Saturday, July 8, 2023

வனநாயகன் குறித்து-29 (கணினி மென்பொருளாளர்கள் அனைவரும்...)

முகநூல் நண்பரான விஜயன் (Vijayan Usilai) 'வன நாயகன்- மலேசிய நாட்கள்' குறித்து முகநூலில் சமீபத்தில் பகிர்ந்தது. நன்றி விஜயன்!

//

ஆரூர் பாஸ்கரின் புதினமான "வன நாயகன்" அப்படியே கிட்டத்தட்ட நான் ஜப்பான் நாட்டில் வேலை செய்த அனுபவத்தை கருவாகக்கொண்டு எழுதப்பட்டிருந்தது. நம் மனத்திற்குள் நினைப்பதை தெளிவாகவும், மனதில் பதியும்படி சுவையாகவும் எழுதுவது எழுத்தாளர்களுக்குத்தான் முடியும். அதில் ஆரூர் பாஸ்கர் அவர்கள் சூப்பர்.


வேலைபார்த்த இடத்தில் நான் பெற்ற கசப்பான மற்றும் கொடுமையான நிகழ்வுகளை பெற்ற ஒரு கணினி மென்பொருளாளனின் உணர்வுகளை சுவைபட தத்ரூபமாக விளக்கியிருந்தார். அந்த புதினத்தின் அட்டைப்படத்தில் உள்ள உராங்குட்டான் குரங்கின் படத்திற்கான விளக்கத்தினை நீங்கள் புரிந்துகொண்டால் நீங்கள் கில்லாடிதான்.
கணினி மென்பொருளாளர்கள் அனைவரும் கண்டிப்பாக படிக்கவேண்டிய புதினமாகும் "வன நாயகன்".
//

வனநாயகன் – மலேசிய நாட்கள் (நாவல்)
ஆரூர் பாஸ்கர்,

கிழக்கு பதிப்பகம்,
பக்கங்கள் 304, விலை ரூ.275
நூலை இணைய வழியே வாங்க:
வனநாயகன் – மலேசிய நாட்கள்
மின்னூல்
அச்சுநூல்

2 comments: