Saturday, November 14, 2020

ஜெப்ரடி (jeopardy) புகழ் அலெக்ஸ் ட்ரெபெக்

ஜெப்ரடி (jeopardy) புகழ் அலெக்ஸ் ட்ரெபெக் பற்றி தனியாக எழுதவேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால், அது அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் விதமாக அமைந்துவிட்டது.

"ஜெப்ரடி" நிகழ்ச்சியை அமெரிக்கத் தொலைக்காட்சியில்  தொடர்ச்சியாக 36 ஆண்டுகள் நிகழ்த்திக் கொண்டிருந்த அலெக்ஸ் இரண்டு நாட்களுக்கு முன் மரணமடைந்தார். கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு வயது 80.

தனது இறுதி நாட்கள் வரை வழக்கம்போல் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த அலெக்ஸ் பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றவர். அவர் தொகுத்து வழங்கிய ஜெப்ரடி ஒரு வினோதமான ஒரு வினாடி வினா நிகழ்ச்சி. வழக்கமான கேள்வி கேட்டு பதில் சொல்லும் நிகழ்ச்சியாக இல்லாமல் போட்டியாளர்களுக்கு பதிலைக் கொடுத்து கேள்வியை
எதிர்பார்க்கும் ஒரு நிகழ்ச்சி.  

எளிதில் புரிய வேண்டும் என்பதற்காக ஒரு கேள்வி... "கீதாஞ்சலி எழுதியவர்." என்பது கேள்விக் குறிப்பு என்றால்,  அதற்கான சரியான பதில் "யார் தாகூர் ? (Who is Rabindranath Tagore )" என்பதாகும்.

இப்படி கலை,இலக்கியம், அறிவியல், பொருளாதாரம், பூளோகம்,வரலாறு என எண்ணற்ற பல துறைகளில் பொது அறிவை வளர்க்கும் விதமாக அமைந்த இந்த நிகழ்ச்சியை  ஆர்வத்தோடு பல ஆண்டுகளாக வீட்டில் பார்க்கிறோம். தேவையற்ற வெட்டி பேச்சுகள் இன்றி, அதே சமயத்தில் போட்டியாளர்களைச் சற்று நகைச்சுவையோடு உற்சாகப்படுத்திப் பேசும் அவருடைய ஆளுமை அனைவரும் விரும்பக்கூடிய ஒன்று. அதீத ஆர்வமும், கடும் உழைப்பும் உள்ள ஒருவரால் மட்டுமே இத்தனை ஆயிரம் நிகழ்ச்சிகளைக் கண்டிப்பாக செய்திருக்க முடியும்.

அலெக்சின் இழப்பைக் குடும்ப உறுப்பினர் ஒருவருடைய இழப்பாக நினைகின்ற பல மில்லியன் குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்று. RIP Alex !

1 comment: