Saturday, February 26, 2022

அறத்துக்கு அப்பால் - முனைவர் மதிப்பிரியா

அறத்துக்கு அப்பால் நீளும் அத்துமீறல்... நூல் குறித்து முனைவர் மதிப்பிரியா முகநூலில் எழுதியது. நன்றி மதிப்பிரியா!.

//புத்தகம் என்னை ஒரு விருவிறுப்பான திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை தூண்டியது . அமெரிக்காவில் வேலை வாய்ப்பு என்று பணத்தை இழந்தது ... "எவ்வளவு பெரிய ஆளுமைகள்... இவர்கள் கூட இப்படி இருப்பார்களா? " என்று நீங்கள் கூறிய பல சம்பவங்களும் சற்றே அச்சமூட்டியது.

இணையத்தால் இழந்த நிம்மதிகளை சுட்டிக்காட்டியது, கேரள சம்பவமும் பிரியாவின் அமைதியும். முகநூல் முடக்கப்பட்டால் மனதளவில் எவ்வளவு பாதிப்பு என்பதை உணர்த்தியது மருத்துவர் சிவனின் அனுபவம். பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி முதல் அரசியல் கட்சிகளின் ஐ.டி விங் வரை... அட இணையத்துல இதெல்லாம் சாதாரணமப்பா.. என்று ஆசிரியர் அறிவுறுத்துகிறார்.


ஜல்லிக்கட்டு... ஸ்டெர்லைட்.. என்று சில மறக்க இயலா.. சம்பவங்களை சுட்டி காட்டியதில் ஆய்வு நோக்கு. நிறம் குறித்த உங்களின் பார்வை அழகு . இணையத்தால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கூறி அதனை அவர்கள் கையாண்ட விதத்தையும் கூறும் போது ஒரு நல்ல நண்பரின் உடனிருப்பை உணர்ந்தேன். உங்களால் ஹேமா ஜெய், சங்கீதா வெங்கடேஷ், கலைமணி, கோசி ஜோசப், ஆசிரியர் உமா போன்றவர்களைப் பற்றி அறிந்துகொள்ள முடிந்தது.

இணையத்தை நல்ல வழியில் பயன்படுத்தி வெற்றிகண்ட என் அன்பு சகோதரி தமிழ் மரபு அறக்கட்டளை தலைவர் சுபாஷினி அவர்களை குறிப்பிட்டதில் பெருமிதம். அதே இணையத்தால் உங்களின் (ஆரூர் பாஸ்கர்)நட்பும்.. அட்டை படத்திற்கு சிறப்பாக ஓவியம் தீட்டியது டிராட்ஸ்கி மருது என்ற கணிப்பிற்கு உங்கள் (ஆரூர் பாஸ்கர்) புத்தகங்கள் பரிசாக கிடைத்ததையும் சேர்த்து கொள்ளலாம்.

மொத்தத்தில் இணையம் விரித்திருக்கும் மாயவலையில் சிக்காமல் நீந்த கற்றுத் தருகிறது இந்த புத்தகம்.

//

No comments:

Post a Comment