Saturday, July 30, 2022

வெளிநாட்டு பாஸ்போர்ட்(கடவுச்சீட்டு) வைத்திருப்பவர்களுக்கு

இந்தியாவில் வெளிநாட்டு பாஸ்போர்ட்(கடவுச்சீட்டு) வைத்திருப்பவர்களுக்கு விமான நிலையங்களில் தனி வரிசை என்பது தெரிந்ததே. 

சென்னை போன்ற நகரங்களில் முன்பெல்லாம் அந்த வரிசையில் பெரும்பாலும்  ஒன்றிரண்டு வெள்ளை முகங்கள் நின்று கொண்டிருப்பார்கள். 


ஆனால், இந்தமுறை வந்த போது நிலையோ தலைகீழ். வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களின் வரிசை என்பது உள்நாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு குறைவில்லாமல் நீண்டிருந்தது. அவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்தியாவில் பிறந்து, வளர்ந்து  வெளிநாடு சென்று அந்தநாட்டு பாஸ்போர்ட் வாங்கிக் குடியேறியவர்களாக இருந்தார்கள்.(அவருடைய குடும்பத்தினர்)

இந்த நேரத்தில் அமெரிக்கக் குடியுரிமை பெற தங்களுடைய சொந்த நாட்டு குடியுரிமையைத் துறந்தவர்களில் இந்தியர்கள் 2-ஆவது இடத்தில் இருக்கிறார்கள் என்பதை இங்கே நினைவுபடுத்த வேண்டி இருக்கிறது.

1 comment:

  1. //இந்தியர்கள் 2-ஆவது இடத்தில் இருக்கிறார்கள்//

    இது பெருமைப்படும் விடயம் இல்லை.

    ReplyDelete