Wednesday, June 21, 2017

வனநாயகன் - வரவேற்பு

வனநாயகன் (மலேசிய நாட்கள்) புதினத்தை இந்த  ஜனவரி சென்னை புத்தக கண்காட்சிக்குதான் கொண்டுவந்தோம். புத்தகம் வெளியான கடந்த 5 மாதங்களுக்குள் இதுவரை சுமார் 15 விமர்சனக் கடிதங்களை வாசகர்கள் அனுப்பியிருக்கிறார்கள்.  சராசரியாக பத்து நாட்களுக்கு ஒருவர் என்ற வகையில் வாசித்து, எழுதி தொடர்ந்து உற்சாகமளித்திருக்கிறார்கள்.

இதன் உச்சமாக, 30 வருடங்களாக இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளர் கடந்தவாரம் உள்பெட்டியில் தொடர்புக்கொண்டு சிலாகித்து பேசியது அபூர்வம்.  அனைவருக்கும் எனது மனம் நிரம்பிய நன்றிகள்.

உண்மையைச் சொல்வதென்றால் வனநாயகனுக்கு வருவது போன்ற விமர்சனங்களும்,பதிவுகளும்,  மின்னஞ்சல்களும் வேறு எந்தப் புத்தகத்திற்காகவும் எனக்கு வந்ததில்லை.

கடந்த டிசம்பரில் வனநாயகனின் இறுதி எடிட்டிங்கை நாங்கள்
செய்து முடிந்தபோது 300 பக்கங்களைத்  தொட்டிருந்தது. இரண்டாவது நாவலை எழுதும் என்னைப் போன்ற இளம் எழுத்தாளனுக்கு அது கொஞ்சம் 'கனம்' தான் என்றாலும் கதைக்குத் தேவைப்பட்டதால் மாற்றங்கள் எதுவும் செய்யாமல் தைரியமாக அப்படியே பதிப்பித்தோம்.

அதுமட்டுமல்லாமல், சிரமம் இல்லாத நடையில் சுவாரசியமான வாசிப்பனுபவத்தை தரும்போது 300 பக்கங்கள் என்பது வாசகர்களுக்கு பெரிய சுமையாக இருக்கப்போவதில்லை என நினைத்தது நடந்திருக்கிறது. நம்மை நம்பி முதலீடு செய்த பதிப்பாளர் தப்பித்துவிடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இந்த நேரத்தில் வனநாயனுக்கு உறுதுணையாக இருந்த
எல்லா நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். குறிப்பாக சிறப்பான அட்டைப்பட வடிவமைப்பு செய்தவர் மற்றும் செம்மையான எடிட்டிங் செய்த எடிட்டர் குழுவுக்கும், நூலை வெளியிட்ட கிழக்கு பதிப்பக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

இறுதியாக ஒரு விசயம். வனநாயகனை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ஒரு அன்பர் விருப்பம் தெரிவித்திருக்கிறார். அதுகுறித்தான விவரங்களை மற்றோரு சமயத்தில் விரிவாக பதிவிடுகிறேன். நன்றி!!

"வனநாயகன்-மலேசிய நாட்கள்" - வாங்க

3 comments:

  1. Replies
    1. வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி!!

      Delete
  2. வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி!!

    ReplyDelete