Thursday, March 7, 2019

அந்த ஆறு நாட்கள் - டர்பனில் இருந்து

தென்ஆப்பிரிக்காவிலிருந்து  இன்று ஒரு வாசகர்  கடிதம் வந்திருக்கிறது. ஆமாம், டர்பனில் இருந்து.  படைப்புகளைக் கிண்டிலில் வெளியிடுவதால் உலகம் முழுவதுமுள்ள வாசகர்களை எளிதாக தொட்டு விட முடிகிறது.
"அந்த ஆறு நாட்கள்" -க்கு வந்த முதல் வாசகர் கடிதத்தை நண்பர்களுடன் பகிர்வது மகிழ்ச்சி. நன்றி பிரபு.

****************
அன்புள்ள ஆரூர் பாஸ்கர் அவர்களுக்கு வணக்கம். 
அந்த ஆறு நாட்கள் – கிண்டிலில் வாசித்து முடித்தப் பின் தங்களுக்கு எழுதுவது. நாவல் எனக்கு பெரிதும் பிடித்திருக்கிறது. மீண்டும் ஒரு
சிறப்பான, சுவராசியமான படைப்புக்கு எனது வாழ்த்துகள்  மற்றும் பாராட்டுக்கள்.

பேராபத்துக்கான பெரும்  அழிவைத் தரக்கூடிய ஹரிக்கேன் இர்மாவிடம்

இருந்து தொடங்கும் இந்த நாவலில் குடும்பத் தலைவனான பரணியின்
மனஓட்டத்தை, அமெரிக்கச் சூழலில்  மிக நேர்த்தியாக நல்ல மொழியில்
வாசகனுக்கு கடத்தியிருக்கிறீர்கள். 

சவால்களே ஒரு நல்ல தலைவனை மக்களுக்கு அடையாளம் காட்டும்

என்பது போல பேராபத்து நெருங்கிவரும்  நெருக்கடியான சமயத்தில்
பரணியின் குடும்பம் அவனை நெருக்கமான  குடும்பத்தலைவனாக
உணர்வது அருமை.  அதுபோல இந்த வாசிப்பின் வழியாக ஒரு குடும்பத் தலைவனாக  நானே என்னை கண்ணாடியில் சில நொடிகளேனும்
உற்றுப் பார்க்கவைத்த படைப்பு இது.

இதுவரை தமிழ் நாவல்கள் பேசாத பல நுட்பமான விஷயத்தைச் சொல்லியிருக்கும் வகையிலும் உங்கள் நாவல்  முக்கியமானதாக படுகிறது. வாழ்த்துகள் !



டர்பனில் இருந்து

பிரபு

****************

அமேசான் இணையதளத்தில்.

USA நண்பர்களுக்கு கிண்டில் முகவரி-
https://www.amazon.com/dp/B07NBDM78S/ref=sr_1_2?ie=UTF8...

இந்திய முகவரி -
https://www.amazon.in/dp/B07NBDM78S/ref=sr_1_1?ie=UTF8...







2 comments:

  1. Replies
    1. தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி நண்பரே !!!

      Delete