Thursday, May 14, 2020

கவிஞர் வைரமுத்து ஒரு சந்திப்பு

கவிஞர் வைரமுத்து அறிமுகம் தேவையில்லாதவர். தமிழ் இலக்கியத்திலும், திரையுலகிலும்  மிகமுக்கிய ஆளுமைகளில் ஒருவர். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றவர.
தனது தமிழால் திரைப்பாடல்களுக்கு புது இரத்தம் பாய்ச்சியவர்.

என்னை எழுதத் தூண்டிய படைப்புகளைத் தந்த அவரை 15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சென்னையில் 2018-இல் சந்தித்து உரையாடும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.  அதற்கு முன்பு  2003ல் மலேசியாவின் கோலாலம்பூரில் அவரைச் சந்தித்திருக்கிறேன்.


கவிஞருக்காக காத்திருக்கையில்


அவரைச் சந்திக்க ஒரு மாலை பொழுதில் எனது மனைவியுடன் அவரது இல்லத்திற்குச் சென்றிருந்தேன். சந்திப்பின் போது அமெரிக்க வாழ்க்கைப் பற்றியும், என் குடும்பம் பற்றியும் பொதுவாக பேசிக்கொண்டிருந்தோம். பேச்சுனுடே அவருடைய ஒரு கவிதையை("துறக்கமுடியாத துறவு"-  "பெய்யெனப் பெய்யும் மழை")  நான் மேற்கோள் காட்டியபோது அந்தக் கவிதையை எழுதிய தருணங்களை உணர்வுப்பூர்மாக பகிர்ந்துக் கொண்டார்.  கூடவே மணிரத்னம், ஏஆர் ரகுமான் கூட்டணியில் அப்போது வெளிவரத் தயாராக இருந்த "செக்கச் சிவந்த வானம்" படத்தில் பாடலாகும் தனது கவிதை ஒன்றையும் குறிப்பிட்டார்.

விடைபெறும் போது எனது மற்ற புத்தகங்ளோடு வனநாயகன் புதினத்தையும் (நாவல்) பரிசளித்தேன். பதிலுக்கு அவர் கையெழுத்திட்டு தனது இரண்டு புத்தகங்களை எங்களுக்குப் பரிசளித்தார். 
அவர் பரிசளித்த பெய்யெனப் பெய்யும் மழை கவிதைத் தொகுப்பும் இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் கட்டுரைத் தொகுப்பும் எனது வாழ்நாள் சேகரங்கள் என்பதில் துளியும் ஐயமில்லை.




கவிஞரின் அனைத்து படைப்புகளையும் விடாமல் வாசித்த எனக்கு அவரை நெருக்கத்தில் சந்தித்தது உரையாடியது மகிழ்ச்சியான தருணமாக இருந்தது.

2 comments: