Friday, August 27, 2021

சின்னிஜெயந்த் குடும்பத்துக்கு வாழ்த்துகள் !

"காசு பாத்து வளர்ந்த பசங்க படிக்காது. இந்த காலத்து பசங்களுக்கு அப்ப மாதிரி டிரைவே இல்ல.." என்றெல்லாம் யாராவது சொல்வதைக் கேட்கும் நேரத்தில் இது போன்ற சில விசயங்கள் கண்ணில்படுகிறது.

அது, திரைநடிகர் சின்னிஜெயந்தின் மகன் இந்திய ஆட்சித் துறை ( IAS) தேர்வெழுதி தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியராகி இருக்கிறார் என்பதாகும்.




சமுதாயத்துக்குப் பங்களிப்பு தரும்படியான வேலையைத் தேடிக்கொள் என
பெற்றோர்களாகிய நாம் என்னதான் சொன்னாலும், பிள்ளைகளுடைய வளரும் சூழல், நண்பர்கள், பழகும் மனிதர்களின் தாக்கம் என்பது மிக அதிகம்.

அந்த வகையில் , மகனிடம் உயரிய சிந்தனையை விதைத்து அதை வென்றெடுத்த சின்னிஜெயந்த்-தின் குடும்பம் பாராட்டுதலுக்கு உரியது.


அவரைப் போல, சிறுவயதில் பிள்ளைகளின் மனதில் உயரிய சிந்தனைகளை ஆழமாக, ஆத்மார்த்தமாக விதைக்க முயற்சி செய்யும் எல்லா பெற்றோர்களையும் வாழ்த்துவோம் !

படங்கள் நன்றி- ஆனந்தவிகடன்.

No comments:

Post a Comment