Sunday, February 12, 2023

முகநூல் - குழப்பம்

யார் அந்த நிலவு ? எனும் தலைப்பில் முகநூலில் நான் எழுதிய பதிவு

முன்பெல்லாம் முகநூலில் ஒரு பதிவிற்கு வரவேற்பு இல்லையென்றால் டக்கென இரண்டு விசயங்களை மட்டும் யோசிப்போம். (1). சொல்ல வந்த விசயம் சரியாக சொல்லப்படவில்லை அல்லது சரியான நேரத்தில் சொல்லவில்லை (2). படிப்பவர்கள் லைக் அல் கமெண்ட் விசயத்தில் தாராளமாக இல்லை என நினைப்போம்.

ஆனால், இதில் மூன்றாவதாக இன்னொரு விசயமும் ஒன்றும் இருக்கிறது. அது முகநூல் அந்தப் பதிவை எத்தனைப் பேருக்கு காட்டுகிறது என்பதைப் பொறுத்தும் இருக்கிறது. ஆமாம், அது திடுமென ஒரு பதிவை 5000 பேருக்கு மேல் காட்டுகிறது. இன்னொன்றை வெறும் 350 பேருக்கு மட்டும் காட்டி மற்றவர்களுக்கு காட்டாமல் நிறுத்தி வைக்கிறது. இந்தச் சூழலில் எழுதுபவனையும், பார்வையாளர்களையும் மட்டும் குற்றம் சொல்லி எந்த பயனும் இல்லை.

No comments:

Post a Comment