Tuesday, April 9, 2019

வனநாயகன் குறித்து-11

வாசகர் திருமதி. ரமணி பிரசாத் (Ramani Prasad) அவர்கள் 
முகநூலில் "வனநாயகன்(மலேசிய நாட்கள்)" குறித்து எழுதிய கதை விமர்சனம். 
நன்றி ரமணி பிரசாத் !!

/////

"வனநாயகன்" நான் நேற்று படித்து பரவசித்த புதினம்.இதனை எழுதியவர் என் முகநூல் நண்பர் திரு ஆரூர் பாஸ்கர்.திருவாரூரில் பிறந்து வளர்ந்தவர்.தற்பொழுது அமெரிக்காவில் ஃபுளாரிடா மாநிலத்தில் சாஃப்ட் வேர் என்சிஜினியராக பணிபுரிகிறார்.நல்ல எழுத்தாளர்,கவிஞர்.தன்தாய்நாட்டின் மீதும் மொழியின் மீதும் தீராக்காதல் கொண்டவர்."சிறகுகள் கல்வி அறக்கட்டளை" என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தையும் நடத்திவரும் பன்முகத்திறன் கொண்டவர்.


புதினத்தின் பெயரே வசீகரம். கதைக்களமும் அப்படியே.மலேசியா..அங்கு வேலைக்குப் போன திறமையுள்ள ஒரு சாஃப்ட் வேர் என்ஜினியர்...
கண்ணுக்குத்தெரியாத மனிதர்களால் தன்னைச் சுற்றி ஒரு வலை பின்னப்படு வதையும் ,தன்னை அந்த நாட்டைவிட்டுத்துரத்த நடக்கும் சதிகளையும் அறிந்து அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் கதை.பயங்கர திரில்லிங்..புத்தகத்தை எடுத்தால் கீழே வைக்க முடிவதில்லை. நன்றி பாஸ்கர் சார்.இப்படிப்பட்ட எழுத்தாளர் என் நண்பர் என்பதில் பெருமையடைகிறேன்

///////

புத்தகத்தை இணையத்தில் கிழக்கு பதிப்பகத்தில் வாங்க:


1 comment: