Sunday, June 4, 2017

கவிக்கோ அப்துல் ரகுமான்


வானம்பாடி கவிஞர்களின் பிதாமகனாய் விளங்கிய கவிக்கோ அப்துல் ரகுமானின் மறைவு வருத்தமளிக்கிறது.

ஹைகூ, சர்ரியஸிஸக் கவிதைகள் என புதுக்கவிதைக்கு புதிய பரிமாணம் தந்த கவிஞர்களின் கவிஞர் அவர்.
அவருடைய நேயர்விருப்பம், சுட்டுவிரல், பால்வீதி தொகுப்புகள் எனது மனத்துக்கு நெருக்கமானவை. இன்றைய அரசியல்வாதிகளையும் நெருப்பாய் சுடும் "சுட்டுவிரல்" தொகுப்பிலிருந்து உங்களுக்கு சில துளிகள்.

//
(பாருக்குள்ளே நல்ல நாடு)

'வறுமைக் கோட்டை அழிப்போம்' என்று
பேசினேன். அரசாங்கத் சொத்தை
அழிக்கத் தூண்டியதாக அடைத்துப் போட்டுவிட்டார்கள்.
'ஊழல் பேர்வழிகளை நாடு கடத்தவேண்டும்'
என்று எழுதினேன். 'கடத்தல்காரன்' என்று
கைது செய்துவிட்டார்கள்..
(தீக்குச்சிகள்)
..
தினங்களைக் கொண்டாடுவதை
விட்டுவிட்டுக்
குழந்தைகளை எப்போது
கொண்டாடப் போகிறீர்கள்?
..
//
(பால்வீதி)
ஐந்தாண்டுக்கு ஒரு முறை
சுயம்வர மண்டபத்தில்
போலி நளன்களின் கூட்டம்
கையில் மாலையோடு
குருட்டு தமயந்தி.
//

அவருடைய மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

1 comment: