Tuesday, February 23, 2016

ஞயம் பட வரை - வியாபாரம்?

'ஞயம் பட வரை' - எனும் தலைப்பில் 'ப்ரதிலிபி' இணையதளம் நடத்தும் ஓரு கட்டுரைப் போட்டியை பற்றி  வா.மணிகண்டன் மற்றும் முத்துநிலவன் முதலானோர் கடந்த மாதம் தங்கள் தளத்தில் பகிர்ந்திருந்தனர்.  அப்போது தரப்பட்ட தகவல் இதோ.

அ) தலைப்பு : "இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்குக்கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன? அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம்?" - பதில் காண முயல்வோம்.

ஆ) கட்டுரைகள் 1500 வார்த்தைகளுக்கு மேலும், 2500 வார்த்தைகளுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

இ) உங்கள் கட்டுரைகளை Unicode வடிவில், MS- Word Document-ஆக மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கவும். கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

ஈ) பரிசுத்தொகை : முதல் பரிசு – 15000, இரண்டாம் பரிசு – 10000, மூன்றாம் பரிசு – 5000.

உ) கட்டுரைகளை அனுப்பவேண்டிய கடைசி நாள் – 15/01/2016.

இதில் அவர்கள் -(ப்ரதிலிபி) போட்டிக்கான தேர்ந்தேடுக்கும் முறைகளைப் பற்றி எந்த தகவலையும் தரவில்லை. ஆனால் கட்டுரைகளை அவர்களுக்கு சமர்ப்பித்தபின், கடைசி நாளில் எல்லா கட்டுரைகளையும் தங்கள் தளத்தில் வெளியிட்டுவிட்டு, தேர்ந்தெடுக்கும் முறை பற்றி ஓரு ஈமெயிலை அனுப்பியிருந்தனர். அதில் தரப்பட்ட தகவல் இதோ,


கட்டுரைகளை தேர்ந்தெடுக்கும் முறைகள்:
நடுவர் குழு – நடுவர்கள் கட்டுரைகளை படித்து அவற்றை மதிப்பீடு செய்வார்கள்.
வாசகர் விருப்பம்:
  • இங்கு இருக்கக்கூடிய உங்களது கட்டுரையின் சுட்டியை முடிந்த வரையில், உங்கள் நண்பர்களிடத்தில் பகிருங்கள் (பேஸ்புக், ஜிமெயில், மற்றும் இதர வழிகளில்). அப்படிப் பகிரும் நண்பர்களிடத்தில் சுட்டியை சொடுக்கி கட்டுரையின் பக்கத்திற்கு சென்று கட்டுரையை மதிப்பீடு செய்யச் சொல்லுங்கள் (Rating the article).
  • இந்த கட்டுரைகளை எங்கள் முகநூல் பக்கத்தில் பகிர்வோம். அவ்வாறு முகநூல் மூலம் வரும் வாசகர்களாலும், எங்கள் தளத்திற்கு வழக்கமாக வரும் வாசகர்களாலும் இந்தக் கட்டுரைகள் படிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்படும்.
  • எத்தனை வாசகர்கள் உங்கள் கட்டுரையை படிக்கிறார்கள், எவ்வளவு மதிப்பீடு வழங்குகிறார்கள் போன்றவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். முடிவுகள் 28.02.2016 அன்று அறிவிக்கப்படும். அதுவரை வாசகர்கள் உங்கள் மதிப்பீடுகளை வழங்கலாம்.
இதன்படி கட்டுரைகளை எழுதிய ஓருவர் எழுதியதைத் தாண்டி தனது கட்டுரைக்கு மார்கெட்டிங் வேலையையும் செய்ய வேண்டுமாம்.
இப்படி விரிவான  வாசகர் அல்லது நண்பர் வட்டம் உள்ளவர்கள் இது போன்றதோரு கட்டுரைப்போட்டியில் கலந்துதான் வெளிச்சம் பெறவேண்டுமா ? இது போன்றதோரு போட்டியில் கலந்துக் கொள்வதே ஆர்வத்தைத் தாண்டி ஓரு வெளிச்சம் அல்லது கவனம் அல்லது அங்கிகாரம் பெறத்தானே ?
இதை பரிசுகளை தருபவர்கள் தங்கள் தளத்துக்கு விளம்பரம் தேடுகிறார்கள் என விட்டுவிடலாம் தான்.  ஆனால் இந்த மார்கெட்டிங் யுத்தியை முன்பே அறிவித்திருந்தால் என்னைப் போன்றவர்கள் கவனமுடன் இருக்கலாம் தானே ?
இதுவரை, எனது கட்டுரைக்கு எந்தவிதமானதோரு மார்கெட்டிங் அல்லது விளம்பரமும் நான் செய்யவில்லை. அதனால் எனக்கு போட்டிமுடிவுகள் சாதகமாக இருக்கப்போவதில்லை என்பதை ஊகிக்கமுடிகிறது. 
ஆனால், போட்டியில் வெற்றிபெற்றவர்களைத் தாண்டி நான் மிகவும் ஆர்வமாயிருப்பது நடைமுறையாக்கல். அதாவது, கட்டுரையாளர்கள் தந்த வழிமுறைகள் அல்லது உத்திகள் யாரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவை எப்படி, எப்போது, யாரால் முயற்சிக்கப்படும் என்பதே. அவை ஓரு குறுகிய வட்டத்தைத் தாண்டி மிகப்பலரை சென்று சேரவேண்டும் என்பது என் விருப்பம், பார்க்கலாம்..
கட்டுரைப் போட்டிக்கு வந்த எல்லா கட்டுரைகளும் இங்கே
எனது கட்டுரை;

நண்பர்களே !!, கடந்தவாரம் இந்தியாவில் இருந்து திரும்பினேன். அது பற்றி எழுதுவோம்.

No comments:

Post a Comment