Wednesday, March 13, 2019

எத்தனை சுஜாதாக்கள் ?

பிப்ரவரி-27,2019 எழுத்தாளர் சுஜாதா நினைவு நாளன்று முகநூலில் பகிர்ந்தது.

இன்று தமிழில் கவிதை, சிறுகதை, புனைவு எழுதுபவர்களை ஒப்பிடுகையில் தொழில்நுட்பம், விஞ்ஞானம் குறித்து எழுதுபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். நாம்  தமிழில் விஞ்ஞானம் என்றால் எழுத்தாளர் சுஜாதாவோடு நின்றுவிடுகிறோம். 


ஆனால், தொழில்நுட்பம் ராக்கெட் வேகத்தில் முன்னேறிக்கொண்டிருக்கிறது. இன்றோடு  சுஜாதாமறைந்து முழுதாக 11 ஆண்டுகளாகின்றன. இந்தப் பதினோரு ஆண்டுகளில் காலியான சுஜாதாவின் இடத்தை யாரும் முழுமையாக நிரப்பியதாக தெரியவில்லை. சொல்லப்போனால் இன்றைய தொழில்நுட்ப உலகில் நமக்கு பல சுஜாதாக்கள் தேவைப்படுகிறார்கள்.

அந்தவகையில் சுஜாதா கையெடுத்த பணியை இன்று இடையறாது செய்து கொண்டிருப்பவர்களில் ஒருவரைச் சுட்டிக் காட்ட  வேண்டுமானால் கனடா நண்பர் ரவி நடராஜன் அவர்களைத் துணிந்து கைகாட்டலாம்.

தமிழில் தொழில்நுட்பம் ,விஞ்ஞானக் கட்டுரைகள் என இடைவிடாமல் தொடர்ந்து எழுதி வரும் ரவி நடராஜன்,  சென்னை ஐஐடியில் பொறியியல் பட்டம் பெற்றவர், தொழில்முறையில் கணினி மென்பொருள் துறையில் பல்லாண்டுகளாக பணிபுரிகிறார். கனடாவில் வசிக்கும் ரவி, ‘சொல்வனம்’ பத்திரிக்கையில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக தொடர்ந்து 
கட்டுரைகளை எழுதியிருக்கிறார். 

தற்போது இந்தத் தகவல்கள் மேலும் பரந்த வாசகர் வட்டத்தைச்  சென்றடைய வேண்டும் (தமிழ் தெரிந்த, ஆனால் படிக்க முடியாதவர்கள்)  எனும் சீரிய  எண்ணத்துடன்,  
புதிய முயற்சியாக சமீபத்தில் "தமிழ் நுட்பம்" எனும் யூடியூப் சேனல் தொடங்கியிருக்கிறார். வாழ்த்துகள் ரவி சார்!!.


செயற்கை நுண்ணறிவு தொடர்பாக அனைவருக்கும் எளிதில் புரியும் வரையில் அவர்  கடந்த 10 வாரங்களாக வழங்கிய காணொளிகளை நண்பர்கள் உடனடியாக பயன்படுத்திக் கொள்ளலாம். முடிந்தால் தெரிந்தவர்களுக்கும் இதைப் பகிரலாம்.

ரவி நடராஜன் அவர்களின் யூடியூப் சேனல் முகவரி:  https://www.youtube.com/channel/UC-2y8NFP6EdW9etOI6lmOlQ

அவருடைய முகநூல்: https://www.facebook.com/ravi.natarajan.50

1 comment: