Tuesday, April 19, 2022

வனநாயகன் குறித்து-22 (தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன)

அமெரிக்காவில் வசிக்கும் கனிமொழி (Kanimozhi MV)  வனநாயகன்- மலேசிய நாட்கள் குறித்து எழுதிய முகநூல் குறிப்பு (2017)

"தோழர் ஆரூர் பாஸ்கர் அவர்களின் வனநாயகன் நெடுங்கதைப் படித்தேன்...

 பெரும்பாலும் நெடுங்கதைகள் படிக்கும் பழக்கம் இல்லை, கடைசியாக படித்த நெடுங்கதை நினைவில் கூட இல்லை... அதனால் சற்றுத் தயங்கியபடியே தான் படிக்க ஆராம்பித்தேன். ஒரு 25 பக்கங்கள் பொறுமையாக திருப்பிக்கொண்டு வந்தேன், பின் போக போக கதை விறுவிறுப்புடன் சென்றது, மலேசிய கதைக்களம், நாம் மலேசியாவில் இருப்பதுபோன்று காட்சிகள் அழகாக விவரிக்கப்பட்டிருந்தது. 

கதையின் நடுவே ஏராளமான செய்திகள், மலேசியாவின் ஊர்ப்பெயர்கள் பற்றி அங்கே வாழ்க்கை முறை பற்றி தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. 

ஒரே ஒரு வருத்தம் அந்த முக்கிய கதை நாயகனை சைவமாக வைத்திருக்க வேண்டாம் 😄😄



ஒரு நெடுங்கதைக்கு முக்கியத் தேவை படிப்போரை இறுதிவரை கதையை முடித்துவிட வேண்டும் என்ற  உந்து சக்தியை தக்க வைப்பது.. அதை தோழர் சிறப்பாக செய்திருக்கின்றார்

வாழ்த்துகள் தோழர் !! "

புத்தகங்களை வாங்க

https://dialforbooks.in/product/9788184936773_/



No comments:

Post a Comment