Sunday, March 19, 2023

வனநாயகன் குறித்து-27 (நீங்களும் மலேசியாவிற்குச் செல்லவேண்டுமா ?)

ஆரூர் பாஸ்கர் அவர்களின்  *வனநாயகன்- மலேசியநாட்கள்*  நாவலை சமீபத்தில் தான் படித்தேன். அதனைப் பற்றிய எனது எண்ணவோட்டத்தைப் பகிர்கின்றேன். 

இருபத்தெட்டு வயதேயான கல்யாணம் ஆகாத பிழைப்புக்காக காவேரிக்கரையிலிருந்து மலேசியா வந்து தலைநகர் கோலாலம்பூரில் வேலைபார்க்கும்  சுதா எனும் சுதாங்கனே கதாநாயகன்...
..
விறுவிறுப்பாக நேர்த்தியான கதைச் சொல்லலில் நகரும் இந்தக் கதையில் சுதாவின் மலேசிய வாழ்வில் சந்திக்கும் மூன்று இளம் பெண்களில் யாரை மணக்கிறான்? என்பனவற்றிற்கு விடையாக நாவலின் இறுதி அத்தியாயம் இருக்கிறது. மலேசிய நகரத்தை...சுதாவின் அலுவலகத்தை....சுற்றுலாத்தளத்தை... ஆசிரியர் அணு அணுவாக விவரிக்கும் பாங்கு நாம் மலேசியாவை நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி வாசிப்பனுபவத்திற்கு சுவைக்கூட்டுகிறது. 


'உர்ராங்ஊத்தான்' எனும் நமது மூதாதையரான குரங்கு பற்றியும் சுற்றுச்சூழல் பற்றியும் ஆங்காங்கே சொல்லப்பட்டிருக்கிறது. கை உடைந்த நிலையிலும் சாரா போலீஸ் ஆபீசரிடம், என்னோட குறிக்கோள் சிம்பிள் அங்கிள். மார்டின் லூதர் கிங் சொன்னதுதான். *ஓடமுடியலையா? நட. நடக்கவும் முடியலையா? தவழு. இப்படி ஏதோ ஒருவகையில் நாம முன்னேறிக்கொண்டிருக்கனும்னு* சொல்லும்போது சோர்வடையும் மானுடசமூகத்திற்கு நாவலின் மூலம் ஆசிரியர் சொல்ல முயலும் செய்தி புலனாகிறது.

மொத்தத்தில் வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் எளிதாக சம்பாதித்து விடுவதில்லை. பல இடைஞ்சல்களை சந்தித்தே தம் காலத்தை கடத்துகின்றனர் என்பதை சுவராஸ்யமாக ஆசிரியர் ஆரூர்பாஸ்கர் தன் *வனநாயகன் மலேசியநாட்கள்* எனும் விறுவிறுப்பான நாவல் மூலம் காட்சிப்படுத்துகிறார்!  ஆசிரியருக்கு இதயம்நிறை நன்றிகளும், வாழ்த்துகளும்💐💐💐💐💐🙏

நீங்களும் மலேசியாவிற்குச் செல்லவேண்டுமா? ஆரூர்பாஸ்கர் அவர்களின் வனநாயகனை வாங்கிப் படித்துப்பாருங்களேன். 

*நாவல்*      -வனநாயகன்.       மலேசியநாட்கள்
*ஆசிரியர்* -   ஆரூர்பாஸ்கர் 
*பதிப்பகம்*  - கிழக்குப்பதிப்பகம். 
*விலை*   -ரூ. 275.

புத்தகத்தை வாங்க

https://dialforbooks.in/product/9788184936773_/

No comments:

Post a Comment