இங்கே எல்லா அரசியல் தொலைக்காட்சி நிறுவனங்களும் இருபத்துநான்கு மணி நேரமும் தேர்தலை அலசிக் கொண்டிருக்கின்றன.
பொதுவாக எல்லாரும் ஆச்சர்யமாக பேசிக் கொண்டிருக்கும் ஓரு விஷயம் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி.
முழு நேர அரசியலுக்கு வந்த ஓரு வருடத்தில் தேசிய அரசியல் களத்தில் பலவருட அனுபவமுள்ளவர்களை வென்றிருக்கிறார்.
வந்த புதிதில் சொந்த கட்சியினராலும் , எதிர்க் கட்சியினராலும் சுத்தமாக அனுபவமற்றவர், அரசிலுக்கு லாயக்கற்றவர் என கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஆனால், மீடியாக்கள் தந்த எதிர்மறை பிம்பத்தால் இன்று மக்களிடம் எளிதாக சென்று சேர்ந்துவிட்டார்.
இன்று டிரம்ப் குடியரசுக் கட்சியின் உள்கட்சி தேர்தலில் அதிக வாக்குகள் பெற்ற தனி வேட்பாளராக வலம் வருகிறார். அதுபோல இவருக்கு எதிராக போட்டியிட்ட எவரும் இன்று தேர்தல் களத்தில் இல்லை. எனவே குடியரசுக் கட்சி கூடிய விரைவில் இவரை ஜனாதிபதி தேர்தலின் வேட்பாளராக அறிவிக்க உள்ளது.
அதனால், டெமாக்ரட்டிக் கட்சி அல்லது மக்களாட்சிக் கட்சி சார்பாக போட்டியிடும் ஹில்லாரி கிளிண்டனை எதிர்த்து டிரம்ப் போட்டிவது உறுதியாகிவிட்டது.
இந்தச் சூழலில் இரு கட்சிகளுக்கிடையே தேசிய அளவில் அரங்கேறவுள்ள தனி மனிதத்தாக்குதல்கள், பேரங்கள், குற்றச்சாட்டுகள் என மிகப்பெரிய தேர்தல் சூதாட்டத்துக்கு அமேரிக்கா தயாராகிவிட்டது. ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை பொறுத்திருந்து பார்ப்போம்.
நாம் தமிழகத்துக்கு வருவோம். தமிழக ஊடகங்கள் தேவைக்கு அதிகமாக தேர்தலை பற்றி பேசிவிட்டன. "அண்ணன் வந்தால் தமிழ்நாடும் அமேரிக்கா" என ஓரு படத்தில் ரஜினி பாடுவார் அதைத் தாண்டி இரண்டுக்கும் வேறு அரசியல் ஓற்றுமை இருப்பதாகத் தெரியவில்லை. அரசியலில் ஊழல் என்பதை தாண்டி நாம் பயணிக்க வேண்டிய தூரம் மிக அதிகம்.
கடந்த ஐம்பது வருடங்களாக ஆண்டுவரும் திராவிடக் கட்சிகளுக்கு தமிழகம் இந்த வருடதேர்தலில் ஓய்வு தருமா? என்பதை பொறுத்திருந்து பார்போம்.
அப்புறம், தமிழகத்தில் இருப்பவர்கள் மே 16 அன்று தவறாமல் வாக்களியுங்கள். உங்களுக்கு யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லையெனில் நோட்டோவை அழுத்திவிட்டு வரவும்.
நமது குரல் ஜனநாயகத்தில் ஓங்கி ஓலிக்க வாக்களியுங்கள் என நண்பர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!.