Wednesday, March 20, 2019

அன்றைய தமிழக அரசியல்

இருவரும் நேர் எதிர் துருவங்களில் இருந்து எதிர்வினையாற்றினாலும் அன்றைய தமிழக அரசியலில் பண்பாடு இருந்தது என்பதை மறைந்த பத்திரிகையாளர் வலம்புரிஜான் தனது வணக்கம் தொடரில் குறிப்பிட்டு சொல்கிறார்.

இனி வருவது  அவருடைய வரிகள்.

.... எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வலக் காட்சிகள் தொலைக் காட்டப்பட்டபோதெல்லாம் கலைஞர் வாய்விட்டு அழுதிருக்கிறார். இதை அவரே ஒருமுறை என்னிடம் சொன்னார். நானும் மற்றவர்கள் வழியாக இதனை அறிந்தேன்.

2000 ஆண்டுகளுக்கு முந்திய பண்பாட்டைப் பற்றியே தமிழர்கள் பேசிவருகிறார்கள். அவ்வளவு தூரம் ஏன் போகவேண்டும். அறிஞர் அண்ணா மறைந்தபோது அவரது சடலத்துக்கு மரியாதை செலுத்த வந்த பெருந்தலைவர் காமராஜர், டாக்டர் அண்ணாமலையைப் பார்த்து "என்ன டாக்டர், இந்த உயிரைக் காப்பத்த முடிலியேண்ணே.. நீங்க என்ன டாக்டருண்ணே.. "என்று கேட்டார்.

ராஜாஜியின் வாழ்க்கை முடிந்து போனபோது சுடுகாட்டில் அவரது சடலத்தைச் சந்தனக் கட்டைகள் மறைத்து நின்றன. யாருக்காகவோ ராஜாஜியின் மகன் நரசிம்மன் காத்து நிற்கிறார் என்றுதான் நினைத்திருந்தார்கள். ஆனால், சக்கரவண்டியில் வந்தப் பெரியாரைப் பார்த்த பிறகுதான் எல்லோருக்கும் கண்கள் விரிந்தன.

ராஜாஜியின் சடலத்திற்கு அருகில் அமர்ந்து பெரியார் ஒரு குழந்தையைப் போல கேவிக்கேவி அழுதார்....


2 comments:

  1. அரசியலில் நாகரீகமும் இருந்த காலம். நிறைய இழந்து இருக்கிறோம் இப்பொழுது.

    ReplyDelete