Wednesday, April 6, 2022

வனநாயகன் குறித்து-21 (இரட்டைக் குழல் துப்பாக்கிகள்)

வனநாயகன் குறித்து தனது கருத்துக்களைத் தனி மடலில் பகிர்ந்த அகிலா-வுக்கு நன்றி ! 

//சார்,

சமீபத்தில் நான் நக்கீரனின் காடோடி படித்தேன். கிழக்கு மலேசியாவில் நடந்த (நடந்து கொண்டிருக்கிற) காட்டழிப்பில் பங்கேற்ற அல்லது உதவியாக இருந்த ஒருவருடைய மனநிலையைப் பற்றி பேசும் நாவல்

இந்தப் படைப்பின் வழியாக ஆசிரியர் தொல்குடியினரின் வாழ்வையும் அந்த நிலப்பரப்பையும், விலங்குகளையும் குறித்து பதிவுசெய்திருக்கிறார். அது குறித்தான தகவல்களை மேலும் அறிய உரிய ஆங்கில சொற்களும் தரப்பட்டிருந்தால் உதவியாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.

மலேசிய பின்புலத்தில் நீங்கள் எழுதிய வனநாயகன் (மலேசிய நாட்கள்)-னும் இந்தக் காடோடி-யும் சம காலத்தில் மலேசிய நிலப்பரப்பு குறித்தும், சூழல் குறித்தும் எழுதப்பட்ட அழுத்தமான படைப்புகள் என நினைக்கிறேன்.  இரட்டைக் குழல் துப்பாக்கிகள் போல.. வாழ்த்துகள் !

//

No comments:

Post a Comment