Sunday, February 1, 2015

சென்னைவாசிகளே உஷார்!

உங்கள் பெயரை சொல்லுங்கள், நான் உங்கள் ஜாதகத்தை சொல்கிறேன்
என்று யாராவது சொன்னால் நம்புவீர்களா ?

ஆனால் உங்கள் உங்கள் பெயரை சொல்லுங்கள், நான் பிறப்புச் சான்றிதலை ( Birth Certificate) தருகிறேன்  என்று யாராவது சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.

ஆம், நீங்கள் சென்னையில் பிறந்திருந்தால் உங்கள் பிறப்புச் சான்றிதல்   அல்லது Birth Certificateடை எவரும் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

அதற்காக நீங்கள் எதுவும் பெரிதாய் பிரயத்தனம் செய்ய தேவையில்லை
சென்னை மாநகராட்சியின் இந்த லிங்கை பார்க்க.

http://www.chennaicorporation.gov.in/online-civic-services/birthCertificate.do?do=show

பிரச்னையே, யாரும் யாருடைய சான்றிதழையும் எந்தவித தடையுமின்றி பெறலாம் என்பதே.

உலகத்தின் எங்கோ மூலையில் இருக்கும் ஒருவரால் சென்னையில் எந்த வீட்டில் குழந்தை பிறக்கிறது.  அது ஆணா,பெண்ணா? அதன் தாய், தந்தை பெயர்கள்,  பிறந்த நாள்,  பிறந்த இடம், முகவரி போன்றவற்றை ஒரு க்ளிக்கில் தெரிந்து கொள்ள இயலும்.

இந்த தகவல்கள் எந்த அளவுக்கு முக்கியம்?

அதை வைத்து எளிதாக இலக்கு மார்க்கெட்டிங் (Target Marketing) செய்ய இயலும். உதாரணமாக  'கடந்த வாரம் பிறந்த உங்கள் பெண் குழந்தைக்கு  தங்கநகை திட்டத்தில் முதலீடு செய்யச் சொல்லி எவரேனும் தங்களின் பிரதிநிதியை உங்கள் வீட்டுக்கு அனுப்பலாம் அல்லது கடிதம் எழுதலாம்'.  கொஞ்சம் அதிகமாக, அருகில் இருக்கும் மருத்துவமனை அல்லது மழலையர் பள்ளி உங்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு பல..

மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு சின்ன விசயமாகக்கூட படலாம்.
கல்லூரி, பள்ளி மாணவன் தான் சைட் அடிக்கும் பக்கத்‌து வீட்டு பெண்ணின் விவரங்களை பெறலாம்  எனத் தோன்றுவது கூட இயற்கை.

மாறாக,  இந்த சான்றிதல் மற்றும் விவரங்கள் மூலம் யாரேனும் உங்கள் பெயரில் வங்கி கடன் வாங்கினால்? செல்போன் இணைப்பு வாங்கினால் ? அல்லது இந்த விவரங்கள் மூலம் உஙகள்  ஆன்லைன் வங்கிக்குள் யாரேனும் அத்துமீறி நுழைந்தால்.  இப்படி பல கில்லாடிதனங்கள் செய்தால் கடைசியில் பாதிக்கப்படுவது நீங்கள் தான்.

நம்முடைய அதிகாரத்துவ வங்கிகள் அவ்வளவு எளிதில் ஏமாற மாட்டார்கள் என நம்புவோம்.

இது போன்ற தனி மனித தகவல்கள் பொதுப்படையாக  தருவது
அடையாள திருட்டு (Identity Theft) மற்றும் அடையாள மோசடி (Identity Fraud)
க்கு வழிவகுக்கும் என்பது அடிப்படை அறிவு அல்லவா. பல அடுக்குகளைக் கொண்ட கணினி குற்றதின்(Cyber Crime)ன் ஒரு வடிவம்தான் இது.

இது போல உங்களுக்கு  தெரியாமல் உங்களை பற்றிய தகவல்கள் இணையத்தில் எங்கெல்லாம் தாராளமாய் சுண்டல் போல கிடைக்கிறதோ? அந்த பெருமாளுக்கே வெளிச்சம்.! :)

இந்தியாவில் மேன்மேலும் இணைய பயன்பாடு அதிகரிக்கும் இந்த காலகட்டத்தில் சமூக எதிரிகளின் அடுத்த குறி இதுவாகவே இருக்கும்.

பொதுவாக, "Better Safe than Sorry" என ஆங்கிலத்தில் ஒரு தொடர்மொழி உண்டு.
எளிதாக சொல்வதென்றால் மக்களே... பாத்து சூதனமா நடந்துகோங்க....

4 comments:

  1. இப்படி வேறு ஒரு கோணம் இருக்கோ!

    ReplyDelete
    Replies
    1. சென்னை பித்தன் தங்கள் வருகைக்கு நன்றி!!.
      ஆமாம், சௌகரியம் என்பது ஒருபுறம் இருந்தாலும்,
      அதன் அபாயத்தை தெரிந்து கொள்வது நல்லது.

      Delete
  2. Its the problem with the company who has designed the software. They haven't done basic testing..

    ReplyDelete
    Replies
    1. Carthickeyan,

      Thanks for your comments. It's not about the company per say. It's the problem with our system. we have not decided what is public vs private information. If that is private, we needs to have a policy and ensure it's shared with right people.

      Delete