Saturday, March 6, 2021

2015- 'யுவ புரஷ்கார்' விருது பெற்ற பருக்கை - மறுவாசிப்பில்

 2015 ஆம் ஆண்டுக்கான  'யுவ புரஷ்கார்' விருது  பெற்ற பருக்கை நாவலை (புதினம்) இன்று மறுவாசிப்பு செய்து முடித்தேன்.  இந்த நூல் குறித்து எழுதிய ஒரு பதிவின் மூழமாகவே எழுத்தாளர் சுரேஷ் கண்ணனை நெருக்கினேன் என்பது வேறு விசயம்.

மறுவாசிப்பு செய்தேன் என்பதால் பருக்கை நாவலின்  இலக்கியச் சுவை கருதி அல்லது  கட்டுமானம், அமைப்பு  அல்லது விறுவிறுப்பான எழுத்து நடை கருதி வாசித்தேன்  என்றெல்லாம் நினைக்கத் தேவையில்லை. உண்மையில் கராராக சொல்வதென்றால் மேலே சொன்ன எதுவும் இல்லாத படைப்பு தான் பருக்கை. ஏதோ தோன்றியது எடுத்து படித்தேன். மற்றபடி சிறப்பான வேறு காரணங்கள் எதுவும் இல்லை.

5 ஆண்டுகளுக்கு முந்தைய முதல் வாசிப்பை விட தற்போதைய மறுவாசிப்பு நாவல் குறித்த வேறுபரிணாமத்தைத் தருகிறது. இப்போது வாசிக்கும் போது நாவலில் அவலச்சுவை மேலோங்கி நிற்பதாக தோன்றுகிறது. குறிப்பாக தற்போதைய  வாசிப்பில்  நூல் இன்றைய இளைஞர்களின் நகர வாழ்க்கை , அங்கு நிலவும் வர்க வேறுபாடுகள், அவர்களிடம்  தங்களுடைய எதிர்காலம் குறித்தான அவநம்பிக்கையைப் மேலோட்டமாக பேசுவதாகவே உணர்கிறேன். ஆனால், விசேச வீடுகளில் உணவு பரிமாறும் கல்லூரி மாணவர்களின் கதை என்ற வகையில் பேசப்படாத கதைக்களம் என்ற வகையில் பாராட்டலாம்.

உண்மையில், தினந்தோறும் தமிழகத்தின் கடைகோடிகளில் இருந்து படிக்க அல்லது பிழைப்புக்கு வழிதேடி சென்னை போன்ற பெருநகரங்களுக்கு எத்தனை பேர் வருகிறார்கள். அதில் எத்தனை பேர் அங்கு நிலவும் புதிய பொருளாதார, பண்பாட்டுச் சூழலில் தங்களைத் தகவமைத்து நிலை பெறுகிறார்கள் ?. எத்தனை பேர் அந்தச் சூழலில் தங்களைப்  பொருத்திக் கொள்ள இயலாமல், அதன் அழுத்தங்கள் தாங்காமல் கசப்போடும் அவமானத்தோடும் வேறுவழியில்லாமல் ஊர் திரும்புகிறார்கள். 

ஊர்ப்புறத்தில் இருந்து வந்து நகர்புறங்களிலும், வெளிநாடுகளிலும் தங்களைத் தகவமைத்துக் கொள்பவர்களை வெற்றி பெற்றவர்களாக கொண்டாடும் இந்தச் சமூகம் மற்றவர்களைத் தோல்வியடைந்தவர் பட்டியலில் தயங்காமல் சேர்த்துவிடுகிறது எனும் நிதர்சனம் கசப்பாக மனதில் படிகிறது.




No comments:

Post a Comment