Thursday, July 18, 2019

புரட்சி எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான் - நேர்காணல்

மறைந்த எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான் குறித்த ஓர் இரங்கல் கட்டுரையை அமெரிக்கத் தமிழ் பேரவையின் ஆண்டு மலருக்காக கேட்டிருந்தார்கள்.  முதலில் தயக்கத்தோடுதான்  ஒத்துக்கொண்டேன். ஒருவரைப் பற்றி இரங்கல் கட்டுரை எழுத அவருடைய எல்லா படைப்புகளையும் முழுமையாக வாசித்திராவிட்டாலும் ஒரிரு படைப்புகளையாவது வாசித்து எழுதுவதே அவருக்குச் செய்யும் குறைந்த பட்ச மரியாதையாக இருக்கும்.

அந்த வகையில் தோப்பில் அவர்களுடைய சாகித்ய அகாதமி விருதுபெற்ற சாய்வு நாற்காலியையும் ஒரு சில சிறுகதைகளையும் முன்பொரு முறை வாசித்திருந்தாலும் கடந்த வாரம் மேலோட்டமாக மறுவாசிப்பு செய்தேன்.  
பிறகு மேலதிக்கத் தகவல்களைத் தேடியபோது  இணையத்தில்  அவருடைய நேர்காணல் ஒன்று கண்ணில் பட்டது. அதில் "தோப்பில் முகமது மீரான்" எனும் தனது பெயரின் பின்னணியைப் இப்படிச் சொல்லியிருக்கிறார். 

'எங்களைப்  (முகமது மீரான்)பெரும்பாலும் திருமணத்துக்குக் கூப்பிடமாட்டாங்க. நாங்க வாழ்ந்த பகுதியில், உயர்நிலை மக்கள் இருந்தாங்க. புராதனமான பள்ளிவாசல் ஒன்று இருக்கும். பொருளாதார அளவில் உயர்ந்திருந்த சிலர், தாங்கதான் அரேபியால இருந்து வந்தவங்க, குடும்பப் பாரம்பரியம் உள்ளவங்க என்கிற எண்ணத்தில், பள்ளிவாசலைச் சுற்றி வாழ்ந்துக்கொண்டு இருந்தாங்க. 

ஊருல ஒரு சுடுகாடு இருக்கு. அதை ஒட்டிதான் எங்க மூதாதையர் குடியிருக்காங்க. அந்த இடத்துக்குப் பேர்தான் தோப்பு. எங்க வீட்டு மதிலுக்குப் பின் பக்கம்தான் சுடுகாடு. தோப்பு என்கிற அந்த இடம் ஊரிலேயே பிற்படுத்தப்பட்டு ரொம்ப மோசமான இடமா கருதப்பட்ட காரணத்தினாலதான் புரட்சியா தோப்பில் முகம்மது மீரான்னு பேர் வைச்சுகிட்டேன்.'

அதுபோல தனது "கடலோர கிராமத்தின் கதை" புத்தகம்
வெளியான சமயத்தில் ஊர்மக்களிடம் வந்த பலத்த எதிர்ப்பு போன்ற பல 
சுவையான தகவல்களை அந்த நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார்.  முழு நேர்காணலை நீங்களே கீழே இணைப்பில் வாசிக்கலாம்.

http://azhiyasudargal.blogspot.com/2010/08/blog-post_16.html

1 comment: