Thursday, March 10, 2022

செந்தமிழ் நாடெனும் போதினிலே..

செந்தமிழ் நாடெனும் போதினிலே  பாடலை எழுதியது மகாகவி பாரதியார் என்பது  பலருக்குத் தெரியும்.  ஆனால், அந்தப் பாடல் பிறந்த கதை  நம்மில் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அந்தப் புகழ்பெற்ற பாடல் ஒரு போட்டிக்காக பாரதியால்  எழுதப்பட்டிருக்கிறது.  ஆமாம், அந்த நாளில் மதுரைத் தமிழ்ச் சங்கத்தை முன்னின்று நடத்திக் கொண்டிருந்தவர் பாண்டித்துரைத் தேவர் எனும் பெருமகனார். அவர் ஒரு போட்டி ஒன்றை நடத்தி இருக்கிறார்.




அதன்படி, தமிழ்நாட்டைப் பற்றிச் சுருக்கமாக எல்லோரும் பாடக்கூடிய மெட்டில் பாட்டு எழுதி அனுப்புக. நல்லதற்குப் பரிசு தருகிறோம் என அறிவித்திருக்கிறார்.

அந்தப் போட்டியில் பாரதியைக் கலந்து கொள்ளும்படி பாரதிதாசனும், இன்னும் சிலரும் அவரை வற்புறுத்தி வேண்டியிருக்கிறார்கள். அதற்காக எழுதப்பட்ட பாடல்தான் நாம் இன்று இன்புற்று பாடி மகிழும்செந்தமிழ் நாடெனும் போதினிலே என்ற அந்தப்பாடல்.

ஆதாரம்-பாரதிதாசனோடு 10 ஆண்டுகள்- ஈரோடு தமிழன்பன் (விழிகள் பதிப்பகம்)



























































































































































































ம் என அறிவித்திருக்கிறார்.

அந்தப் போட்டியில் பாரதியைக் கலந்துகொள்ளும்படி பாரதிதாசனும் இன்னும் சிலரும் வற்புறுத்தி ஒரு பாடல் எழுத வேண்டி இருக்கிறார்கள். அப்படி எழுதப்பட்டதுதான் நாம் இன்று பாடி இன்புறும் செந்தமிழ் நாடெனும் போதினிலே பாடல்.

ஆதாரம் - பாரதிதாசனோடு 10ஆண்டுகள் ஈரோடு தமிழன்பன் (விழிகள் பதிப்பகம்)

No comments:

Post a Comment