Tuesday, July 2, 2019

வனநாயகன் குறித்து-13 ( வனநாயகன் - கனநாயகன்)

வனநாயகன் நாவல் குறித்து வரும் வாசகர் கடிதங்கள் தொடர்கின்றன..

"வனநாயகன்(மலேசிய நாட்கள்)"  சிங்கப்பூர் வாசகர்  கங்கா பாஸ்கரன்(Ganga Baskaran) அவர்கள் முகநூலில் குறித்து எழுதிய கதை விமர்சனம்.  நன்றி  கங்கா பாஸ்கரன்!!

/////
வனநாயகன் - கணினிப் பொறியாளராக மலேசியாவிற்குச் செல்லும் நாயகன் சந்திக்கும் இடர்களை அழகாக விளக்கும் நாவல். இரு வங்கிகளின் இணைப்பில் மறைமுகமாக நடக்கும் சூழ்ச்சிகளைப் பற்றி அறியாமல் பலியாடாகும் சுதாங்கன் மீண்டும் இந்தியாவிற்குச் செல்லும் முன் எதிர்கொள்ளும் சவால்கள். கணினி உலகில் நடக்கும் கண்ணுக்குத் தெரியா திருட்டுச் சம்பவங்கள், வனநாயகன் என அழைக்கப்படும் உராங் உட்டான் பற்றிய செய்திகள், பத்திரிகைத் துறையின் தர்மம், இடையிடையே நட்பு, காதல் என சற்றே மாறுபட்ட களமிது. 

இந்த நாவலைப் படிக்கும் அனைவரும் நாவலைத் தாண்டி பல புதிய தகவல்களையும் நிச்சயம் அறிந்துகொள்வர். வழக்கமான நாவல்களில் இருந்து வேறுபட்ட தளத்தைக் கண்முன் கொண்டு வரும் எழுத்தாளர் ஆரூர் பாஸ்கர் அவர்களின் மனதுக்கு நெருக்கமான மலேசியாவின் மற்றொரு கோணத்தை நம்மிடம் எழுத்தின்வழிக் காட்டுகிறார். 

நிரந்தர வேலை இல்லையென்றால் காதலி தோழியாவாள்; அன்பு அதிகமிருந்தால் தோழியும் காதலி ஆவாள் எனக் கதையோட்டத்தோடு உண்மை அன்பையும் வாசகர்களுக்கு உணர்த்துகிறார். நட்பிற்காக இறுதி வரை துணை நிற்கும் சிங், சாரா, நண்பனாக இருந்தாலும் துரோகியாகும் உடன் பணிபுரிபவர்கள் எனப் பல கதாபாத்திரங்களையும் கச்சிதமாகப் பொருத்தி நாவலைச் சிறப்பாக நகர்த்திச் செல்கிறார்.


வனநாயகன் - கனநாயகன்.


/////


புத்தகத்தை இணையத்தில் கிழக்கு பதிப்பகத்தில் வாங்க:


1 comment: