என பலவற்றை வரை தொட முயற்சித்திருக்கிறேன்.

என்னுடைய  'என் ஜன்னல் வழிப் பார்வையில்' புத்தகமும் சென்னை புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு கிடைக்கும்.

ஸ்டால் விவரம்:

a) வீரபாண்டிய கட்டபொம்மன் வீதி, 318-319 ஸ்டால்களில் (ஓவியா பதிப்பகம்) 

b) மகேந்திர பல்லவன் வீதி, 543-544 ஸ்டால்களில்  (டிஸ்கவரீ புக் பேலஸ், Discovery Book Palace) லும் கிடைக்கும்

கண்காட்சியில் எழுத்தாளர்கள் பிரபலங்களின் சந்திப்பு, பலவகையான போட்டிகள், கிராமியக் கலை நிகழ்ச்சிகள், உணவு,சிறப்பு தள்ளுபடிகள் மற்றும்  பல கேளிக்கைகள் உண்டு.  திருவிழா போல ஒரே கொண்டாட்டம் தான் போங்க. ஆம், புத்தக திருவிழா..

வாய்ப்பிருப்பவர்கள் நீங்கள் கொஞ்சம் எட்டிப் பார்க்கலாம். பிடித்திருந்தால் வாங்கி படித்து உங்கள் மேலான கருத்துக்களைச் சொல்லுங்களேன்.

முன்பு சொன்னது போல புத்தக விற்பனையிலிருத்து திரட்டப்படும் நிதி முழுவதும்  சிறகுகள் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கப்படும்.

No comments:

Post a Comment