Thursday, June 15, 2017

நினைவில் நிற்காதவை (Everything I don't Remember) - நாவல்

திரையில் கதை சொல்ல பல யுத்திகள் இருக்கின்றன. மேலோட்டமாக சொல்வதென்றால், நேர்கோட்டில்  பயணித்தல்  (பெரும்பாலான தமிழ்ப்படங்கள்),  ஃப்ளாஷ்பேக் முறையில் காட்சிகளை முன்னும் பின்னும் நகர்த்துதல் (டைடானிக்) ,பல கிளைக்கதைகளாக பிரிந்து கடைசியில் ஒன்றுசேர கதை சொல்லுதல் (ஆய்த எழுத்து),   ஒரே நிகழ்வை இரு வேறு கோணங்களில் பார்க்கும் ரஷோமோன் வகை (விருமாண்டி)  எனச் சொல்லிக் கொண்டே போகலாம்.

நாவலிலும் (புதினத்திலும்) இதுபோல் கதைசொல்ல  பல சாத்தியங்கள் இருக்கின்றன.  சமீபத்தில் வாசித்த  சுவீடன் நாவலாசிரியர் ஜோன்ஸ் ஹேசன் கேமிரி (Jonas Hassen Khemiri) யின் "எவ்ரிதிங் ஐ டோன்ட் ரிமம்பர்" ( Everything I don't Remember) நாவலை பாயிண்ட் ஆஃப் வியூ (POV) உத்தியில் நகர்த்தியிருக்கிறார்.

கதையின் சாரம் இதுதான்.  கதையின் தொடக்கத்தில் ஒருவன் மர்மான முறையில் மரணமடைகிறான்.  அந்த மரணத்துக்கு பின் அவனுடன் நெருங்கிப்பழகிய காதலி, அவனுடைய நெருக்கமான நண்பர்கள் ஒரிருவர் அவனைப் பற்றிய தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதுபோல் கதை நகர்த்தியிருக்கிறார்.

கதை,  அவர்களின் கண்ணோட்டத்தில்  நகர்ந்தாலும், மற்றவர்களின் அனுபவங்கள் வாயிலாக இறந்தவனைப் பற்றிய
ஒரு பிம்பம் மெள்ள  வாசிப்பவர்களுக்கு துலக்கம் பெறுகிறது.

கதையில் எல்லோருடைய கண்ணோட்டமும் முக்கியத்துவம் தரப்பட்டு, அவர்களுடைய மனநிலை  விவரிக்கப்பட்டு
கதையின் இறுதியில் மரணத்துக்கான மர்மமுடிச்சு
அவிழ்க்கப்படுகிறது.

எழுத்தாளர் ஜோன்ஸ் சுவீடனின் முக்கிய எழுத்தாளராக இருந்தாலும் நாவலின் மூலம் ஆங்கிலம் இல்லையென்பதாலோ என்னவோ, கதையும் கதைமாந்தர்களோ மனத்துக்கு நெருக்கமாக தோன்றவில்லை. வேண்டுமானால்  கதையின் யுத்தியை அறிந்துகொள்ள  வாசிக்கலாம். மற்றபடி பிரமாதமில்லை.

#Everything_Idon't_Remember

1 comment: