Friday, November 6, 2020

திருமதி. மேகலா இராமமூர்த்தி - ஃபிளாரிடா

பேச்சு என்பது ஆற்றல் வாய்ந்த ஒரு கலை. அதுவும் மேடைப் பேச்சு என்பது பேராற்றல் வாய்ந்த ஒன்று. அந்தக் கலையில் வித்தகர் ஒருவர் இங்கே ஃபிளாரிடாவில் இருக்கிறார். அவர் திருமதி. மேகலா இராமமூர்த்தி.

வெளிப்படையாக சொல்தென்றால் பலர்  மேடையில் பேச சந்தர்ப்பம் கிடைத்தால் தான் பேச எடுத்துக் கொண்ட விஷயத்தை மறந்துவிட்டு
தன் பெருமையை எடுத்துக் கூறுவதில் ஈடுபட்டு விடுவார்கள். சிலர்
தான் எதைப்பற்றி பேச போகிறோம் என்ற தெளிவு இல்லாமல் அல்லது யாருக்காக பேசுகிறோம் என்ற சரியான புரிதல் இல்லாமல் பேசுவார்கள்.

 

ஆனால்,  மேகலா இதுபோன்ற குறைபாடுகள் எதுவும் இல்லாமல்  இலக்கிய, ஜனரஞ்சக மேடைகளில் கேட்பவர்கள் கவனம் சிதறாமல் ஆற்றொழுக்காக பேசுவதில் வல்லவர். மிகத் தெளிவான தமிழ் உச்சரிப்புடன் பேசும் மேகலா
தொடர்ந்து பல வானோலி நிகழ்ச்சிகளை அமெரிக்காவில் இருந்து அதுவும் நான் வசிக்கும் ஃபிளாரிடாவில் இருந்து செய்து வருகிறார்.


2020- ஜனவரியில் கூட எனது அழைப்பினை ஏற்று இர்மா நாவலை அறிமுகப்படுத்த ஓர்லாண்டோ தமிழ்ச்சங்க விழாவில் மேடையேறியவர் மிகக்குறுகிய நேரத்தில் படைப்பின் சாரம்சத்தைச்  சுருக்கமாக அதே சமயத்தில் சுவாரசியம் குறையாமல் அழகாக அறிமுகம் செய்து பேசிவிட்டு இறங்கினார்.

மேகலா சிறந்த பேச்சாளர் என்பதை தாண்டி அவர் கவிஞர், எழுத்தாளர், தமிழ் ஆர்வலர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர். அவருடைய கவிஞர் மகுடேசுவரனுடனான சமீபத்திய நேர்காணல் முக்கியமான ஒன்று.

"தமிழர்களிடம் இருப்பது மொழிப் பற்றா இல்லை மொழி வெறியா ? இன்றைய  தமிழக கல்விச் சூழலில் தமிழின்  நிலை என்ன ?"  என்பது போன்ற பல முக்கிய வினாக்களை நிகழ்வில் எழுப்பி இருக்கிறார். வாய்ப்பு கிடைத்தால் கேளுங்கள்.

**யூடியூப்- இணைப்பு**

இர்மா-அறிமுக விழா (4:20-8:50)

Irma

கவிஞர் மகுடேஸ்வன்- நேர்காணல்

மகுடேஸ்வன்


2 comments:

  1. சிறப்பு...

    இணைப்பில் இணைகிறேன்... நன்றி...

    ReplyDelete