Thursday, July 20, 2023

கூந்தல் குழந்தை எது ?

 'ஆலங்குயில் கூவும் இரயில்..' பாடலில் கவிஞர் கபிலன் மீசையை "கூந்தல் குழந்தை" என்ற புதிய கோணத்தில் உருவகப்படுத்தி எழுதியிருப்பார் (படம்-பார்த்திபன் கனவு). அது நடந்ததோ 2003-வாக்கில்.


அந்தக் கூந்தல் குழந்தை குறித்து ஒரு சிறுகதை எழுதுவேன். அது பரிசு பெறும் கதையாகும் என்றெல்லாம் சுத்தமாக நினைக்க வில்லை. 'நீட்டலும் மழித்தலும்' இடம் பெற்ற 'அமெரிக்கக் கதைகள்' புத்தகம் இப்போதுதான் கைகளுக்கு வந்து சேர்ந்தது.


அந்த நூலின் முன்னுரையில் ஈழ எழுத்தாளரும் கவிஞருமாகிய தீபச்செல்வன் இப்படி எழுதியிருக்கிறார்.


'நீட்டலும் மழித்தலும் என்ற கதை இயல்பான மொழியில் மீசை தமிழ் சூழலில் கொள்ளும் இடத்தையும் புலம்பெயர் தேசத்தில் மீசை குறித்த பார்வையும் ஒரு தனி மனிதனிடத்திலும் அவன் குடும்ப வாழ்விலும் மீசை ஏற்படுத்தும் அசைவுகளையும் நிலத்திற்கும் புலம்பெயர் நிலத்திற்குமான பெயர்வின் வழியாக ஏற்படும் தத்தளிப்புகளையும் மனக்குழப்பங்களை மிக நேர்த்தியாக பேசுகிறது. அதே நேரம் மிக இயல்பாக அதிர்வை உண்டு பண்ணுகிறது.'

நன்றி-தீபச்செல்வன்



No comments:

Post a Comment