Wednesday, April 6, 2022

ஃபேஸ்புக்ல இப்பெல்லாம் எழுறது இல்லையா ?

"ஃபேஸ்புக்ல இப்பெல்லாம் எழுறது இல்லையா. உங்க போஸ்டையே பாக்க முடியலையே..." என நேர்பேச்சில் சிலர் என்னிடம் கேட்கிறார்கள். அப்படி ஒருவருடைய பதிவுகள் தங்கள் ஃபேஸ்புக்-இல் வருவதில்லை எனக் குறைபட்டுக் கொள்பவர்களுக்காக...


இது ஒரு தொழில்நுட்பம் சார்ந்த விசயம். ஆமாம். பேஸ்ஃபுக் அல்காரிதம் என்பதும் அதுதான். நீங்கள் யாருடைய பதிவுகளை அதிகம் படிக்கிறீர்களோ, அவர்களுடைய பதிவுகளே உங்களுடைய பக்கத்தில் தொடர்ந்து  வரும். இங்கே படிப்பது என்றால் அதைச் சும்மா பாரத்துவிட்டு நகர்வது அல்ல. அந்தப் பதிவுகளுடன் நீங்கள் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு கொள்ளவேண்டும்.

அதாவது,  நான் இந்தப் பதிவுகளை விரும்புகிறேன் எனும் விதத்தில் லைக் பொத்தானை அழுத்த வேண்டும். இல்லை மறுமொழி (கமெண்ட்) தரவேண்டும்.

அப்படி எதுவும் செய்யாத பட்சத்தில் அந்தப் பதிவுகளை நீங்கள்| படிக்காமல் தவிர்த்து விட்டு கடந்து போவதாக பேஸ்ஃபுக் (இப்போதைக்கு)  புரிந்து கொள்கிறது. இது அவர்களுடைய அல்காரிதத்தின் ஒரு அம்சம் மட்டுமே. ஏனென்றால், நீங்கள் பொழுதுபோக்கு என்ற இடத்தில் பிரியாணி சமைப்பது எனக் குறிப்பிட்டு இருந்தால்,  உங்களுக்குப் பிரியாணி தொடர்பான தகவல்களைத் தொடர்ந்து   காட்டி உங்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைப்பதும் அவர்களுடைய அல்காரிதத்தின் இன்னொரு அம்சமே. இப்படிப் பல...

அதனால், இனி யாரிடமும் "நீங்க இப்பெல்லாம் போஸ்டே போடறதில்லையா... ?" எனக் கேட்பதற்கு முன் நீங்கள் முதலில் அவருடைய நட்புப் பட்டியலில் இருக்கிறீர்களா? அவர்களுடைய டைம்லைனில் புதிய பதிவுகள் இருக்கின்றனவா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். 

2 comments:

  1. நல்லது... இங்கே(யும்) தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete