Wednesday, May 24, 2017

கவிஞர்.நா.காமராசன்

நூலாசிரியர் ஒரு பிரபலம்,  ஒரு பிரபல கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் என வாசகன் ஒரு புத்தகத்தை  வாங்க, எத்தனையோ பல காரணங்கள் இருக்கலாம்.

ஆனால்,  பின்னட்டையில் இருந்த ஆசிரியரின் குறிப்பு
என் நெஞ்சம் தொட்டதால் ஒரு புத்தகத்தை வாங்கினேன்.

அந்தக் குறிப்பை எழுதியிருந்தவர் கவிஞர்.நா.காமராசன்.
நான் வாங்கிய அந்தப் புத்தகம்  "சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள்".

என் மனம் கவர்ந்த அந்தக் குறிப்பு இதுதான்.

"
இது ஒரு ஊரின் கதையல்ல
ஒட்டுமொத்த இந்தியாவின்
தேசிய இலக்கியம்.

தேர்தல் காலங்களில் மட்டும்
விலாசம் எழுதப்படும் வெற்றுத்தாள்களின்
சரித்திரம்.

அடுத்தவேளைச் சாப்பாட்டிற்கு வழியில்லாத
நேரத்திலும் நளமகாராஜாவின்
கதையைக் கேட்டுக் கண்ணீர் விடுகிற
ஏழை இந்தியாவின் எழுத்தோவியம்.

யாரும் என்னைக் கொண்டாட வேண்டும்
என்பதைக் கருதி இதை நான் எழுதவில்லை
அது எனக்குத் தேவையுமில்லை.

பெளர்ணமி நிலவைக் கூட
சோகத்தோடு ரசிக்கிற
அந்த மக்களின் கதையை
இலக்கியத்தில் பதிவுசெய்யவேண்டும்
என்பதே என் ஆசை.
"
"சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள்" நல்லதொரு தொகுப்பு. கவிதைகள் அனைத்தும் தீக்குச்சிகள்.

புதுக்கவிதை உலகின் முன்னோடியாக விளங்கிய கவிஞர் நா. காமராசன்,
பல திரைப்படப்பாடல்களும் எழுதிய அவர் நேற்று சென்னையில் காலமானார்.

அவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.

2 comments: