Sunday, November 11, 2018

மலையாள மேலாளர் வாக்கு

பல வருடங்களுக்கு முன் சென்னையில் ஒரு மலையாளி எனக்கு மேலாளராக இருந்தார். அப்போதே அவருக்கு வயது 60 இருக்கும். அடுத்தவர்களை சரியாக எடைபோட்டு வேலை வாங்குவதில் கெட்டிக்காரர். அலுவலகத்தில் ஆங்கிலத்திலும், தமிழிழும் சரளமாக பேசினாலும் அடிக்கடி மலையாள பழமொழிகளை அப்படியே மேற்கோள் காட்டுவார்.

ஒருமுறை அறைக்குப் பேச அழைத்திருந்தார். போயிருந்தேன்.
அப்போது புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்த ஒரு பையனின் பெயரைச் சொல்லி, அவனுக்கு என்ன வேலை கொடுக்கலாம் ? என ஆலோசனை கேட்டார். நிலுவையில் இருந்த எல்லா வேலைகளையும் சொன்னேன்.  கடைசியில் இதெல்லாம் சரியா வராது என்றவர், தானாகவே உருப்படாத வேலை ஒன்றைச் சொல்லி அதைக் கொடுக்கலாம் என்றார். "அதை புதிதாக வந்தவரால் செய்யமுடியாதுங்க" என விளக்கியபோது.  "எனக்கு அதுதான் வேணும், அவன் அடிக்கடி கேஃப்டேரியா பக்கம்  தேவையில்லாமல் கடலை போட்டுகிட்டு திரியிரான்" என்றவர் சிரித்தபடி 'பட்டிக்கு முழுவன் தேங்கா கொடுத்தது போல இருக்கனும்' என்றார்.

நான் புரியாமல் தலைசொறிந்த போது, அவர்  சிரித்தபடி "மலையாளத்துல அப்படி ஒரு பழமொழி சொல்லுவாங்கப்பா. இட்ஸ் Like a dog  gets a whole coconut. give something which they cannot use.. அதாம்பா தொந்தரவு தற்ர நாய்க்கு முழுத்தேங்காய கொடு. அது நம்மல விட்டு போய் கொஞ்ச நேரத்துக்கு  அத போட்டு உருட்டி திரிஞ்ட்டு வரட்டும் " என அர்த்தபுஷ்டியோடு சிரித்தார்.

இப்போது சமூக ஊடகங்களில் பேசப்படும் பல விசயங்களைப் பார்க்கும்போது அந்த மலையாள மேனேஜரை தான் நினைத்துக்கொள்கிறேன். :)

4 comments:

  1. நாய் பெற்ற தெங்கம்பழம்

    ReplyDelete
  2. I’m that newbie those days. I wish you told me about the intention of that Manager then. I’m very sorry to see you writing this in blog in public.

    ReplyDelete
  3. The higher you go, more dirtier you become! Your manager is not an exception.

    ReplyDelete