Friday, December 9, 2016

எம்.ஜி.ஆர் - ஜெ-1

'எம்ஜிஆரின்  இறுதிஊர்வலத்தை பார்க்க தியேட்டருக்கு போனேன்  ' என இப்போது சொன்னால்  சிலருக்கு  அது சிரிப்பாக இருக்கலாம்.  ஆனால் அது உண்மை.  உங்களில் எத்தனைப் பேருக்கு முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் இறுதிப் பயணம்  நினைவிருக்கும் எனத்
தெரியவில்லை.  அது நடந்தது 1987ல்.   நான் பத்து வயது சிறுவன்.
அப்போதெல்லாம் டிவி என்றால் தூர்தர்ஸன் தான். அவர்கள் வைத்தது தான் சட்டம். மற்றபடி செய்திகளுக்கு பத்திரிக்கைகளை விட்டால் வானோலி மட்டுமே.

அந்த சமயத்தில் வந்த  நடிகர் பாக்கியராஜின் அவசரபோலீஸ் 100 படத்தில் தலைவரின் இறுதிப்பயணத்தை  சிறப்புக் காட்சியாக காண்பித்தார்கள். எம்ஜிஆர் உயிருடன் இருக்கையில் பாக்கியராஜை தனது கலை உலக வாரிசாக அறிவித்திருந்தார் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.
அதுமட்டுமல்லாமல், அப்பா புரட்சித்லைவரின்  தீவிர  ரசிகர். அவரோடு தியேட்டருக்குப் போயிருந்தேன்.  அந்தக் காணோலி 30 நிமிடங்களுக்கு மேல் ஒடியதாக நினைவு. அதில் வரும் ஒர் காட்சி இன்னமும் மனதில் நிற்கிறது. கட்சித்தொண்டர் ஒருவர் சாலையோர கடையில் டீ குடித்துக் கொண்டிருப்பார். அப்போது வானோலியில் புரட்சித்தலைவரின் மறைவை  அறிவிப்பார்கள். முதன்முறையாக தலைவரின் மரணத்தைக் கேட்ட அந்தத்தொண்டரின் அதிர்ச்சியை,   முகமாற்றத்தை,உணர்ச்சிப் பூர்வமான அந்த ரியாக்சனை  அப்படியே  பதிவுசெய்திருப்பார்கள்.

கையில் கண்ணாடிக் குவளையுடன் நின்ற பாசாங்கற்ற அந்த சாமானியனின் முகம் இன்னமும் நெஞ்சில் நிற்கிறது.    அதுபோல
இறுதி ஊர்வலத்தில் கலந்துக் கொண்ட லட்சக்கணக்கான மக்களின் முகத்தில்  உண்மையான சோகம் இருந்தது. பெண்கள் தலையிலும், மார்பிலும் அடித்துக் கொண்டு   கதறி  அழுதனர்.  அந்த அளவுக்கு ஏழை எளிய மக்களின் ஆதர்சன நாயகனாக, ஏன் தெய்வமாக இருந்தார்.


அப்படியானதொரு உணர்ச்சிகரமான காட்சிகளை மறைந்த முதல்வர் ஜெயின் இறுதி ஊர்வலத்திலும் பார்க்கமுடிந்தது. அது பற்றிய எனது எண்ண ஒட்டங்களை வரும் நாட்களில் பதிவு செய்கிறேன்.

6 comments:

  1. True, my brother told me a news that in Madurai lot of men are shaving their head and doing Moksha Deepam for Amma at temples. These people are not ADMK party members, but common people. Out of pure love and respect they are doing this it seems. Jayalalitha seems to have captured millions of mind. RIP

    ReplyDelete
  2. அப்பொதெல்லாம் இது போலான காட்சிகளை நியூஸ் ரீலில்தானே பார்க்கமுடிந்தது,

    ReplyDelete
    Replies
    1. அப்பொழுது நமக்கு தேவையானதை நாம் தேர்வு செய்ய முடிந்தது. இப்பொழுது, எல்லோமே நமது வரவேற்பறையில்..

      Delete
  3. மக்கள் நாயகன்,,,/

    ReplyDelete