Sunday, June 14, 2015

வாழ்த்துக்கள் மாணவிகளே !!!

கடந்த 2014ம் ஆண்டு  டிசம்பரில் தொடங்கப்பட்ட சிறகுகள் அறக்கட்டளை வழியாக எங்களது இரண்டாவது பங்களிப்பை கடந்த வாரம் செய்துள்ளோம்.


கடந்த ஜனவரியில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குளிக்கரை  அரசு உயர்நிலைப் பள்ளிக்கு நூலக விரிவாக்கத்துக்கு நூலக உபகரணங்களும், புத்தகங்களும் வழங்கியது உங்களூக்கு நினைவிருக்கலாம்.

தற்போது புலிவலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியை தேர்வு செய்தோம்.
கிராமபுரத்தில் இருந்து வரும் ஏழ்மையான மற்றும் சாதாரணமான மாணவர்கள் பலர் படிக்கும் பள்ளி இது. சமீபத்தில்தான் உயர்நிலைப் பள்ளியாக  விரிவாக்கமடைந்துள்ளது. இந்தப் பள்ளியை தேர்வு செய்ய மற்றோரு முக்கியக் காரணம், இந்தப் பள்ளி நான் படித்து வளர்ந்த கிராமத்திற்கு அருகில் இருப்பதுதான்.

முன்பே சொன்னது போல் சிறகுகளின் தலையாய  இலக்கு திருவாரூர் வட்டாரத்தில் உள்ள வசதி வாய்ப்பற்ற மற்றும் கிராமப்புற மாணவர்களின் கல்விக்காக உதவி செய்வது. இது நாம் பிறந்து வளர்ந்த சமூகத்திற்கு மீண்டும் கொடுப்பதற்கான மற்றொரு வழியாகவே நான் நினைக்கிறேன். ஆங்கிலத்தில் giving back to society என சொல்லுவார்களே அது போல.

இபோது கடந்த மாதம் வெளியான பன்னிரண்டாம் வகுப்பு வகுப்புத் தேர்வு முடிவுகள பார்க்கலாம். தமிழக அளவில் இந்த ஆண்டும் வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர், 93.4 சதவீத வெற்றி.  திருவாரூர் மாவட்டம் 83.08 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. சதவீகிதத்தில் தமிழத்தை ஒப்பிட்டும் போது திருவாரூர் மாவட்டம் அடைய வேண்டிய இலக்கு இன்னும் அதிகம். கற்றலிலும் கற்பித்தலிலும் சீரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க வேண்டும். உரியவர்கள் இதைச் செய்வார்கள் என  நம்பிக்கை கொள்வோம்.

இப்பள்ளியில் 2014-2015 ஆம் கல்வி ஆண்டில்  பன்னிரண்டாம் வகுப்பு
பொதுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்ற
மாணவ மற்றும் மாணவியருக்கு சிறகுகள் அறக்கட்டளையின் சார்பில்
பரிசுகள்  வழங்கப்பட்டன.

பரிசு விவரங்கள்:

முதல் மதிப்பெண்:
பி. ஐஸ்வர்யா  (P. Aiswaraya)

இரண்டாவது மதிப்பெண்:
என். வர்ஷா (N. Varsha)

மூன்றாவது மதிப்பெண்:
எஸ். அஜித்குமார்( S.Ajithkumar)

முதல் பரிசாக ரூபாய் ஐயாயிரம், இரண்டாம் மற்றும் மூன்றாம்
பரிசாகத் தலா ரூபாய் இரண்டாயிரத்துஐந்நூறும் வழங்கப்பட்டன.

சிறப்பு பரிசாகத் தமிழ்பாடத்தில் முதல்  மதிப்பெண் பெற்ற மாணவி
ஆயிஷா ரெஹெனா ரூபாய் இரண்டாயிரத்துஐந்நூறு பரிசு பெற்றார்.

இந்தச் சிறிய கல்வி உதவித்தொகை அவர்களின் உயர்க்கல்விக்கு எதோனும் ஒரு வகையில் உதவும் என கண்டிப்பாக நான் நம்புகிறேன்.

பள்ளியில் ஜுன் எட்டாம் தேதி அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்
முதன்மைக் கல்வி அலுவலர்  கலந்து கொண்டு  மாணவர்களை
பாராட்டி இந்த பரிசுகளை வழங்கினார். மேலும் பரிசுபெற்றவர்களுக்குச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

அறக்கட்டளை சார்பில் அப்பாவும் (R.சிவசுப்பிரமணியன்), அப்பாவின் நண்பரான திரு. V.G. கிருஷ்ணமூர்த்தியும் கலந்து கொண்டனர்.

பரிசு பெற்ற மாணவர்கள் அனைவரையும்  சிறகுகள் அறக்கட்டளை சார்பில்
மனதார வாழ்த்துகிறோம்.

அடுத்த ஒரு நல்ல நிகழ்வை எதிர்பார்த்து..

நிகழ்வில் இருந்து ஒரு புகைப்படம்


No comments:

Post a Comment